Home » Home 26-04-23

வணக்கம்

இந்த இதழில் கவிஞர் மனுஷ்யபுத்திரனின் விரிவான நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. சென்னை மாவட்ட நூலக ஆணைக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்ற கையோடு, நகரின் பதினெட்டு நூலகங்களில் ஒரே நாள்-ஒரே நேரம் உலகப் புத்தக தின விழாவைக் கொண்டாடக் காரணமாக இருந்தவர் அவர். பல்லாண்டு காலமாக உறக்கத்தில் இருந்த நூலகத் துறை இப்போது விழித்துக்கொண்டதோடு மட்டுமல்லாமல் உற்சாகமாகச் செயல்படவும் தொடங்கியுள்ளது. இந்தப் பேட்டியில் மனுஷ், நூலக இயக்கம் சார்ந்த தமது திட்டங்களை விரிவாக விளக்கியிருக்கிறார்.

தொழில்நுட்பம் சார்ந்த நான்கு முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கூகுள் ஷீட்ஸின் புதிய வசதிகள் குறித்து வெங்கட் எழுதியிருக்கிறார். சாட் ஜிபிடி குறித்த அனைத்து சந்தேகங்களையும் தீர்க்கும் விதமானதொரு கட்டுரையை ஜெயந்த் சண்முகம் எழுதியிருக்கிறார். ஆழி செந்தில்நாதனின் ஐலேசா குறித்து கோகிலா எழுதியிருக்கிறார். சென்ற வாரம் இணையமெங்கும் பேசுபொருளாக இருந்த ட்விட்டர் ப்ளூ குறித்துக் குப்புசாமி எழுதியிருக்கிறார்.

சூடான் கொதிநிலையைத் தாண்டி அடுத்தக் கட்டத்துக்குச் சென்றுகொண்டிருக்கிறது. ராணுவத்துக்குள் மூண்ட அதிகாரப் போட்டி, உருண்டு திரண்டு இன்று மொத்த தேசத்தையும் நாசம் செய்துகொண்டிருக்கிறது. சூடானில் என்ன நடக்கிறது என்று விரிவாக விவரிக்கிறார் வினுலா.

சூடானிலாவது ராணுவத்துக்குள் கலவரம். இந்திய மக்கள் தொகை, சீனாவின் எண்ணிக்கையைத் தாண்டி உலக அளவில் முதலிடத்தைத் தொட்டு இங்கே நமக்களிக்கும் கலவரம் கொஞ்சநஞ்சமல்ல. கல்வி, வேலைவாய்ப்புகள் தொடங்கி அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முன்னேற்றம் இன்னும் துரிதமாக வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டுகிறது பத்மா அர்விந்தின் கட்டுரை.

வெனிசூலாவில், கல்வி கற்பதற்காக அபாயகரமான கானகத்தின் வழியே எல்லை தாண்டி கொலம்பியாவுக்குள் நுழையும் சிறுவர்கள் குறித்த கோகிலாவின் கட்டுரை, ஆயிரக் கணக்கான தமிழ் திரைப்படங்கள் பாதியில் நின்று போவதன் அடிப்படையை விளக்கும் தயாரிப்பாளர் ராம்ஜியின் பேட்டி, உக்ரைன் ராணுவ வீரர்கள் போர்க்களத்துக்குச் செல்லும் முன்னர் விந்து வங்கியில் தமது உயிரணுக்களைச் சேகரித்து வைத்துவிட்டுச் செல்வது குறித்த கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் ஊன்றி வாசிக்க நிறைய உள்ளன.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • உலகைச் சுற்றி

    உலகம்

    மீண்டும் ஐ.எஸ்: ரஷ்யாவைக் குறி வைத்தது எதனால்?

    “எல்லோரும் மண்டியிடுங்கள். இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என யாரும் மிரட்டவில்லை. துப்பாக்கியை மேலே உயர்த்திச் சுடவுமில்லை. அரங்கிற்குள்...

    உலகம்

    டிரம்ப் விவகாரம்: விடாது கருப்பு

    வீடு, நிறுவனம், மதம் ஆலயம் அல்லது அரசியல் கட்சி எதுவானாலும் சரி…. பொருளாதாரமும் அதைச் சார்ந்த முடிவுகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவோ...

    நேர்காணல்: மனுஷ்யபுத்திரன்

    ஆளுமை

    ‘பாரத் ரத்னா’ கர்ப்பூரி தாக்கூர்: சில குறிப்புகள்

    பூலேஷ்வரி தேவிக்கு உடல் நலம் சரியில்லை. வைத்தியரிடம் அழைத்துச் செல்லவேண்டும். எழுபதுகளின் பாட்னாவில் இன்று இருப்பதைப் போன்ற நவீன வாடகை வண்டி வசதிகள் எதுவும் இருக்கவில்லை. அறிந்தவர்கள் தெரிந்தவர்களின் காரில்தான் செல்லவேண்டும் அல்லது வாடகை ரிக்ஷா. பூலேஷ்வரியின் கணவரிடம், அவருடைய தொழில் நிமித்தம்...

