Home » home-22-002-23

வணக்கம்

தை மாதம்தான் தொடக்கம். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி வரை மாநிலமெங்கும் திருவிழாக்கள்தாம். பொதுவாக நாம் திருவிழாக்களை மதத்துடனும் வழிபாட்டுடனும் இணைப்பவர்களானாலும் அடிப்படையில் அவை நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டவைதாம். விளைச்சல்-அறுவடைக் காலத்தைத் தொடர்ந்துதான் திருவிழாக்கள் வருகின்றன. பெரிதாக அவநம்பிக்கைகள் முட்டி மோதாத காலம் வரை அது நீள்கிறது. பிறகு பிழைப்பைப் பார்க்கிறோம். அன்றாடங்களில் கரைந்து காணாமல் போய்விடுகிறோம். மீண்டும் நம்பிக்கை துளிக்கும் காலம் வரும்போது மீண்டும் கொண்டாடத் தொடங்குகிறோம். உலகெங்கும் இதுதான் நடைமுறை.

இந்த இதழ் திருவிழாக்களின் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. வடலூர் தைப்பூசத் திருவிழா, மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கி ஹாங்காங் பன் திருவிழா வரை பலப்பல திருவிழாக்கள் குறித்துப் பேசுகிறது. வேறு வேறு தேசங்கள், வேறு வேறு மதங்கள், வேறு வேறு நம்பிக்கைகள் ஆனாலும் மனிதர்கள் சில அடிப்படைகளில் வேறுபடுவதே இல்லை. கொண்டாடக் கிடைக்கும் தருணங்களைத் தவறவிடக் கூடாது என்பது அதிலொன்று. இந்தக் கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு கதையும் நமக்கு மௌனமாக போதிக்கும் உண்மைகள் பல. லயம் கூடியதொரு வாழ்வைத்தான் அனைவரும் விரும்புகிறோம். எங்கே பிசிறடிக்க விடுகிறோம் என்பதைத்தான் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

சென்ற வாரம் தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட விவகாரம், பழ. நெடுமாறனின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அவர் வெளியிட்ட ஒரு வரித் தகவல். தனது அறிவிப்புக்குப் பக்க பலமாக எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல் அந்த ஒரு வரியை மட்டும் தனது செய்தியாகத் தந்துவிட்டுப் போனார்.

தனது கடைசி மூச்சு வரை தம் மக்களுக்காக, அவர்களது சுதந்தரத்துக்காக, உரிமைகளுக்காகப் போராடியவர் என்பதுதான் பிரபாகரனின் சிறப்பு. அவரது இயக்கம் நடத்திய அரசியல் கொலைகள், சகோதரக் கொலைகள் உள்ளிட்ட அனைத்தையும் செரித்துக்கொண்டு அவரை இன்றுவரை ஆராதிப்போருக்கு உள்ள ஒரே நியாயம் அதுதான். இறுதிவரை மக்களின் பக்கம் நின்றார்.

பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பு, இறுதிப் போரில் லட்சக் கணக்கான தமிழர்களைக் காவு கொடுத்து, பிரபாகரன் மட்டும் உயிர் தப்பிச் சென்றார் என்பதைத்தான் நிறுவப் பார்க்கிறது. தமது தளபதிகளின் - ஆலோசகர்களின் நிர்ப்பந்தத்தால்தான் அவர் அப்படிச் செய்தார் என்று பழ. நெடுமாறன் சொல்கிறார். இது பிரபாகரனின் பெயரில் இன்னும் இழுக்கேற்றும் நடவடிக்கையே அன்றி வேறல்ல. அவர் என்றுமே எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தவரல்லர். அதுவும் ஓர் இனமே மொத்தமாக அழிந்துகொண்டிருந்த இறுதிக் கணங்களில் அவ்வளவு சுயநலமாக அவர் முடிவெடுத்திருக்க வாய்ப்பே இல்லை.

நெடுமாறனின் இந்த அறிவிப்பை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விரிவாகப் பேசுகிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

தமிழ்நாட்டில் பெருகி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். பலதரப்பட்ட விவாதங்கள் நடக்கின்றன. எதையும் அரசியலாக மட்டுமே பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்ட சமூகம் இது. இப்பிரச்னையின் உண்மை நிலவரம் குறித்து உணர்ச்சி வயப்படாமல் அலசுகிறது, அ. பாண்டியராஜனின் கட்டுரை.

