Home » Home 19-10-22

வணக்கம்

புதுமைப்பித்தன் நினைவாக வட அமெரிக்கத் தமிழர் பண்பாட்டு அமைப்பினரால் ஆண்டு தோறும் வழங்கப்படும் ‘விளக்கு’ விருது இந்த வருடம் வண்ணநிலவனுக்கும் (புனைவு) அஸ்வகோஷ் என்கிற ராசேந்திர சோழனுக்கும் (அபுனைவு) அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருவருக்கும் மெட்ராஸ் பேப்பரின் வாழ்த்தும் வணக்கமும்.

வண்ணநிலவன், தமிழின் முக்கியமான எழுத்தாளர்களுள் ஒருவர். எளிமையான எழுத்து போன்ற தோற்றமும் ஆழமான உள்ளடுக்குகளும் கொண்ட வண்ணநிலவனின் கதைகள் மிகவும் சிக்கனமாக எழுதப்பட்டவை. தேவையற்ற ஒரு சொல்கூட அவரது எழுத்தில் இராது. கேளிக்கைக்கோ, போதனைகளுக்கோ, பிரசாரங்களுக்கோ, பிரசங்கத்துக்கோ இடமே அற்ற சுத்தமான கலை வடிவை அவரது கதைகளில் காணலாம்.

இந்த இதழில் வண்ணநிலவனின் சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான சாரதா, அவரது அனுமதியுடன் மீள் பிரசுரமாகியிருக்கிறது. அந்தக் கதையின் நுட்பங்களைத் தொட்டுச் சிலாகிக்கும் விமலாதித்த மாமல்லனின் கட்டுரையும், வண்ணநிலவனுடனான தனது நட்பின் ஆழங்களை விவரிக்கும் கலாப்ரியாவின் கட்டுரை ஒன்றும் வெளியாகியிருக்கின்றன. சந்தாதாரர்கள் மட்டுமல்லாமல் இந்தப் பகுதியை யாரும் படிக்கலாம். வாசகர்களுக்கு மெட்ராஸ் பேப்பர் வழங்கும் தீபாவளிப் பரிசு இதுதான்.

இந்த இதழின் மற்றொரு சிறப்புப் பகுதி, வீட்டுத் தோட்டம். தோட்டக் கலையில் அனுபவம் மிக்கவர்கள் இதில் எழுதியிருக்கிறார்கள். பால்கனியில், மொட்டை மாடியில், வீட்டில் கிடைக்கும் இதர சொற்ப இடங்களில் தோட்டம் போட விரும்புவோருக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.

அக்டோபர் என்பது Attention Deficit and Hyperactive disorder எனப்படும் ADHD விழிப்புணர்வு மாதம். இது குறித்து இந்த இதழில் அ. பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, இந்த இயல் சார்ந்த சில புதிய திறப்புகளைத் தரவல்லது.

அவ்வண்ணமே கூகுள் நிறுவனத்தில் வேலை பெறுவது எப்படி என்று படிப்படியாக விவரிக்கும் முத்து காளிமுத்துவின் கட்டுரையும் நாம் அறியாததொரு உலகின் கதவுகளைத் திறந்து காட்டும் தன்மை கொண்டது.

மியான்மரின் ராணுவ ஆட்சியாளர்களிடம் சிக்கி வாழ்நாளெல்லாம் சிறைக் கைதியாகவே வாழ்ந்து தீர்த்துக்கொண்டிருக்கும் ஆங் சான் சூ கியின் மீது சமீபத்தில் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளும் கிடைத்திருக்கும் தீர்ப்பும் தண்டனையும் அத்தேசத்தின் தீராத பெருந்துயரின் ஒரு சிறிய சாட்சி. சூகிக்கு வழங்கப்பட்டிருக்கும் புதிய தண்டனையை முன்வைத்து மியான்மரின் அரசியல் சூழ்நிலையைத் தெளிவாக விளக்கும் ஜெயரூபலிங்கத்தின் கட்டுரை இந்த இதழில் மிக முக்கியமானதொன்று.

திரைப்பட விமரிசகர் பரத்வாஜ் ரங்கனின் பேட்டி, புறாக்களின் காலில் கடிதம் கட்டி அனுப்பி வைத்த காலம் முதல் வாட்சப் தகவல் பரிமாற்றக் காலம் வரையிலான தகவல் தொடர்பின் வரலாற்றை சுவாரசியமாக விவரிக்கும் முருகு தமிழ் அறிவனின் கட்டுரை, மொபைல் போன்களில் அவசியம் இருந்தாக வேண்டிய செயலிகளைக் குறித்து வெங்கட் எழுதியிருக்கும் கட்டுரை - இவை யாவும் உங்கள் ஆர்வத்துக்கு விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

வாசக நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள். மேலும் பல புதிய சுவாரசியங்களுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

விளக்கு விருது: வண்ணநிலவன்

சிறப்புப் பகுதி: வீட்டுத் தோட்டம்

உள்ளும் புறமும்

நம் குரல்

கலாசாரத்துக்குப் போதாத காலம்

இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே...

உலகம்

சிக்கல் சிங்காரவேலர்களின் கதை

பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே...

உலகம்

மெக்ஸிகோ: தோண்டத் தோண்டக் குற்றம்

மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம்...

உலகம்

தள்ளாதே!

கலவரமூட்டும் சப்வே களேபரங்கள் மே 22 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு தன் பணியாளரின் செல்போனில் இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினார், மேத்தொ எக்ஸ்ப்ரஸ் கஃபே...

உலகம்

ஒரு போரும் பல ஒத்திகைகளும்

37 வயது பாவெல் – கட்டுப்போட்ட ஒரு கை கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு கை இயந்திர துப்பாக்கியைப் பிடித்து ரஷ்ய வீரர்களைச்...

தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில்- 28

தெய்வத்துக்கே வரும் சோதனை நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -28

28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947) தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 54

54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 53

53 மிதப்பு டிரைவ்-இன் செல்ஃப் சர்வீசில் காபி வாங்கிக்கொண்டு வந்து, நடைவழியை ஒட்டி இருந்த மூன்று மேஜைகளில் காலியாக இருந்த நடு மேஜையில் உட்கார்ந்தான். மனம் பொங்கி வழிந்துகொண்டு இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியமனுஷ தோரணையுடன் அமைதியாக இருக்க முயன்றான். அது அவன் இயல்பே இல்லை. மனத்தின்...

Read More
error: Content is protected !!