இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே...
வணக்கம்
எது எல்லோருக்கும் பிடிக்குமோ, அது இந்த வார சிறப்புப் பகுதி ஆகியிருக்கிறது.
பணத்தைப் பொறுத்தவரை மூன்றே விஷயம்தான். சம்பாதிப்பது. சேமிப்பது. செலவு செய்வது. இந்த மூன்று கலைகளையும் குறித்து மூன்று வல்லுநர்கள் (சோம. வள்ளியப்பன், நியாண்டர் செல்வன், மௌலி) இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள். இவை தவிர FIRE குறித்த மிக முக்கியமானதொரு கட்டுரையும் இடம் பெறுகிறது.
இன்றைய தலைமுறை முப்பத்தைந்து வயதில் ‘செட்டில்’ ஆகிவிட வேண்டும் என்று விரும்புகிறது. அதற்குமேல் யாருக்கும் கடமைப்படாமல், தன் விருப்பத்துக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறது. தவறில்லை. ஆனால் திட்டமிட்ட, முறைப்படுத்தப்பட்ட சேமிப்பு மற்றும் முதலீடுகளைச் செய்துகொண்டு கனவை நனவாக்க முடியும். அதற்கான வழிமுறைகளை நிதி ஆலோசகர் சதீஷ்குமார் விவரிக்கிறார்.
சம்பாதிப்பது என்கிறோம். சேமிப்பது என்கிறோம். திட்டமிடல் என்கிறோம். ஆனால் இவை அனைத்துமே அர்த்தமற்றுப் போய்விட்ட இலங்கையின் இன்றைய பொருளாதாரச் சூழலைச் சுட்டி, முன்னொரு காலத்தில் அனுபவிக்க வாய்த்த எளிய, இனிய, மகிழ்ச்சியான வாழ்வை நினைவுகூரும் ரும்மானின் கட்டுரை கண் கலங்க வைக்கும்.
அவ்வண்ணமே பால கணேஷ் எழுதியுள்ள சினிமாப் பணம் குறித்த கட்டுரையும், அறிவனின் பணம் வந்த பாதையும் உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.
சென்ற வாரம் வட கொரியாவின் மீது அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை வைத்தது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கு அத்தேசம் ஆயுத உதவி செய்கிறது என்பது அக்குற்றச்சாட்டு. வட கொரியா என்ன செய்யும் என்று ஆராயப் புகுமுன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, அத்தேசம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது. பன்னெடுங்காலமாக ராணுவம் தவிர வேறு எதிலுமே வளராமல், இருபத்தாறு மில்லியன் மக்களைக் கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் கிம் என்கிற ஒரு தனி நபரின் ‘நிறுவன’மாக உள்ள தேசத்தில் வாழ்க்கை எப்பேர்ப்பட்ட அவலமாக உள்ளது என்பதை விரிவாக அறிமுகப்படுத்துகிறார் ஸஃபார் அஹ்மத்.
இந்தக் கட்டுரையைப் படித்து அதன் உக்கிரத்தைத் தணித்துக்கொள்ள சிவசங்கரியின் ‘ஓம் க்ரீம் ஓடிடியாய நமஹ’ உங்களுக்கு உதவும். நேச்சுரல்ஸ் நிறுவனர்களின் வெற்றிக் கதை, குறிப்பெடுக்க உதவும் செயலிகள் குறித்த வெங்கடரங்கனின் கட்டுரை, கத்தார் உலகக் கோப்பை கால்பந்துத் திருவிழாவுக்குத் தயாராவது பற்றிய நசீமாவின் கட்டுரை என்று இந்த இதழில் வாசிக்கவும் நேசிக்கவும் நிறையவே உள்ளன.
மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இன்னும் சிறந்த கட்டுரைகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
சிறப்புப் பகுதி: பணம்
ஊரும் உலகும்
பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே...
மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம்...
தென்மேற்கு சீனாவின் யுனான் மாகாணத்தின் அழகிய ‘நாகு’ நகரத்திற்கு இது போதாத காலம். பருத்த குவிமாடத்துடனும் (Dome) , நான்கு மினாராக்களுடனும் (Minaret)...
கலவரமூட்டும் சப்வே களேபரங்கள் மே 22 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு தன் பணியாளரின் செல்போனில் இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினார், மேத்தொ எக்ஸ்ப்ரஸ் கஃபே...
37 வயது பாவெல் – கட்டுப்போட்ட ஒரு கை கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு கை இயந்திர துப்பாக்கியைப் பிடித்து ரஷ்ய வீரர்களைச்...
நாலு விஷயம்
கடைக்குபபோனோம், இருப்பதைப் பார்த்து நமக்குப் பிடித்ததைத் தேர்வு செய்து வாங்கி, வீட்டுக்குக் கொண்டு வந்து சிலகாலம் கழித்துப் பிடிக்கவில்லை என்றால்...
தொடரும்
தெய்வத்துக்கே வரும் சோதனை நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில்...
28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947) தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின்...
54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...
53 மிதப்பு டிரைவ்-இன் செல்ஃப் சர்வீசில் காபி வாங்கிக்கொண்டு வந்து, நடைவழியை ஒட்டி இருந்த மூன்று மேஜைகளில் காலியாக இருந்த நடு மேஜையில் உட்கார்ந்தான். மனம் பொங்கி வழிந்துகொண்டு இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியமனுஷ தோரணையுடன் அமைதியாக இருக்க முயன்றான். அது அவன் இயல்பே இல்லை. மனத்தின்...