கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
வணக்கம்
இந்த இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் விரிவான நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற கையோடு, நகரின் பதினெட்டு நூலகங்களில் ஒரே நாள்-ஒரே நேரம் உலகப் புத்தக தின விழாவைக் கொண்டாடக் காரணமாக இருந்தவர் அவர். பல்லாண்டு காலமாக உறக்கத்தில் இருந்த நூலகத் துறை இப்போது விழித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் உற்சாகமாகச் செயல்படவும் தொடங்கியுள்ளது. இந்தப் பேட்டியில் மனுஷ், நூலக இயக்கம் சார்ந்த தமது திட்டங்களை விரிவாக விளக்கியிருக்கிறார்.
தொழில்நுட்பம் சார்ந்த நான்கு முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கூகுள் ஷீட்ஸின் புதிய வசதிகள் குறித்து வெங்கட் எழுதியிருக்கிறார். சாட் ஜிபிடி குறித்த அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் விதமானதொரு கட்டுரையை ஜெயந்த் சண்முகம் எழுதியிருக்கிறார். ஆழி செந்தில்நாதனின் ஐலேசா குறித்து கோகிலா எழுதியிருக்கிறார். சென்ற வாரம் இணையமெங்கும் பேசுபொருளாக இருந்த ட்விட்டர் ப்ளூ குறித்துக் குப்புசாமி எழுதியிருக்கிறார்.
சூடான் கொதிநிலையைத் தாண்டி அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. ராணுவத்துக்குள் மூண்ட அதிகாரப் போட்டி, உருண்டு திரண்டு இன்று மொத்த தேசத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிறது. சூடானில் என்ன நடக்கிறது என்று விரிவாக விவரிக்கிறார் வினுலா.
சூடானிலாவது ராணுவத்துக்குள் கலவரம். இந்திய மக்கள் தொகை, சீனாவின் எண்ணிக்கையைத் தாண்டி உலக அளவில் முதலிடத்தைத் தொட்டு இங்கே நமக்களிக்கும் கலவரம் கொஞ்சநஞ்சமல்ல. கல்வி, வேலைவாய்ப்புகள் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னேற்றம் இன்னும் துரிதமாக வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது பத்மா அர்விந்தின் கட்டுரை.
வெனிசூலாவில், கல்வி கற்பதற்காக அபாயகரமான கானகத்தின் வழியே எல்லை தாண்டி கொலம்பியாவுக்குள் நுழையும் சிறுவர்கள் குறித்த கோகிலாவின் கட்டுரை, ஆயிரக் கணக்கான தமிழ் திரைப்படங்கள் பாதியில் நின்று போவதன் அடிப்படையை விளக்கும் தயாரிப்பாளர் ராம்ஜியின் பேட்டி, உக்ரைன் ராணுவ வீரர்கள் போர்க்களத்துக்குச் செல்லும் முன்னர் விந்து வங்கியில் தமது உயிரணுக்களைச் சேகரித்து வைத்துவிட்டுச் செல்வது குறித்த கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் ஊன்றி வாசிக்க நிறைய உள்ளன.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
உலகைச் சுற்றி
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
நேர்காணல்: மனுஷ்யபுத்திரன்
எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் மறக்க முடியாத விஷயம் ஒன்று உண்டென்றால் அது செவ்வக வடிவிலான மஞ்சள்நிறப் பெட்டி தான். அந்தத் தகரப்பெட்டியில் உள்ள பொருட்கள் சில. காம்பஸ், கவராயம் எனச் சொல்லப்படும் டிவைடர், கோணங்களை அளக்க உதவும் பிளாஸ்டிக் அளவீடுகள் (கோணமானி) இரண்டு. இது தவிர...
நுட்ப பஜார்
ரீஸ்டார்ட் – டிஜிட்டல் உலகின் சர்வரோக நிவாரணி. கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால், “ஒரு தடவ ரீஸ்டார்ட் செஞ்சு பாருங்களேன்…” என்பதுதான்...
எங்கெங்கு காணினும் சக்தியடா செயற்கை நுண்ணறிவு ஒன்றும் புதிதல்ல. அறுபதாண்டுகளுக்கும் மேலாக ஏ.ஐ துறை சார்ந்த ஆய்வுகள் நடந்த வண்ணமே உள்ளன. ஆனால் கடந்த...
உங்கள் வீட்டுக்கு நீங்கள் வந்தால், வாசல் தாழ்ப்பாளில் பூட்டொன்று தொங்குகிறது. அல்லது அதைவிட மோசமாக வீடே இடிந்துவிடுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள்...
8. புதிய காசோலை, புதிய நிறுவனம் ஆண்ட்ராஸ் வான் பெக்டோல்ஷிம் (Andy Von Bechtolsheim) என்கிற ஆண்டி பெல்டோக்ஷிம் என்பவர் ஸ்டான்ஃபோர்ட்...
நம்மைச் சுற்றி
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
மிகத் தீவிரமான விஷ்ணுபக்தனான இந்திரதுய்மன் என்ற அரசன் காட்டிற்கு வேட்டைக்குச் செல்கிறான். அங்கு வசிக்கும் பழங்குடியினரிடம் பேசும்பொழுது அவர்களது...
பிரஹஸ்தன் என்பவன் ஒரு ராமாயணக் கதாபாத்திரம். ராவண சேனையின் தலைமைப் போர் வீரன். ஒரு வகையில் ராவணனுக்கு மாமன் முறை. ராட்சச வீரர்களிலேயே மிகவும் வலுவான...
‘மேக் இன் இந்தியா, ஃபார் தி வேர்ல்ட்’ திட்டத்தின் கீழ், மாதம் ஐம்பதாயிரம் வேஃபர்களைத் தயாரிக்கப் போகிறது இந்தியா. வெனிலா, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட்...
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...