குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...
வணக்கம்
புதுமைப்பித்தன் நினைவாக வட அமெரிக்கத் தமிழர் பண்பாட்டு அமைப்பினரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் ‘விளக்கு’ விருது இந்த வருடம் வண்ணநிலவனுக்கும் (புனைவு) அஸ்வகோஷ் என்கிற ராசேந்திர சோழனுக்கும் (அபுனைவு) அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் மெட்ராஸ் பேப்பரின் வாழ்த்தும் வணக்கமும்.
வண்ணநிலவன், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். எளிமையான எழுத்து போன்ற தோற்றமும் ஆழமான உள்ளடுக்குகளும் கொண்ட வண்ணநிலவனின் கதைகள் மிகவும் சிக்கனமாக எழுதப்பட்டவை. தேவையற்ற ஒரு சொல்கூட அவரது எழுத்தில் இராது. கேளிக்கைக்கோ, போதனைகளுக்கோ, பிரசாரங்களுக்கோ, பிரசங்கத்துக்கோ இடமே அற்ற சுத்தமான கலை வடிவை அவரது கதைகளில் காணலாம்.
இந்த இதழில் வண்ணநிலவனின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான சாரதா, அவரது அனுமதியுடன் மீள் பிரசுரமாகியிருக்கிறது. அந்தக் கதையின் நுட்பங்களைத் தொட்டுச் சிலாகிக்கும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரையும், வண்ணநிலவனுடனான தனது நட்பின் ஆழங்களை விவரிக்கும் கலாப்ரியாவின் கட்டுரை ஒன்றும் வெளியாகியிருக்கின்றன. சந்தாதாரர்கள் மட்டுமல்லாமல் இந்தப் பகுதியை யாரும் படிக்கலாம். வாசகர்களுக்கு மெட்ராஸ் பேப்பர் வழங்கும் தீபாவளிப் பரிசு இதுதான்.
இந்த இதழின் மற்றொரு சிறப்புப் பகுதி, வீட்டுத் தோட்டம். தோட்டக் கலையில் அனுபவம் மிக்கவர்கள் இதில் எழுதியிருக்கிறார்கள். பால்கனியில், மொட்டை மாடியில், வீட்டில் கிடைக்கும் இதர சொற்ப இடங்களில் தோட்டம் போட விரும்புவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
அக்டோபர் என்பது Attention Deficit and Hyperactive disorder எனப்படும் ADHD விழிப்புணர்வு மாதம். இது குறித்து இந்த இதழில் அ. பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, இந்த இயல் சார்ந்த சில புதிய திறப்புகளைத் தரவல்லது.
அவ்வண்ணமே கூகுள் நிறுவனத்தில் வேலை பெறுவது எப்படி என்று படிப்படியாக விவரிக்கும் முத்து காளிமுத்துவின் கட்டுரையும் நாம் அறியாததொரு உலகின் கதவுகளைத் திறந்து காட்டும் தன்மை கொண்டது.
மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களிடம் சிக்கி வாழ்நாளெல்லாம் சிறைக் கைதியாகவே வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கும் ஆங் சான் சூ கியின் மீது சமீபத்தில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் கிடைத்திருக்கும் தீர்ப்பும் தண்டனையும் அத்தேசத்தின் தீராத பெருந்துயரின் ஒரு சிறிய சாட்சி. சூகிக்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய தண்டனையை முன்வைத்து மியான்மரின் அரசியல் சூழ்நிலையைத் தெளிவாக விளக்கும் ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை இந்த இதழில் மிக முக்கியமானதொன்று.
திரைப்பட விமரிசகர் பரத்வாஜ் ரங்கனின் பேட்டி, புறாக்களின் காலில் கடிதம் கட்டி அனுப்பி வைத்த காலம் முதல் வாட்சப் தகவல் பரிமாற்றக் காலம் வரையிலான தகவல் தொடர்பின் வரலாற்றை சுவாரசியமாக விவரிக்கும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரை, மொபைல் போன்களில் அவசியம் இருந்தாக வேண்டிய செயலிகளைக் குறித்து வெங்கட் எழுதியிருக்கும் கட்டுரை - இவை யாவும் உங்கள் ஆர்வத்துக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
வாசக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள். மேலும் பல புதிய சுவாரசியங்களுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
விளக்கு விருது: வண்ணநிலவன்
சிறப்புப் பகுதி: வீட்டுத் தோட்டம்
உள்ளும் புறமும்
1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும்...
இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப்...
பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற...
ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க்...
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில்...
தொடரும்
1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம்...
பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை. அப்போது கல்லூரி மாணவர்களாக இருந்த நானும் என்னுடைய நண்பர்களும் அந்தப் படத்தைப் பலமுறை விரும்பிப் பார்த்தோம், அதில் இடம்பெற்ற காதல் வழியும்...
1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...
‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...
1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...
100. வந்தேமாதரம் விவாதம் நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும்...