கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதிக்கான அறிவிப்பை வெளியிட்டது முதலே, ‘இதில் எழுதவும் அறியவும் என்ன உள்ளது?’ என்று பலர் மின்னஞ்சல் மூலம் கேட்டார்கள். சொகுசு என்பது நபருக்கு நபர் மாறக்கூடிய ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால் சொகுசு விரும்பாத மனிதர் என்று யாரும் இருக்க முடியாது. முற்றும் துறந்த முனிவர்கள்கூட உட்காருவதற்குப் புலித்தோல் கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லுவதில்லை.
எவ்வளவோ விஷயங்களுக்கு நாம் ஏங்கியிருப்போம். நாம் ஏங்கியவை வேறொருவருக்கு எளிதாக வாய்த்திருக்கும். அவருக்கு அதன் அருமை தெரியாமலும் இருக்கலாம். வாழ்க்கையின் அலகிலா விளையாட்டுகளுள் ஒன்றல்லவா இது? இந்த இதழில் அமெரிக்க அதிபர் வசிக்கும் வெள்ளை மாளிகையின் சொகுசு ஏற்பாடுகள் பற்றி எழுதப்பட்டுள்ள கட்டுரையை வாசித்துப் பாருங்கள். கூடவே அமெரிக்க அதிபர்களுக்கு இருக்கும் கட்டுப்பாடுகளையும் கவனியுங்கள். கூப்பிட்டுக் கொடுத்தாலும் வேண்டாம் அப்பதவி என்று சொல்லிவிடத் தோன்றும்.
இந்த இதழின் இன்னொரு முக்கியமான கட்டுரை, அரசு வேலையைப் பெறுவது பற்றியது. சொகுசு வரையறை தாண்டி இக்கட்டுரை நமக்குத் தெரியப்படுத்தும் உண்மைகள் பல. அரசுப் பணியின் சௌகரியங்கள் குறித்து நாம் நிறைய கேள்விப்பட்டிருக்கிறோம். அவை உண்மை என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவற்றுக்கு அப்பால் அந்தப் பணியைப் பெறுவது தொடங்கி, நீடித்து இருந்து ஓய்வு பெறுவது வரை கடக்க வேண்டிய கண்டங்களை எவ்வளவு பேர் அறிவார்கள்?
எழுத்தாளர்கள், மாணவர்கள், சுற்றுலாவில் சொர்க்கம் தேடுவோர் என்று பல தரப்பினரின் சொகுசு ஆர்வங்கள் குறித்த கட்டுரைகள் இவ்வாரம் உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.
பிரிட்டிஷ் இளவரசர் என்று பன்னெடுங்காலமாக நம் மனத்தில் நிரந்தரமாக அமர்ந்துவிட்ட சார்லஸ் இப்போது மன்னர் சார்லஸ் ஆகியிருக்கிறார். அவரைக் குறித்து ஜெயரூபலிங்கம் எழுதியுள்ள கட்டுரை மிக நீண்டதொரு வாழ்வின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தைச் சுருக்கமாகக் காட்சிப்படுத்துகிறது.
உளவாளிகளுள் டபுள் ஏஜெண்டுகளாக இருந்தோர் பலர் உண்டு. ஆனால் ஒரு தேசத்தின் அதிபருடைய மருமகனே வேறொரு தேசத்துக்கு உளவு சொல்லி வந்த கதையை நீங்கள் கேள்விப்பட்டிருக்க முடியாது. அஷ்ரப் மர்வான் என்கிற இஸ்ரேலிய உளவாளியின் கதையைக் கொண்டு நூறு நாவல்கள், ஆயிரம் திரைப்படங்கள் உருவாக்கலாம். திகைப்பூட்டும் தகவல்களைக் கொண்ட ஸஃபார் அஹ்மதின் கட்டுரையை மிகவும் ரசிப்பீர்கள்.
ஒட்டகம் மேய்ப்பவர்களின் வாழ்வைப் படம் பிடிக்கும் நசீமாவின் கட்டுரை, நாம் விரும்பி உண்ணும் சிற்றுண்டிகளின் வரலாறைப் பேசும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரை, எந்தத் தொழிலிலும் வெற்றி பெறத் தேவையான மிக முக்கியமான அடிப்படைக் குணம் ஒன்றைத் துலக்கிக் காட்டும் ‘பிரிட்டானியா’ உயரதிகாரி அரசு கேசவன் குறித்து ராஜ்ஶ்ரீ செல்வராஜ் எழுதியுள்ள கட்டுரை, உலகப் புகழ்பெற்ற நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளின் ‘ஒரு நாள்’ என்பது எப்படி வடிவமைக்கப்படுகிறது என்பதை விவரிக்கும் ரங்காவின் கட்டுரை - இவையெல்லாம் இந்த இதழுக்கு அழகு சேர்க்கின்றன.
மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து, சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இது நாம் இணைந்து இழுக்கும் தேர்.
சிறப்புப் பகுதி: சொகுசு
நம்மைச் சுற்றி
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
நாலு விஷயம்
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...