சென்ற இதழில் ‘குரங்கு கையில் ஏகே47’ என்கிற கட்டுரையைப் படித்திருப்பீர்கள். இந்த வாரம் நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது. இஸ்ரேல் படைகள் துப்பாக்கியை...
வணக்கம்
தினமும் நம் வீடுகளுக்குப் பால் பாக்கெட் போடுகிறவர்கள், பேப்பர் போடுகிறவர்கள், செயலியில் ஆர்டர் செய்தால் வாசலில் கொண்டு வந்து உணவு தந்துவிட்டுப் போகிறவர்கள் - இவர்களையெல்லாம் என்றைக்காவது நாம் நிறுத்தி முகம் பார்த்திருக்கிறோமா? அவர்களது பெயர் தெரியுமா நமக்கு? ஆனால் நம் பொழுதைப் போக்க உலாவும் ஃபேஸ்புக்குக்கு நம் ஜாதகத்தையே தருகிறோம். நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் பின் தொடர்ந்து, நம் விருப்பங்களைத் தெரிந்துகொண்டு விளம்பரங்கள் மூலம் அது நம்மைச் செலவு செய்யச் சுண்டி இழுக்கிறது. நமது அந்தரங்கத் தகவல்கள் பலவற்றை எடுத்து யார் யாருக்கோ விற்றுக் காசாக்குகிறது. நவீன வாழ்வில் நாம் பெறுவதும் இழப்பதும் பலதரப்பட்டவை. இத்தகைய முரண்களை இனி நம்மால் தவிர்க்கவே முடியாது. இவற்றோடுதான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் எப்படி வாழ்கிறோம் என்று அவ்வப்போது கணப் பொழுது நின்று எண்ணிப் பார்க்கலாம் அல்லவா? இந்த இதழின் முகமற்றவர்கள் பகுதி அதைத்தான் செய்கிறது.
பன்னெடுங்காலமாக இஸ்ரேலின் பிரதமர் என்றால் பெஞ்சமின் நெதன்யாஹுதான். உலகறிந்த இஸ்ரேலியத் தலைவர். இப்போதைய தேர்தலுக்குப் பிறகும் அவரேதான் வந்திருக்கிறார். அதே அடாவடிதான், அதே கெடுபிடிகள்தாம். இம்முறை கூட்டு வைத்துக் குழப்பவிருக்கிறார் என்பதுதான் விசேடம். ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, இஸ்ரேலியப் பொதுத் தேர்தல் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகிறது.
சென்ற இதழின் புத்தகக் காட்சி சிறப்புப் பக்கங்களை வரவேற்றுக் கொண்டாடிய வாசகர்கள் பலர். முன்பே அறிவித்தபடி புத்தகக் காட்சி சிறப்புக் கட்டுரைகள் ஜனவரி வரை அடிக்கடி வரும். இந்த இதழில் எதிர் வெளியீடு அனுஷின் சிறப்புப் பேட்டியும் கொழும்பு புத்தகக் காட்சி குறித்த ரும்மானின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டுமே சர்வதேசப் புத்தகச் சந்தை குறித்த தெளிவான பார்வையைத் தரவல்லவை.
தியாகராஜனின் போர்ட்டோ ரிக்கோ பயணக் கட்டுரை, நஸீமா எழுதியுள்ள எகிப்தின் அதி நூதனக் குற்றவாளி ஒருவரைப் பற்றிய கட்டுரை, மூன்றாம் உலக யுத்தமாக மாற இருந்து மயிரிழையில் தப்பித்த ரஷ்ய உக்ரைன் போரின் ஒரு குறிப்பிட்ட கட்டம் குறித்த ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, சீனாவிலும் வட கொரியாவிலும் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கும் கோவிட் 19 குறித்த பூவராகனின் எச்சரிக்கைக் கட்டுரை என்று இந்த இதழெங்கும் நீங்கள் கருத்தூன்றி வாசிக்கப் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.
வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மெட்ராஸ் பேப்பர் உங்கள் பத்திரிகை. உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள். புதிய தொடர்கள் குறித்த அறிவிப்பு இந்த இதழில் வெளியாகியுள்ளது. அடுத்த இதழிலிருந்து அவற்றை வாசித்து ரசிக்கத் தொடங்கலாம்.
திசை எட்டும்
இலங்கையில் ஜனநாயகமும், ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையும் எந்தளவுக்குச் சிதைந்து போயிருக்கிறதென்றால் ‘மார்ச் 9ம் தேதி உள்ளூராட்சித்...
தினமும் 20 சிகரெட்டுக்களுக்கு மேல் புகை பிடிப்பதும், 5 பாட்டில்களுக்கு மேல் மது அருந்துவதும் உடலுக்குத் தீமை விளைவிக்கும் என்று தெரிந்திருந்தும்...
முகமற்ற மனிதர்கள்
கதம்பம்
விதியானது சிலரின் வாழ்க்கையில் எக்கச்சக்கமாகக் கபடி விளையாடி விடுகிறது. அப்படியானதொரு விளையாட்டில்தான் இக ஓர் எழுத்தாளனாய் உருவெடுத்தான். எந்தவொரு...
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான கௌதம் அதானி தலைமையில் இயங்கும் அதானி குழுமம், பங்குச் சந்தையில் திருகு வேலை செய்ததாகவும், கணக்கு மோசடியில்...
நாம் எல்லோருக்கும் கூகுள் என்றவுடன் அவர்களின் தேடுபொறி, யூ-ட்யூப், ஜிமெயில், கூகிள் போட்டோஸ் இவைதான் நினைவில் வரும், இவற்றைத் தாண்டி அவர்களின் சில...
அவர் அனுமதியின்றி அவர் பெயரை உபயோகிப்பது என்பதும், அவர் சொன்னதாகப் பல பொய் தகவல்களைப் பரப்புவதும் புதிய விஷயங்களா என்ன? இதெல்லாம் தலைமுறை தலைமுறையாக...
தொடரும்
கண்ணின் அருமை கண்ணின் அருமை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஐம்புலன்களில் மிக முக்கியமான புலன் இது. குறிப்பாகச் சொல்லப்போனால் நமது சுற்றுப்புறத்திலிருந்து வரும் தகவல்களில் கிட்டத்தட்ட 80 % தகவல்கள் கண்கள் மூலமாகத்தான் நமது மூளையை வந்தடைகின்றன. நமது மூளையில் பின்புறத்தில் விஷூவல் கார்டெக்ஸ் எனப்படும்...
10 – வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (22.11.1839 – 15.7.1897 ) அறிமுகம் ‘தமிழ்க் கடவுள்’ என்று சொல்லப்படுபவர் முருகவேள். தமிழில் முருக பக்த இலக்கியமாகவும், செறிவு மிக்க இலக்கியமாகவும் விளங்கிய ஒரு நூல் என்றால் உடனே நமக்குச் சட்டென்று நினைவுக்கு வரும் ஒரு பெயர் உண்டு. அது திருப்புகழ்...