Home » Home 23-11-2022

வணக்கம்

தினமும் நம் வீடுகளுக்குப் பால் பாக்கெட் போடுகிறவர்கள், பேப்பர் போடுகிறவர்கள், செயலியில் ஆர்டர் செய்தால் வாசலில் கொண்டு வந்து உணவு தந்துவிட்டுப் போகிறவர்கள் - இவர்களையெல்லாம் என்றைக்காவது நாம் நிறுத்தி முகம் பார்த்திருக்கிறோமா? அவர்களது பெயர் தெரியுமா நமக்கு? ஆனால் நம் பொழுதைப் போக்க உலாவும் ஃபேஸ்புக்குக்கு நம் ஜாதகத்தையே தருகிறோம். நமது ஒவ்வொரு நடவடிக்கையையும் பின் தொடர்ந்து, நம் விருப்பங்களைத் தெரிந்துகொண்டு விளம்பரங்கள் மூலம் அது நம்மைச் செலவு செய்யச் சுண்டி இழுக்கிறது. நமது அந்தரங்கத் தகவல்கள் பலவற்றை எடுத்து யார் யாருக்கோ விற்றுக் காசாக்குகிறது. நவீன வாழ்வில் நாம் பெறுவதும் இழப்பதும் பலதரப்பட்டவை. இத்தகைய முரண்களை இனி நம்மால் தவிர்க்கவே முடியாது. இவற்றோடுதான் வாழ்ந்தாக வேண்டும். ஆனால் எப்படி வாழ்கிறோம் என்று அவ்வப்போது கணப் பொழுது நின்று எண்ணிப் பார்க்கலாம் அல்லவா? இந்த இதழின் முகமற்றவர்கள் பகுதி அதைத்தான் செய்கிறது.

பன்னெடுங்காலமாக இஸ்ரேலின் பிரதமர் என்றால் பெஞ்சமின் நெதன்யாஹுதான். உலகறிந்த இஸ்ரேலியத் தலைவர். இப்போதைய தேர்தலுக்குப் பிறகும் அவரேதான் வந்திருக்கிறார். அதே அடாவடிதான், அதே கெடுபிடிகள்தாம். இம்முறை கூட்டு வைத்துக் குழப்பவிருக்கிறார் என்பதுதான் விசேடம். ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, இஸ்ரேலியப் பொதுத் தேர்தல் காட்சிகளைக் கண்முன் நிறுத்துகிறது.

சென்ற இதழின் புத்தகக் காட்சி சிறப்புப் பக்கங்களை வரவேற்றுக் கொண்டாடிய வாசகர்கள் பலர். முன்பே அறிவித்தபடி புத்தகக் காட்சி சிறப்புக் கட்டுரைகள் ஜனவரி வரை அடிக்கடி வரும். இந்த இதழில் எதிர் வெளியீடு அனுஷின் சிறப்புப் பேட்டியும் கொழும்பு புத்தகக் காட்சி குறித்த ரும்மானின் கட்டுரையும் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டுமே சர்வதேசப் புத்தகச் சந்தை குறித்த தெளிவான பார்வையைத் தரவல்லவை.

தியாகராஜனின் போர்ட்டோ ரிக்கோ பயணக் கட்டுரை, நஸீமா எழுதியுள்ள எகிப்தின் அதி நூதனக் குற்றவாளி ஒருவரைப் பற்றிய கட்டுரை, மூன்றாம் உலக யுத்தமாக மாற இருந்து மயிரிழையில் தப்பித்த ரஷ்ய உக்ரைன் போரின் ஒரு குறிப்பிட்ட கட்டம் குறித்த ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை, சீனாவிலும் வட கொரியாவிலும் மீண்டும் பரவத் தொடங்கியிருக்கும் கோவிட் 19 குறித்த பூவராகனின் எச்சரிக்கைக் கட்டுரை என்று இந்த இதழெங்கும் நீங்கள் கருத்தூன்றி வாசிக்கப் பல முக்கியமான கட்டுரைகள் உள்ளன.

வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மெட்ராஸ் பேப்பர் உங்கள் பத்திரிகை. உங்களுக்கு இது பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள். புதிய தொடர்கள் குறித்த அறிவிப்பு இந்த இதழில் வெளியாகியுள்ளது. அடுத்த இதழிலிருந்து அவற்றை வாசித்து ரசிக்கத் தொடங்கலாம்.

திசை எட்டும்

உலகம்

மீண்டும் மதவாதம்: இனி மீளுமா இலங்கை?

கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...

உலகம்

திருப்பி அடிக்கும் வழி

கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...

உலகம்

மக்களே, கடன் கொடுங்கள்!

‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...

முகமற்ற மனிதர்கள்

கதம்பம்

நகைச்சுவை

மேனேஜரைக் காதலிக்காதே!

உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...

நம் குரல்

செங்கோல் அரசியல்

ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...

நகைச்சுவை

நான் யார்? நான் யார்? நீ யார்?

முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப்...

நுட்பம்

ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...

தொடரும்

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 52

52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...

Read More
கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் – 27

மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...

Read More
error: Content is protected !!