கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...
வணக்கம்
‘விளக்கு’ விருது பெற்றிருக்கும் இராசேந்திர சோழன் பற்றிய பகுதியே இந்த இதழின் முதன்மைச் சிறப்புப் பகுதியாகிறது. தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான இராசோவின் சிறந்த கதைகளுள் ஒன்றான ‘சாவி’ இந்த இதழில் மீள் பிரசுரமாகிறது. அச்சிறுகதையின் நுட்பங்களை விவரித்துச் சிலாகிக்கும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரை, ஓர் இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று அழகாகக் கற்றுத் தருகிறது. இராசேந்திர சோழனுடன் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பழகியவரும், அவரோடு இணைந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டவருமான மாயவன் தமது நண்பரைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இராசேந்திர சோழன் என்கிற ஆளுமையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள அது உதவும்.
பருவ மழைக்காலம் தொடங்கும் நேரம் இது. இம்முறை மழைக்காலம் எப்படி இருக்கும் என்று ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் விவரிக்கிறார். மழைக் காலத்தில் வாகனங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விளக்கும் பாபுராஜின் கட்டுரை அனைவருக்கும் பயன் தரக் கூடியது. இலங்கை-கண்டியில் தமது இளமைக் காலத்தைக் கழித்த தர்ஷனா கார்த்திகேயன், தனது மழைக்கால நினைவுகளைக் குடையென விரித்திருக்கிறார். இக்கட்டுரை மிக நிச்சயமாக உங்கள் ரசனைக்கு விருந்து.
நாற்பத்தைந்து நாளில் பதவி விலகியிருக்கும் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் விட்டுச் சென்றிருக்கும் செய்தி என்ன? புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் ரிஷி சுனக் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன? ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, மிக நெருக்கடியான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கும் பிரிட்டனின் அரசியல் நிலைமையை அலசி ஆராய்கிறது.
இலங்கைப் பொருளாதாரம் இன்னும், இன்னும் கீழிறங்கிச் சென்றுகொண்டிருக்கும் அவலத்தைத் தோலுரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, திருப்பூர் பின்னலாடைத் தொழில் நலிவுற்றுக்கொண்டிருப்பதன் பின்னணியை விவரிக்கும் அ. பாண்டியராஜனின் கட்டுரை, அமெரிக்க-சீன உறவு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும் சூழலின் பின்னணியை அலசும் பத்மா அர்விந்தின் கட்டுரை - இம்மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடியும். வேறு வேறு களங்கள்தாம்; வேறு வேறு பிரச்னைகள்தாம்; பரிமாணங்களும் தொடர்பற்றவைதாம். ஆயினும் இவற்றின் குவி மையம் ஒன்றே போலத் தோன்றும் வினோதத்தைக் கவனியுங்கள்.
தீபாவளியைக் கொண்டாட நாம் தயாராகிக்கொண்டிருந்த நேரம் இரண்டு தமிழ் எழுத்தாளர்களின் மறைவுச் செய்தி நம்மை வருந்தச் செய்தது. ஈழத்தின் முன்னோடி படைப்பாளுமைகளுள் ஒருவரான தெளிவத்தை ஜோசப் மற்றும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இடதுசாரிப் படைப்பாளியான பா. செயப்பிரகாசம். இருவருக்கும் நமது அஞ்சலி. இந்த இதழில் தெளிவத்தை ஜோசப்பின் ஆளுமையைத் துல்லியமாக எடுத்துக் காட்டும் நர்மியின் கட்டுரை இடம்பெறுகிறது.
மெட்ராஸ் பேப்பர் உங்கள் பத்திரிகை. உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களை சந்தாதாரர்களாக்குங்கள். மேலும் பல சுவாரசியமான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.
விளக்கு விருது: இராசேந்திர சோழன்
சிறப்புப் பகுதி: மழைக்காலம்
நம்மைச் சுற்றி
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக...
அறுசுவை
ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...
தொடரும்
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...
27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...