இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
வணக்கம்
எது எல்லோருக்கும் பிடிக்குமோ, அது இந்த வார சிறப்புப் பகுதி ஆகியிருக்கிறது.
பணத்தைப் பொறுத்தவரை மூன்றே விஷயம்தான். சம்பாதிப்பது. சேமிப்பது. செலவு செய்வது. இந்த மூன்று கலைகளையும் குறித்து மூன்று வல்லுநர்கள் (சோம. வள்ளியப்பன், நியாண்டர் செல்வன், மௌலி) இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள். இவை தவிர FIRE குறித்த மிக முக்கியமானதொரு கட்டுரையும் இடம் பெறுகிறது.
இன்றைய தலைமுறை முப்பத்தைந்து வயதில் ‘செட்டில்’ ஆகிவிட வேண்டும் என்று விரும்புகிறது. அதற்குமேல் யாருக்கும் கடமைப்படாமல், தன் விருப்பத்துக்கேற்ற வாழ்க்கையை அமைத்துக்கொள்ளத் திட்டமிடுகிறது. தவறில்லை. ஆனால் திட்டமிட்ட, முறைப்படுத்தப்பட்ட சேமிப்பு மற்றும் முதலீடுகளைச் செய்துகொண்டு கனவை நனவாக்க முடியும். அதற்கான வழிமுறைகளை நிதி ஆலோசகர் சதீஷ்குமார் விவரிக்கிறார்.
சம்பாதிப்பது என்கிறோம். சேமிப்பது என்கிறோம். திட்டமிடல் என்கிறோம். ஆனால் இவை அனைத்துமே அர்த்தமற்றுப் போய்விட்ட இலங்கையின் இன்றைய பொருளாதாரச் சூழலைச் சுட்டி, முன்னொரு காலத்தில் அனுபவிக்க வாய்த்த எளிய, இனிய, மகிழ்ச்சியான வாழ்வை நினைவுகூரும் ரும்மானின் கட்டுரை கண் கலங்க வைக்கும்.
அவ்வண்ணமே பால கணேஷ் எழுதியுள்ள சினிமாப் பணம் குறித்த கட்டுரையும், அறிவனின் பணம் வந்த பாதையும் உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.
சென்ற வாரம் வட கொரியாவின் மீது அமெரிக்கா ஒரு குற்றச்சாட்டை வைத்தது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கும் ரஷ்யாவுக்கு அத்தேசம் ஆயுத உதவி செய்கிறது என்பது அக்குற்றச்சாட்டு. வட கொரியா என்ன செய்யும் என்று ஆராயப் புகுமுன் நாம் அறிந்துகொள்ள வேண்டியது, அத்தேசம் என்ன வேண்டுமானாலும் செய்யும் என்பது. பன்னெடுங்காலமாக ராணுவம் தவிர வேறு எதிலுமே வளராமல், இருபத்தாறு மில்லியன் மக்களைக் கொத்தடிமைகளாக வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் கிம் என்கிற ஒரு தனி நபரின் ‘நிறுவன’மாக உள்ள தேசத்தில் வாழ்க்கை எப்பேர்ப்பட்ட அவலமாக உள்ளது என்பதை விரிவாக அறிமுகப்படுத்துகிறார் ஸஃபார் அஹ்மத்.
இந்தக் கட்டுரையைப் படித்து அதன் உக்கிரத்தைத் தணித்துக்கொள்ள சிவசங்கரியின் ‘ஓம் க்ரீம் ஓடிடியாய நமஹ’ உங்களுக்கு உதவும். நேச்சுரல்ஸ் நிறுவனர்களின் வெற்றிக் கதை, குறிப்பெடுக்க உதவும் செயலிகள் குறித்த வெங்கடரங்கனின் கட்டுரை, கத்தார் உலகக் கோப்பை கால்பந்துத் திருவிழாவுக்குத் தயாராவது பற்றிய நசீமாவின் கட்டுரை என்று இந்த இதழில் வாசிக்கவும் நேசிக்கவும் நிறையவே உள்ளன.
மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இன்னும் சிறந்த கட்டுரைகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
சிறப்புப் பகுதி: பணம்
ஊரும் உலகும்
கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
நாலு விஷயம்
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...