Home » home-22-002-23

வணக்கம்

தை மாதம்தான் தொடக்கம். மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி வரை மாநிலமெங்கும் திருவிழாக்கள்தாம். பொதுவாக நாம் திருவிழாக்களை மதத்துடனும் வழிபாட்டுடனும் இணைப்பவர்களானாலும் அடிப்படையில் அவை நம் வாழ்வோடு சம்பந்தப்பட்டவைதாம். விளைச்சல்-அறுவடைக் காலத்தைத் தொடர்ந்துதான் திருவிழாக்கள் வருகின்றன. பெரிதாக அவநம்பிக்கைகள் முட்டி மோதாத காலம் வரை அது நீள்கிறது. பிறகு பிழைப்பைப் பார்க்கிறோம். அன்றாடங்களில் கரைந்து காணாமல் போய்விடுகிறோம். மீண்டும் நம்பிக்கை துளிக்கும் காலம் வரும்போது மீண்டும் கொண்டாடத் தொடங்குகிறோம். உலகெங்கும் இதுதான் நடைமுறை.

இந்த இதழ் திருவிழாக்களின் சிறப்பிதழாக மலர்ந்திருக்கிறது. வடலூர் தைப்பூசத் திருவிழா, மதுரை சித்திரைத் திருவிழா தொடங்கி ஹாங்காங் பன் திருவிழா வரை பலப்பல திருவிழாக்கள் குறித்துப் பேசுகிறது. வேறு வேறு தேசங்கள், வேறு வேறு மதங்கள், வேறு வேறு நம்பிக்கைகள் ஆனாலும் மனிதர்கள் சில அடிப்படைகளில் வேறுபடுவதே இல்லை. கொண்டாடக் கிடைக்கும் தருணங்களைத் தவறவிடக் கூடாது என்பது அதிலொன்று. இந்தக் கொண்டாட்டங்களின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு கதையும் நமக்கு மௌனமாக போதிக்கும் உண்மைகள் பல. லயம் கூடியதொரு வாழ்வைத்தான் அனைவரும் விரும்புகிறோம். எங்கே பிசிறடிக்க விடுகிறோம் என்பதைத்தான் கவனிக்கத் தவறிவிடுகிறோம்.

சென்ற வாரம் தமிழ்நாட்டில் பரபரப்பாகப் பேசப்பட்ட விவகாரம், பழ. நெடுமாறனின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று அவர் வெளியிட்ட ஒரு வரித் தகவல். தனது அறிவிப்புக்குப் பக்க பலமாக எந்த ஆதாரத்தையும் முன்வைக்காமல் அந்த ஒரு வரியை மட்டும் தனது செய்தியாகத் தந்துவிட்டுப் போனார்.

தனது கடைசி மூச்சு வரை தம் மக்களுக்காக, அவர்களது சுதந்தரத்துக்காக, உரிமைகளுக்காகப் போராடியவர் என்பதுதான் பிரபாகரனின் சிறப்பு. அவரது இயக்கம் நடத்திய அரசியல் கொலைகள், சகோதரக் கொலைகள் உள்ளிட்ட அனைத்தையும் செரித்துக்கொண்டு அவரை இன்றுவரை ஆராதிப்போருக்கு உள்ள ஒரே நியாயம் அதுதான். இறுதிவரை மக்களின் பக்கம் நின்றார்.

பழ. நெடுமாறனின் இந்த அறிவிப்பு, இறுதிப் போரில் லட்சக் கணக்கான தமிழர்களைக் காவு கொடுத்து, பிரபாகரன் மட்டும் உயிர் தப்பிச் சென்றார் என்பதைத்தான் நிறுவப் பார்க்கிறது. தமது தளபதிகளின் - ஆலோசகர்களின் நிர்ப்பந்தத்தால்தான் அவர் அப்படிச் செய்தார் என்று பழ. நெடுமாறன் சொல்கிறார். இது பிரபாகரனின் பெயரில் இன்னும் இழுக்கேற்றும் நடவடிக்கையே அன்றி வேறல்ல. அவர் என்றுமே எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்தவரல்லர். அதுவும் ஓர் இனமே மொத்தமாக அழிந்துகொண்டிருந்த இறுதிக் கணங்களில் அவ்வளவு சுயநலமாக அவர் முடிவெடுத்திருக்க வாய்ப்பே இல்லை.

நெடுமாறனின் இந்த அறிவிப்பை ஈழத் தமிழர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? விரிவாகப் பேசுகிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

தமிழ்நாட்டில் பெருகி வரும் வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். பலதரப்பட்ட விவாதங்கள் நடக்கின்றன. எதையும் அரசியலாக மட்டுமே பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டுவிட்ட சமூகம் இது. இப்பிரச்னையின் உண்மை நிலவரம் குறித்து உணர்ச்சி வயப்படாமல் அலசுகிறது, அ. பாண்டியராஜனின் கட்டுரை.

இவை தவிர இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையில் அமெரிக்காவின் நிலைபாட்டை அலசும் பத்மா அர்விந்தின் கட்டுரை, அபுதாபியில் உருவாகியிருக்கும் ஆபிரகாமிய இல்லம் என்கிற மத நல்லிணக்க வழிபாட்டுத் தலம் குறித்த நஸீமாவின் கட்டுரை, அமெரிக்காவின் சிறுபான்மை மதங்களுள் ஒன்றான ஆமிஷ் குறித்தும் அதனைப் பின்பற்றும் மக்களைக் குறித்தும் பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, அண்டார்டிகாவில் (பங்களாதேஷைவிடப் பரப்பளவில் பெரிய) ஒரு பனிப்பாறை உருகத் தொடங்கியிருப்பதன் ஆபத்தைச் சுட்டிக்காட்டும் கோகிலா பாபுவின் கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் கருத்தூன்றிப் படிக்கப் பல கட்டுரைகள் உள்ளன.

கவிஞர் ஞானக்கூத்தன் தமது வாழ்நாளில் ஒரே ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். ஒன்றே ஒன்றுதான் என்றாலும் மிகச் சிறந்த கதை. மறக்க முடியாதது. அக்கதையும் அதன் நுட்பங்களைப் பேசும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரையும் நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும்.

இன்னும் சுவாரசியமான படைப்புகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • உலகைச் சுற்றி

    உலகம்

    ‘சரி. பிரிந்துவிடுவோம்!’

    கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...

    உலகம்

    அப்பன் வீட்டுச் சொத்து: பரவும் பங்களாதேஷ் மாணவர் புரட்சி

    இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...

    உலகம்

    யார் இங்கு மான்ஸ்டர்?

    தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...

    உலகம்

    அமெரிக்கத் தேர்தல்: துணைவர் ஜாதகம்

    அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...

    சிறப்புப் பகுதி: திருவிழாக்கள்

    ருசிகரம்

    நம் குரல்

    ஆதரித்தால் அள்ளிக் கொடு!

    இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...

    தமிழ்நாடு

    உதயநிதியும் உலக நியதியும்

    உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவாரா?. தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இன்றைக்கு இதுதான் விவாதிக்கப்படுகிறது. விடை மிகவும்...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 15

    அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 15

    முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை -15

    15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 15

    15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -114

    114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 110

    110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...

    Read More
    error: Content is protected !!