கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...
வணக்கம்
ஒரு வருடம் நிறைவடைந்து இன்னொரு வருடம் பிறக்கும்போது நிறைய எதிர்பார்க்கிறோம். திட்டமிடுகிறோம். குழந்தைகள் தமது பிறந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருந்து கொண்டாடிக் களிப்பது போலப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடிக் கடக்கிறோம். ஆனால் மறுநாள் முதல் முந்தைய ஆண்டின் இறுதி தின நிலவரத்தைத்தான் திரும்பவும் ஒரு போர்வையாக எடுத்துப் போர்த்திக்கொண்டு பிழைப்பைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எதுவும் மாறுவதில்லை. அற்புதங்கள் மறைபொருள்களாகவே தொடர்ந்து நீடிக்கின்றன.
இது மிகையல்ல. இந்த இதழில் இடம்பெற்றுள்ள பத்மா அர்விந்தின் முடியாத யுத்தம் (உக்ரைன் போரினைப் பற்றியது), ரும்மானின் தப்பிச் செல்லும் தலைமுறை (இலங்கையின் இளைய தலைமுறை கொத்துக் கொத்தாக வேறு தேசங்களுக்கு இடம் பெயர்வது தொடர்பானது), நஸீமா எழுதியிருக்கும் குரங்கு கையில் ஏகே 47 (பாலஸ்தீனியர்களின் பிரச்னை சார்ந்தது), ஸஃபார் அஹ்மதின் ட்யூனிசியா: மீண்டும் கொதிநிலை (துனிசிய அரசியல் குழப்பம்) என எந்தக் கட்டுரையை வாசித்தாலும் நீங்கள் இதனை உணரலாம். நாம் பிரச்னைகளுடன் வாழப் பழக வேண்டிய தலைமுறை. இதில் உலகப் பிரச்னை, உள்ளூர்ப் பிரச்னை என்ற பாகுபாடே இல்லை. எங்கும் தமிழர்கள் இருப்பதால் எல்லா மண்ணின் சிக்கல்களும் ஏதோ ஒரு வகையில் நம்மைத் தொடாதிருப்பதில்லை.
சென்னை புத்தகக் காட்சி - சர்வதேசப் புத்தகக் காட்சி இரண்டும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றன. பபாசி நடத்தும் சென்னை புத்தகக் காட்சியில் எப்போதும் இருக்கும் இடர்பாடுகள் இம்முறையும் இருந்தன என்பதைத் தவிர புதிய பிரச்னைகள் ஏதுமில்லை. ஆனால் புத்தகக் காட்சிக்கு வந்த ஒவ்வொருவருக்கும் ஓர் ஆதங்கம் இருந்தது. அதே வளாகத்தில்தான் தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்திய சர்வதேசப் புத்தகக் காட்சியும் நடைபெற்றது. அதன் தரமும் உயரிய நோக்கமும் சரியான விளைவுகளும் பபாசியைச் சிறிதளவாவது சிந்திக்க வைக்காதா என்பதே அது. பணத்துக்கோ ஆள் பலத்துக்கோ சற்றும் குறைவற்ற அமைப்பு அது. இருந்தாலும் விடாப்பிடியாக ஒரு மொண்ணைத்தனத்தைத் தனது பிரத்தியேக அடையாளமாக வைத்திருக்கிறது. பொறுத்துத் தான் தீர வேண்டும். இந்த இதழில் புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த சில விஷயங்களைக் குறித்துச் சில பதிப்பாளர்களும் படைப்பாளிகளும் வாசகர்களும் பேசியிருக்கிறார்கள் (நினைவில் வாழும் திருவிழா).
இந்த இதழில் இன்னும் இரண்டு திருவிழாக்களைக் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. மதுரை தெப்பத் திருவிழா நடக்கவிருக்கிறது. பாபுராஜ் அது குறித்து எழுதியிருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தொகுதி மக்களின் மனநிலை குறித்து பிரபு பாலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
முறையான முதலீட்டுத் திட்டம் குறித்த சிவசங்கரியின் கட்டுரை, நர்மியின் பயணக் கட்டுரை, ஐபோனில் இருந்து ஆண்டிராய்டுக்கு மாற நினைப்பவர்களுக்குப் பேருதவி புரியும் விதமாக வெங்கடரங்கன் எழுதியிருக்கும் நுட்பக் கட்டுரை என்று இந்த இதழ் வழக்கத்தினும் சிறிது கனமானதே.
அனைத்துக்கும் சிகரம், ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்பில் ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸாவின் சிறுகதை ‘நதியின் மூன்றாவது கரை’. கதையைப் படித்துவிட்டு விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்கும் புனைவு என்னும் புதிர் கட்டுரையை நிதானமாகப் படியுங்கள். ஓர் இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று அது அணு அணுவாகச் சொல்லித்தரும்.
மேலும் சிறப்பான படைப்புகளுடன் மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களைச் சந்தாதாரர் ஆக்குங்கள். ஏனெனில், இது உங்கள் பத்திரிகை.
ஊருலகம்
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...
அடிக் அஹமதும் அவர் சகோதரர் அஷ்ரஃபும் காவல் துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் சென்று கொண்டிருந்தனர். கஸ்டடியில் இருப்பவர்களுக்குச்...
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக...
சுவை புதிது
ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...
ஹமிதா பானு என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? மல்யுத்த வீராங்கனை என்று சொன்னாலாவது நினைவுக்கு வருகிறாரா? அநேகமாக இராது. இந்த தேசம்...
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...
இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு...
தொடரும்
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...
27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக் கொண்டவை தான். அந்த விண்டோஸில் என்ன புதுமைகள் இந்த ஆண்டு வருகின்றன, எல்லாவற்றிலும் இடம் பெறுகின்ற செயற்கை நுண்ணறிவு இதிலும் வருகிறதா என்பதைத் தெரிந்து...