இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
வணக்கம்
புதுமைப்பித்தன் நினைவாக வட அமெரிக்கத் தமிழர் பண்பாட்டு அமைப்பினரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் ‘விளக்கு’ விருது இந்த வருடம் வண்ணநிலவனுக்கும் (புனைவு) அஸ்வகோஷ் என்கிற ராசேந்திர சோழனுக்கும் (அபுனைவு) அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் மெட்ராஸ் பேப்பரின் வாழ்த்தும் வணக்கமும்.
வண்ணநிலவன், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். எளிமையான எழுத்து போன்ற தோற்றமும் ஆழமான உள்ளடுக்குகளும் கொண்ட வண்ணநிலவனின் கதைகள் மிகவும் சிக்கனமாக எழுதப்பட்டவை. தேவையற்ற ஒரு சொல்கூட அவரது எழுத்தில் இராது. கேளிக்கைக்கோ, போதனைகளுக்கோ, பிரசாரங்களுக்கோ, பிரசங்கத்துக்கோ இடமே அற்ற சுத்தமான கலை வடிவை அவரது கதைகளில் காணலாம்.
இந்த இதழில் வண்ணநிலவனின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான சாரதா, அவரது அனுமதியுடன் மீள் பிரசுரமாகியிருக்கிறது. அந்தக் கதையின் நுட்பங்களைத் தொட்டுச் சிலாகிக்கும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரையும், வண்ணநிலவனுடனான தனது நட்பின் ஆழங்களை விவரிக்கும் கலாப்ரியாவின் கட்டுரை ஒன்றும் வெளியாகியிருக்கின்றன. சந்தாதாரர்கள் மட்டுமல்லாமல் இந்தப் பகுதியை யாரும் படிக்கலாம். வாசகர்களுக்கு மெட்ராஸ் பேப்பர் வழங்கும் தீபாவளிப் பரிசு இதுதான்.
இந்த இதழின் மற்றொரு சிறப்புப் பகுதி, வீட்டுத் தோட்டம். தோட்டக் கலையில் அனுபவம் மிக்கவர்கள் இதில் எழுதியிருக்கிறார்கள். பால்கனியில், மொட்டை மாடியில், வீட்டில் கிடைக்கும் இதர சொற்ப இடங்களில் தோட்டம் போட விரும்புவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
அக்டோபர் என்பது Attention Deficit and Hyperactive disorder எனப்படும் ADHD விழிப்புணர்வு மாதம். இது குறித்து இந்த இதழில் அ. பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, இந்த இயல் சார்ந்த சில புதிய திறப்புகளைத் தரவல்லது.
அவ்வண்ணமே கூகுள் நிறுவனத்தில் வேலை பெறுவது எப்படி என்று படிப்படியாக விவரிக்கும் முத்து காளிமுத்துவின் கட்டுரையும் நாம் அறியாததொரு உலகின் கதவுகளைத் திறந்து காட்டும் தன்மை கொண்டது.
மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களிடம் சிக்கி வாழ்நாளெல்லாம் சிறைக் கைதியாகவே வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கும் ஆங் சான் சூ கியின் மீது சமீபத்தில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் கிடைத்திருக்கும் தீர்ப்பும் தண்டனையும் அத்தேசத்தின் தீராத பெருந்துயரின் ஒரு சிறிய சாட்சி. சூகிக்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய தண்டனையை முன்வைத்து மியான்மரின் அரசியல் சூழ்நிலையைத் தெளிவாக விளக்கும் ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை இந்த இதழில் மிக முக்கியமானதொன்று.
திரைப்பட விமரிசகர் பரத்வாஜ் ரங்கனின் பேட்டி, புறாக்களின் காலில் கடிதம் கட்டி அனுப்பி வைத்த காலம் முதல் வாட்சப் தகவல் பரிமாற்றக் காலம் வரையிலான தகவல் தொடர்பின் வரலாற்றை சுவாரசியமாக விவரிக்கும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரை, மொபைல் போன்களில் அவசியம் இருந்தாக வேண்டிய செயலிகளைக் குறித்து வெங்கட் எழுதியிருக்கும் கட்டுரை - இவை யாவும் உங்கள் ஆர்வத்துக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.
வாசக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள். மேலும் பல புதிய சுவாரசியங்களுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.
விளக்கு விருது: வண்ணநிலவன்
சிறப்புப் பகுதி: வீட்டுத் தோட்டம்
உள்ளும் புறமும்
கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
15. திறன்பேசியியல் இணையம் பரவலாயிற்று. இணையத் தேடலும் அத்தியாவசியமாகிவிட்டது. திறன்பேசிகள் அறிமுகமாகியிருந்த காலம். கைப்பேசியில் இணையம் உபயோகிக்கலாம்...
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...