Home » Home 25-12-2023

வணக்கம்

ஒரு வருடம் நிறைவடைந்து இன்னொரு வருடம் பிறக்கும்போது நிறைய எதிர்பார்க்கிறோம். திட்டமிடுகிறோம். குழந்தைகள் தமது பிறந்த நாளை எதிர்நோக்கிக் காத்திருந்து கொண்டாடிக் களிப்பது போலப் புத்தாண்டு தினத்தைக் கொண்டாடிக் கடக்கிறோம். ஆனால் மறுநாள் முதல் முந்தைய ஆண்டின் இறுதி தின நிலவரத்தைத்தான் திரும்பவும் ஒரு போர்வையாக எடுத்துப் போர்த்திக்கொண்டு பிழைப்பைப் பார்க்க வேண்டியிருக்கிறது. எதுவும் மாறுவதில்லை. அற்புதங்கள் மறைபொருள்களாகவே தொடர்ந்து நீடிக்கின்றன.

இது மிகையல்ல. இந்த இதழில் இடம்பெற்றுள்ள பத்மா அர்விந்தின் முடியாத யுத்தம் (உக்ரைன் போரினைப் பற்றியது), ரும்மானின் தப்பிச் செல்லும் தலைமுறை (இலங்கையின் இளைய தலைமுறை கொத்துக் கொத்தாக வேறு தேசங்களுக்கு இடம் பெயர்வது தொடர்பானது), நஸீமா எழுதியிருக்கும் குரங்கு கையில் ஏகே 47 (பாலஸ்தீனியர்களின் பிரச்னை சார்ந்தது), ஸஃபார் அஹ்மதின் ட்யூனிசியா: மீண்டும் கொதிநிலை (துனிசிய அரசியல் குழப்பம்) என எந்தக் கட்டுரையை வாசித்தாலும் நீங்கள் இதனை உணரலாம். நாம் பிரச்னைகளுடன் வாழப் பழக வேண்டிய தலைமுறை. இதில் உலகப் பிரச்னை, உள்ளூர்ப் பிரச்னை என்ற பாகுபாடே இல்லை. எங்கும் தமிழர்கள் இருப்பதால் எல்லா மண்ணின் சிக்கல்களும் ஏதோ ஒரு வகையில் நம்மைத் தொடாதிருப்பதில்லை.

சென்னை புத்தகக் காட்சி - சர்வதேசப் புத்தகக் காட்சி இரண்டும் சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றன. பபாசி நடத்தும் சென்னை புத்தகக் காட்சியில் எப்போதும் இருக்கும் இடர்பாடுகள் இம்முறையும் இருந்தன என்பதைத் தவிர புதிய பிரச்னைகள் ஏதுமில்லை. ஆனால் புத்தகக் காட்சிக்கு வந்த ஒவ்வொருவருக்கும் ஓர் ஆதங்கம் இருந்தது. அதே வளாகத்தில்தான் தமிழ்நாடு அரசு முன்னின்று நடத்திய சர்வதேசப் புத்தகக் காட்சியும் நடைபெற்றது. அதன் தரமும் உயரிய நோக்கமும் சரியான விளைவுகளும் பபாசியைச் சிறிதளவாவது சிந்திக்க வைக்காதா என்பதே அது. பணத்துக்கோ ஆள் பலத்துக்கோ சற்றும் குறைவற்ற அமைப்பு அது. இருந்தாலும் விடாப்பிடியாக ஒரு மொண்ணைத்தனத்தைத் தனது பிரத்தியேக அடையாளமாக வைத்திருக்கிறது. பொறுத்துத் தான் தீர வேண்டும். இந்த இதழில் புத்தகக் காட்சியில் கவனம் ஈர்த்த சில விஷயங்களைக் குறித்துச் சில பதிப்பாளர்களும் படைப்பாளிகளும் வாசகர்களும் பேசியிருக்கிறார்கள் (நினைவில் வாழும் திருவிழா).

இந்த இதழில் இன்னும் இரண்டு திருவிழாக்களைக் குறித்தும் கட்டுரைகள் உள்ளன. மதுரை தெப்பத் திருவிழா நடக்கவிருக்கிறது. பாபுராஜ் அது குறித்து எழுதியிருக்கிறார். ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தொகுதி மக்களின் மனநிலை குறித்து பிரபு பாலா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

முறையான முதலீட்டுத் திட்டம் குறித்த சிவசங்கரியின் கட்டுரை, நர்மியின் பயணக் கட்டுரை, ஐபோனில் இருந்து ஆண்டிராய்டுக்கு மாற நினைப்பவர்களுக்குப் பேருதவி புரியும் விதமாக வெங்கடரங்கன் எழுதியிருக்கும் நுட்பக் கட்டுரை என்று இந்த இதழ் வழக்கத்தினும் சிறிது கனமானதே.

அனைத்துக்கும் சிகரம், ஆர். சிவகுமார் மொழிபெயர்ப்பில் ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸாவின் சிறுகதை ‘நதியின் மூன்றாவது கரை’. கதையைப் படித்துவிட்டு விமலாதித்த மாமல்லன் எழுதியிருக்கும் புனைவு என்னும் புதிர் கட்டுரையை நிதானமாகப் படியுங்கள். ஓர் இலக்கியப் படைப்பை எப்படி அணுக வேண்டும் என்று அது அணு அணுவாகச் சொல்லித்தரும்.

மேலும் சிறப்பான படைப்புகளுடன் மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம். மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களைச் சந்தாதாரர் ஆக்குங்கள். ஏனெனில், இது உங்கள் பத்திரிகை.

  • ஊருலகம்

    உலகம்

    ‘சரி. பிரிந்துவிடுவோம்!’

    கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...

    உலகம்

    அப்பன் வீட்டுச் சொத்து: பரவும் பங்களாதேஷ் மாணவர் புரட்சி

    இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...

    இந்தியா

    பாஜகவின் அரசியலும் பகவான் ஜகந்நாதரும்

    மிகத் தீவிரமான விஷ்ணுபக்தனான இந்திரதுய்மன் என்ற அரசன் காட்டிற்கு வேட்டைக்குச் செல்கிறான். அங்கு வசிக்கும் பழங்குடியினரிடம் பேசும்பொழுது அவர்களது...

    இந்தியா

    பிரஹஸ்தா எனும் புதிய போர்வீரன்

    பிரஹஸ்தன் என்பவன் ஒரு ராமாயணக் கதாபாத்திரம். ராவண சேனையின் தலைமைப் போர் வீரன். ஒரு வகையில் ராவணனுக்கு மாமன் முறை. ராட்சச வீரர்களிலேயே மிகவும் வலுவான...

    உலகம்

    யார் இங்கு மான்ஸ்டர்?

    தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...

    உலகம்

    அமெரிக்கத் தேர்தல்: துணைவர் ஜாதகம்

    அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...

    சுவை புதிது

    நம் குரல்

    ஆதரித்தால் அள்ளிக் கொடு!

    இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...

    தமிழ்நாடு

    உதயநிதியும் உலக நியதியும்

    உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவாரா?. தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இன்றைக்கு இதுதான் விவாதிக்கப்படுகிறது. விடை மிகவும்...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 15

    அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 15

    முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை -15

    15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 15

    15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -114

    114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 110

    110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...

    Read More
    error: Content is protected !!