அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதி, செயலிகள். பெண்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகள், அமெரிக்கப் பிரபலங்கள் பயன்படுத்தும் செயலிகள், கடன் செயலிகள், எழுத உதவும் செயலிகள், ஸ்கேனிங் செயலிகள் எனப் பல தரப்பட்ட செயலிகளைக் குறித்து இந்த இதழில் கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன. டயட் செயலிகளை இழுத்துப் போட்டு, கதறக் கதற நக்கலடிக்கும் சிவசங்கரி வசந்தின் கட்டுரை மனம் விட்டுச் சிரிப்பதற்கு.
சென்ற வாரம் இலங்கையில் நடைபெற்ற மக்கள் புரட்சி குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியிருந்தார். இந்த இதழில் அதன் தொடர்ச்சியாக, இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற அதிபர் கோட்டபாய ராஜபக்சவின் தப்பித்தல் முயற்சிகளை விவரித்திருக்கிறார் (உலகம் சுற்றும் வாலிபன் - புதிய காப்பி). செயற்கை நுண்ணறிவு ஆயுதங்கள் குறித்து ராஜிக் இப்ராஹிம் எழுதியுள்ள கட்டுரையும் துபாயில் இருந்து நூற்று இருபது கிலோ மீட்டருக்கு அப்பால் பாலை வனத்தின் நடுவே நிகழ்ந்திருக்கும் ஒரு பசுமைப் புரட்சி குறித்து நசீமா ரசாக் எழுதியுள்ள கட்டுரையும் முக்கியமானவை.
ஜூலை 21ம் தேதி எர்னஸ்ட் ஹெமிங்வேயின் பிறந்த நாள். அம்மாபெரும் கலைஞனை இன்றைய தலைமுறை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக பென்னேஸ்வரன் எழுதியிருக்கும் கட்டுரை இந்த இதழுக்கு வண்ணம் சேர்க்கிறது.
வரலாறு முக்கியம் பகுதியில் அறிவன் இம்முறை சிறு தெய்வ வழிபாட்டின் தோற்றத்தை விவரித்திருக்கிறார். முன் அபிப்பிராயங்கள் இல்லாமல் வாசித்தால் பல திறப்புகளைத் தரும் கட்டுரை இது.
மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழையும் அறிதலில் ஆர்வம் கொண்ட வாசகர்கள் ஒவ்வொருவருக்காகவும் பார்த்துப் பார்த்து வடிவமைக்கிறோம். இதை இன்னும் பரவலான வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் எங்களோடு தோள் சேர உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
உங்களுக்கு இதழ் பிடித்திருக்கிறதா? போதும். உங்களைப் போன்ற ஒரே ஒரு வாசகரை நீங்கள் மெட்ராஸ் பேப்பருக்கு அழைத்து வாருங்கள். சந்தாதாரர் ஆக்குங்கள். அவர் உங்கள் நண்பராக இருக்கலாம். உறவினராக இருக்கலாம். தெரிந்த யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு புதிய வாசகரும் உங்களைப் போலவே இந்தப் பத்திரிகையைத் தாங்கி நிற்கும் தூண்களுள் ஒருவர் ஆவார்.
செய்வீர்கள் அல்லவா?
சிறப்புப் பகுதி: செயலிகள்
அக்கம் பக்கம்
ருசிகரம்
தொடரும்
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
“வாயை மூடு“ என்று நம்மிடம் யாராவது சொன்னால் நமக்கு கோபம்தான் வரும். ஏனெனில் அது மனிதர்களிடமிருந்து வரும் சாதாரணக் கட்டளை வாக்கியம். ஆனால், அதனையே குருநாதர் பரமசிவேந்திரர், தனது சீடன் சிவராமகிருஷ்ணன் என்கிற சதாசிவப் பிரம்மேந்திரரிடம் சொன்னபோது, அந்தச் சீடனுக்கு ஞானம் வந்தது. ஏனெனில் அது...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...
15. திறன்பேசியியல் இணையம் பரவலாயிற்று. இணையத் தேடலும் அத்தியாவசியமாகிவிட்டது. திறன்பேசிகள் அறிமுகமாகியிருந்த காலம். கைப்பேசியில் இணையம் உபயோகிக்கலாம் என்ற அறிவிப்புகள் வந்தனவே ஒழிய, கணினியில் இணையம் கொடுத்த அனுபவத்தை அலைப்பேசியில் முழுமையாக வழங்க முடியாமல் நிறுவனங்கள் தவித்துக்கொண்டிருந்தன. 2007...