இவை தவிர இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையில் அமெரிக்காவின் நிலைபாட்டை அலசும் பத்மா அர்விந்தின் கட்டுரை, அபுதாபியில் உருவாகியிருக்கும் ஆபிரகாமிய இல்லம் என்கிற மத நல்லிணக்க வழிபாட்டுத் தலம் குறித்த நஸீமாவின் கட்டுரை, அமெரிக்காவின் சிறுபான்மை மதங்களுள் ஒன்றான ஆமிஷ் குறித்தும் அதனைப் பின்பற்றும் மக்களைக் குறித்தும் பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, அண்டார்டிகாவில் (பங்களாதேஷைவிடப் பரப்பளவில் பெரிய) ஒரு பனிப்பாறை உருகத் தொடங்கியிருப்பதன் ஆபத்தைச் சுட்டிக்காட்டும் கோகிலா பாபுவின் கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் கருத்தூன்றிப் படிக்கப் பல கட்டுரைகள் உள்ளன.

கவிஞர் ஞானக்கூத்தன் தமது வாழ்நாளில் ஒரே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ஒன்றே ஒன்றுதான் என்றாலும் மிகச் சிறந்த கதை. மறக்க முடியாதது. அக்கதையும் அதன் நுட்பங்களைப் பேசும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரையும் நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்.

இன்னும் சுவாரசியமான படைப்புகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • உலகைச் சுற்றி

    உலகம்

    மீண்டும் ஐ.எஸ்: ரஷ்யாவைக் குறி வைத்தது எதனால்?

    “எல்லோரும் மண்டியிடுங்கள். இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என யாரும் மிரட்டவில்லை. துப்பாக்கியை மேலே உயர்த்திச் சுடவுமில்லை. அரங்கிற்குள்...

    உலகம்

    டிரம்ப் விவகாரம்: விடாது கருப்பு

    வீடு, நிறுவனம், மதம் ஆலயம் அல்லது அரசியல் கட்சி எதுவானாலும் சரி…. பொருளாதாரமும் அதைச் சார்ந்த முடிவுகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவோ...

    சிறப்புப் பகுதி: திருவிழாக்கள்

    ருசிகரம்

    நம் குரல்

    விரும்பாத ஒன்றும் இல்லாத ஒன்றும்

    பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப்...

    தமிழ்நாடு

    கழகக் குடும்பமும் குடும்பக் கழகமும்

    “சார் நாம ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போறோம். அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகணும்னு நமக்கு லட்சியம் இருக்கலாம். அதுக்காகப் பாடுபடலாம். ஆனா அந்த...

    தமிழ்நாடு

    தமிழகத் தேர்தல் களம்: கூடி வாழும் குருவிகள்

    நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. தமிழகமும் புதுச்சேரியும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 93

    93. வேட்கை அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான். பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்‌ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம்...

    Read More
    திறக்க முடியாத கோட்டை தொடரும்

    திறக்க முடியாத கோட்டை – 24

    24 – வாரிசு இல்லாத வல்லரசு 20-பிப்-2014. சுதந்திர சதுக்கம், கீவ், உக்ரைன். குறி தவறாமல் சுடும் ஸ்நைப்பர்கள் சதுக்கத்தைச் சுற்றி வளைத்தனர். முக்கியப் போராளிகள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்று நேரத்தில் எண்ணிக்கை இருமடங்கானது. ஆம்புலன்ஸ்களிலேயே பரலோகம் சென்றடைந்த ஆன்மாக்கள் ‘பரலோக...

    Read More
    தொடரும் ப்ரோ

    ப்ரோ – 24

    “நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 97

    97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...

    Read More
    சைபர் க்ரைம் தொடரும்

    கத்தியின்றி ரத்தமின்றி – 18

    நீரின்றி அமையாது உலகு அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள். மடியில் அவனது லேப்டாப். தனது ப்ரசன்டேஷனை மீண்டுமொருமுறை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் திவாகர். எல்லாமும் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. கண்களை...

    Read More
    error: Content is protected !!