Home » Home 26-10-22

வணக்கம்

‘விளக்கு’ விருது பெற்றிருக்கும் இராசேந்திர சோழன் பற்றிய பகுதியே இந்த இதழின் முதன்மைச் சிறப்புப் பகுதியாகிறது. தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான இராசோவின் சிறந்த கதைகளுள் ஒன்றான ‘சாவி’ இந்த இதழில் மீள் பிரசுரமாகிறது. அச்சிறுகதையின் நுட்பங்களை விவரித்துச் சிலாகிக்கும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரை, ஓர் இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று அழகாகக் கற்றுத் தருகிறது. இராசேந்திர சோழனுடன் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பழகியவரும், அவரோடு இணைந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டவருமான மாயவன் தமது நண்பரைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இராசேந்திர சோழன் என்கிற ஆளுமையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள அது உதவும்.

பருவ மழைக்காலம் தொடங்கும் நேரம் இது. இம்முறை மழைக்காலம் எப்படி இருக்கும் என்று ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் விவரிக்கிறார். மழைக் காலத்தில் வாகனங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விளக்கும் பாபுராஜின் கட்டுரை அனைவருக்கும் பயன் தரக் கூடியது. இலங்கை-கண்டியில் தமது இளமைக் காலத்தைக் கழித்த தர்ஷனா கார்த்திகேயன், தனது மழைக்கால நினைவுகளைக் குடையென விரித்திருக்கிறார். இக்கட்டுரை மிக நிச்சயமாக உங்கள் ரசனைக்கு விருந்து.

நாற்பத்தைந்து நாளில் பதவி விலகியிருக்கும் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் விட்டுச் சென்றிருக்கும் செய்தி என்ன? புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் ரிஷி சுனக் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன? ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, மிக நெருக்கடியான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கும் பிரிட்டனின் அரசியல் நிலைமையை அலசி ஆராய்கிறது.

இலங்கைப் பொருளாதாரம் இன்னும், இன்னும் கீழிறங்கிச் சென்றுகொண்டிருக்கும் அவலத்தைத் தோலுரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, திருப்பூர் பின்னலாடைத் தொழில் நலிவுற்றுக்கொண்டிருப்பதன் பின்னணியை விவரிக்கும் அ. பாண்டியராஜனின் கட்டுரை, அமெரிக்க-சீன உறவு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும் சூழலின் பின்னணியை அலசும் பத்மா அர்விந்தின் கட்டுரை - இம்மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடியும். வேறு வேறு களங்கள்தாம்; வேறு வேறு பிரச்னைகள்தாம்; பரிமாணங்களும் தொடர்பற்றவைதாம். ஆயினும் இவற்றின் குவி மையம் ஒன்றே போலத் தோன்றும் வினோதத்தைக் கவனியுங்கள்.

தீபாவளியைக் கொண்டாட நாம் தயாராகிக்கொண்டிருந்த நேரம் இரண்டு தமிழ் எழுத்தாளர்களின் மறைவுச் செய்தி நம்மை வருந்தச் செய்தது. ஈழத்தின் முன்னோடி படைப்பாளுமைகளுள் ஒருவரான தெளிவத்தை ஜோசப் மற்றும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இடதுசாரிப் படைப்பாளியான பா. செயப்பிரகாசம். இருவருக்கும் நமது அஞ்சலி. இந்த இதழில் தெளிவத்தை ஜோசப்பின் ஆளுமையைத் துல்லியமாக எடுத்துக் காட்டும் நர்மியின் கட்டுரை இடம்பெறுகிறது.

மெட்ராஸ் பேப்பர் உங்கள் பத்திரிகை. உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களை சந்தாதாரர்களாக்குங்கள். மேலும் பல சுவாரசியமான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • விளக்கு விருது: இராசேந்திர சோழன்

    சிறப்புப் பகுதி: மழைக்காலம்

    நம்மைச் சுற்றி

    ஆளுமை

    ப்ரூஃப் மிஸ்டேக்கில் பிறந்த கடவுள்

    இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப்...

    உலகம்

    ஈரான் நடத்திய ஒன் டே மேட்ச்

    பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற...

    தமிழ்நாடு

    மூன்றாம் கலைஞரும் இரண்டாம் எம்ஜிஆரும்

    அரசியலுக்கு வந்து வெற்றிக்கொடி நாட்டி முதல்வராவாகும்  கனவென்பது, தமிழகத்தில் முன்னணியிலிருக்கும் திரைப்பட நடிகர்கள் அனைவருக்குமே இருக்கிறது. திரளும்...

    உலகம்

    இலக்கை அடைய இரண்டு வழி

    ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க்...

    அறுசுவை

    நம் குரல்

    வாக்களிக்கும் நேரம்

    குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...

  • தொடரும்

    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 1

    1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 1

    பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை. அப்போது கல்லூரி மாணவர்களாக இருந்த நானும் என்னுடைய நண்பர்களும் அந்தப் படத்தைப் பலமுறை விரும்பிப் பார்த்தோம், அதில் இடம்பெற்ற காதல் வழியும்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 1

    1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...

    Read More
    aim தொடரும்

    AIm it! – 1

    ‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 1

    1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு  குடும்பக்  கதை – 100

    100. வந்தேமாதரம் விவாதம் நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும்...

    Read More
    error: Content is protected !!