Home » Home 26-10-22

வணக்கம்

‘விளக்கு’ விருது பெற்றிருக்கும் இராசேந்திர சோழன் பற்றிய பகுதியே இந்த இதழின் முதன்மைச் சிறப்புப் பகுதியாகிறது. தமிழின் முக்கியமான படைப்பு ஆளுமைகளுள் ஒருவரான இராசோவின் சிறந்த கதைகளுள் ஒன்றான ‘சாவி’ இந்த இதழில் மீள் பிரசுரமாகிறது. அச்சிறுகதையின் நுட்பங்களை விவரித்துச் சிலாகிக்கும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரை, ஓர் இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று அழகாகக் கற்றுத் தருகிறது. இராசேந்திர சோழனுடன் ஐம்பதாண்டுகளுக்கும் மேலாகப் பழகியவரும், அவரோடு இணைந்து இயக்கப் பணிகளில் ஈடுபட்டவருமான மாயவன் தமது நண்பரைக் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இராசேந்திர சோழன் என்கிற ஆளுமையைத் துல்லியமாகப் புரிந்துகொள்ள அது உதவும்.

பருவ மழைக்காலம் தொடங்கும் நேரம் இது. இம்முறை மழைக்காலம் எப்படி இருக்கும் என்று ‘வெதர்மேன்’ பிரதீப் ஜான் விவரிக்கிறார். மழைக் காலத்தில் வாகனங்களை எப்படிப் பராமரிக்க வேண்டும் என்று விளக்கும் பாபுராஜின் கட்டுரை அனைவருக்கும் பயன் தரக் கூடியது. இலங்கை-கண்டியில் தமது இளமைக் காலத்தைக் கழித்த தர்ஷனா கார்த்திகேயன், தனது மழைக்கால நினைவுகளைக் குடையென விரித்திருக்கிறார். இக்கட்டுரை மிக நிச்சயமாக உங்கள் ரசனைக்கு விருந்து.

நாற்பத்தைந்து நாளில் பதவி விலகியிருக்கும் பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸ் விட்டுச் சென்றிருக்கும் செய்தி என்ன? புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் ரிஷி சுனக் எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் என்னென்ன? ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, மிக நெருக்கடியான கட்டத்தைக் கடந்துகொண்டிருக்கும் பிரிட்டனின் அரசியல் நிலைமையை அலசி ஆராய்கிறது.

இலங்கைப் பொருளாதாரம் இன்னும், இன்னும் கீழிறங்கிச் சென்றுகொண்டிருக்கும் அவலத்தைத் தோலுரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, திருப்பூர் பின்னலாடைத் தொழில் நலிவுற்றுக்கொண்டிருப்பதன் பின்னணியை விவரிக்கும் அ. பாண்டியராஜனின் கட்டுரை, அமெரிக்க-சீன உறவு நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டிருக்கும் சூழலின் பின்னணியை அலசும் பத்மா அர்விந்தின் கட்டுரை - இம்மூன்றையும் ஒரு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்க முடியும். வேறு வேறு களங்கள்தாம்; வேறு வேறு பிரச்னைகள்தாம்; பரிமாணங்களும் தொடர்பற்றவைதாம். ஆயினும் இவற்றின் குவி மையம் ஒன்றே போலத் தோன்றும் வினோதத்தைக் கவனியுங்கள்.

தீபாவளியைக் கொண்டாட நாம் தயாராகிக்கொண்டிருந்த நேரம் இரண்டு தமிழ் எழுத்தாளர்களின் மறைவுச் செய்தி நம்மை வருந்தச் செய்தது. ஈழத்தின் முன்னோடி படைப்பாளுமைகளுள் ஒருவரான தெளிவத்தை ஜோசப் மற்றும் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க இடதுசாரிப் படைப்பாளியான பா. செயப்பிரகாசம். இருவருக்கும் நமது அஞ்சலி. இந்த இதழில் தெளிவத்தை ஜோசப்பின் ஆளுமையைத் துல்லியமாக எடுத்துக் காட்டும் நர்மியின் கட்டுரை இடம்பெறுகிறது.

மெட்ராஸ் பேப்பர் உங்கள் பத்திரிகை. உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து, அவர்களை சந்தாதாரர்களாக்குங்கள். மேலும் பல சுவாரசியமான கட்டுரைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • விளக்கு விருது: இராசேந்திர சோழன்

    சிறப்புப் பகுதி: மழைக்காலம்

    நம்மைச் சுற்றி

    உலகம்

    ‘சரி. பிரிந்துவிடுவோம்!’

    கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...

    உலகம்

    அப்பன் வீட்டுச் சொத்து: பரவும் பங்களாதேஷ் மாணவர் புரட்சி

    இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...

    உலகம்

    யார் இங்கு மான்ஸ்டர்?

    தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...

    உலகம்

    அமெரிக்கத் தேர்தல்: துணைவர் ஜாதகம்

    அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...

    அறுசுவை

    நம் குரல்

    ஆதரித்தால் அள்ளிக் கொடு!

    இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 15

    அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 15

    முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை -15

    15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 15

    15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -114

    114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 110

    110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...

    Read More
    error: Content is protected !!