    Read More

    நுட்ப பஜார்

    கணினி

    Refurbished Goods என்னும் கெட்ட சக்தி

    வருடம் 2015 . டெல்லியைச் சேர்ந்த சாகெத் மற்றும் அவனீத் shopclues என்னும் இணைய வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தனர். இருவரும் கல்லூரிக்...

    அறிவியல்-தொழில்நுட்பம்

    ரேன்சம்வேர் என்றொரு பேரிடர்

    கடத்தி வைத்துக்கொண்டு காசு கேட்பது. இது ஆதிகாலம் முதல் நடந்துவரும் ஒரு குற்றம். இதன் டிஜிட்டல் அவதாரம் தான் ரேன்சம்வேர். தனிநபர்கள், நிறுவனங்கள்...

    தமிழ்நாடு

    சுந்தரத் தமிழும் நுட்ப தெய்வமும்

    Pots to Bots என்ற மிகப்பொருத்தமான துணைத்தலைப்பு கொண்டு நிகழ்ந்த கணித்தமிழ் மாநாட்டில் பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களைச் சந்தித்தது, இந்தத்...

    கணினி

    பறவைகள், துறவிகள் மற்றும் டொமைன்கள்

    கூகுள் என்றால் சர்ச் எஞ்ஜின் மட்டுமே அல்ல. இன்னபிற கருவிகள் பலவற்றையும் கூகுள் உருவாக்கியுள்ளது. பெரும்பாலானோர் அறிந்த குரோம் ப்ரவ்சர், யூ-ட்யூப்...

    நம்மைச் சுற்றி

    நம் குரல்

    விரும்பாத ஒன்றும் இல்லாத ஒன்றும்

    பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப்...

    இந்தியா

    தெலுங்கானா தேர்தல் ரவுண்ட் அப்

    கே.சந்திரசேகர ராவ் பதினொரு நாள்கள் உண்ணாவிரதம் இருந்ததும் தெலுங்கானா மாநிலம் உருவானதும் நம் சமகாலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வு. பத்தே வருடத்தில் அது...

    சமூகம்

    பனையும் பயிற்சியும்

    கோடைவந்தால் புதிய புதிய குளிர்பானக் கடைகள் முளைத்துவிடும். ஆனல் உடலுக்கு நன்மை பயப்பவை இயற்கைப் பானங்களே. ஒரு இயற்கைப் பானத்திற்கு முன்னால் ஆயிரம்...

    இந்தியா

    கர்நாடகத் தேர்தல் ரவுண்ட் அப்

    ஸ்ரீ சித்த கங்கா மடம். கர்நாடகத்தின் தும்கூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற இடம். பாறைகளாலும், குன்றுகளாலும் சூழப்பட்ட இராமலிங்க, சிவகங்கே மலைத்...

    இந்தியா

    தேர்தல் பத்திரங்களும் தேசியத் திருவிழாவும்

    தேர்தல் பத்திரங்கள் விவகாரம் பரவலான பேசுபொருளாக இருக்கிறது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் காட்டிய கடுமை மிக முக்கியமான காரணம். இந்த மாபெரும் ஊழல்...

    இந்தியா

    யார் பலியாடு?

    உலகின் மிகப் பெரிய தேர்தல் ‘திருவிழா’ என்றுதான் இந்தியத் தேர்தல்களை மற்ற நாடுகள் குறிப்பிடுகின்றன. இந்தக் கொண்டாட்டத்தில் டீக்கடை முதல் சமூக...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 93

    93. வேட்கை அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான். பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்‌ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம்...

    Read More
    திறக்க முடியாத கோட்டை தொடரும்

    திறக்க முடியாத கோட்டை – 24

    24 – வாரிசு இல்லாத வல்லரசு 20-பிப்-2014. சுதந்திர சதுக்கம், கீவ், உக்ரைன். குறி தவறாமல் சுடும் ஸ்நைப்பர்கள் சதுக்கத்தைச் சுற்றி வளைத்தனர். முக்கியப் போராளிகள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்று நேரத்தில் எண்ணிக்கை இருமடங்கானது. ஆம்புலன்ஸ்களிலேயே பரலோகம் சென்றடைந்த ஆன்மாக்கள் ‘பரலோக...

    Read More
    தொடரும் ப்ரோ

    ப்ரோ – 24

    “நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 97

    97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...

    Read More
    சைபர் க்ரைம் தொடரும்

    கத்தியின்றி ரத்தமின்றி – 18

    நீரின்றி அமையாது உலகு அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள். மடியில் அவனது லேப்டாப். தனது ப்ரசன்டேஷனை மீண்டுமொருமுறை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் திவாகர். எல்லாமும் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. கண்களை...

    Read More
    error: Content is protected !!