Home » Home 17-05-23

வணக்கம்

சென்ற வாரம் நமது வாசகர்களுள் சிலருக்கு சந்தா புதுப்பிக்கச் சொல்லி மின்னஞ்சல் ஒன்று சென்றிருக்கிறது. பிளகின் தானே செய்த சேவை அது. உண்மையில், ஆண்டு சந்தா செலுத்தியவர்கள் ஜூன் 1ம் தேதி வரை புதுப்பிக்க அவசியமில்லை. நமது பத்திரிகை தொடங்குவதற்கு முன்னரே (ஒரு மாதம் முதல் ஒன்றிரண்டு தினங்களுக்கு முன்னர் வரை) சந்தா செலுத்திப் பதிவு செய்துகொண்டவர்களுள் சிலர், ‘auto debit’ வேண்டாம்; நானே சந்தாவைப் புதுப்பித்துக்கொள்வேன் என்னும் ஆப்ஷனைத் தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்களுக்குத்தான் அந்த அஞ்சல் சென்றிருக்கிறது. பிரச்னை இல்லை. புகார் தெரிவித்த அனைவருக்கும் சரி செய்து தரப்பட்டுவிட்டது. இன்னும் யாருக்காவது தளத்தைப் படிக்க முடியாத சூழல் இருக்குமானால் 8610284208 என்னும் எண்ணுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன், சந்தா செலுத்திய விவரங்களைச் சேர்த்து அனுப்பினால் (வாட்சப்) சிக்கல் சரி செய்யப்படும்.

நிற்க. இந்த ஓராண்டுக் காலமாக மெட்ராஸ் பேப்பரை வாசித்து வரும் உங்களுக்கு இதன் தரம் தெரியும். இதர வார இதழ்கள் எதிலும் வராத எத்தனையோ புதிய விஷயங்களை நாம் தொடர்ந்து அளித்து வருவது தெரியும். கனமான சர்வதேச விவகாரங்களைக் கூட மிக எளிய தமிழில், பாமரரும் புரிந்துகொள்ளத்தக்க விதத்தில் தருவது நமது பத்திரிகையின் சிறப்பம்சம்.

இந்த இதழிலேயே பாருங்கள். துருக்கி பொதுத் தேர்தலை முன்வைத்து அந்நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் வரலாற்றையுமே சிந்தாமல் சிதறாமல் ஒரு சிறிய கட்டுரைக்குள் அடக்கித் தந்திருக்கிறார் நமது ஸஃபார் அஹ்மத். பாகிஸ்தானில் இம்ரான் கான் கைது என்று தினசரிகளில் பார்த்திருப்பீர்கள். அந்தக் கைதுக்கும் நீதிமன்றம் அளித்த ஜாமினுக்கும் பின்னால் உள்ள அனைத்து அரசியலையும் அக்குவேறு ஆணிவேறாக அலசிவிடுகிறது நஸீமா எழுதியிருக்கும் கட்டுரை. கடந்த இரண்டு வாரங்களாக வந்துகொண்டிருக்கும் இலவசக் கொத்தனாரின் ‘வானமா எல்லை?’ இந்த இதழுடன் நிறைகிறது. எலான் மஸ்க் என்கிற மனிதரை ஒரு கிறுக்கனாக நமது ஊடகங்கள் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டிருக்கும் சூழலில் கிறுக்குத்தனத்துக்கும் மேதைமைக்கும் இடையில் உள்ள மெல்லிய கோட்டை அவர் எப்படி அழிக்கிறார் என்று துல்லியமாகக் காட்சிப்படுத்திவிடுகிறது இக்கட்டுரை. ஒவ்வொரு கட்டுரையையும் இப்படித்தான் பார்த்துப் பார்த்துச் செதுக்கித் தருகிறோம்.

மிகப் பெரிய இலக்குகளை வைத்துக்கொண்டு, மிகச் சிறிய முதலீட்டில்தான் இதனைத் தொடங்கினோம். சிறியதொரு வாசகர் வட்டமே என்றாலும் கூர்ந்த வாசிப்பில் நாட்டமும் தேர்ச்சியும் உள்ளவர்களாக அவர்கள் இருப்பதுதான் நமது பிரத்தியேக மகிழ்ச்சி. இதனால்தான் சந்தாத் தொகை என்பது வாசகர்களுக்கு ஒரு சுமையாகிவிடக் கூடாது என்று மிகவும் யோசித்தே ஆண்டுச் சந்தா ரூ. 400 என்று நிர்ணயித்தோம். வேறு எந்த வார இதழையும் நீங்கள் இந்தத் தொகைக்கு வாசிக்க முடியாது.

வாசகர்களிடம் நாம் வேண்டுவது இரண்டு விஷயங்கள் மட்டுமே. உங்கள் சந்தாவை உரிய நேரத்தில் புதுப்பிப்பது. இதழ் உங்களுக்குப் பிடித்திருக்குமானால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரர்களாக்குவது. மெட்ராஸ் பேப்பர் என்னும் அறிவியக்கம் தொடரவும் தழைத்தோங்கவும் இதுவே வழி.

செய்வீர்கள் அல்லவா?

  • நம்மைச் சுற்றி

    நம் குரல்

    செங்கோல் அரசியல்

    ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...

    ஆன்மிகம்

    வெண் பன்றியின் பின்னால் போ!

    மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி...

    இந்தியா

    குற்றம்: நடப்பது என்ன?

    அடிக் அஹமதும் அவர் சகோதரர் அஷ்ரஃபும் காவல் துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் சென்று கொண்டிருந்தனர். கஸ்டடியில் இருப்பவர்களுக்குச்...

    தமிழ்நாடு

    சிங்கப்பூரில் ஸ்டாலின்: சாதித்தது என்ன?

    இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு...

    உலகைச் சுற்றி

    உலகம்

    மீண்டும் மதவாதம்: இனி மீளுமா இலங்கை?

    கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...

    உலகம்

    திருப்பி அடிக்கும் வழி

    கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...

    உலகம்

    மக்களே, கடன் கொடுங்கள்!

    ‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...

    நுட்ப பஜார்

    கணினி

    மேனேஜரைக் காதலிப்போம்!

    “உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...

    நுட்பம்

    ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

    உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 52

    52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...

    Read More
    கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

    கடவுளுக்குப் பிடித்த தொழில் – 27

    மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 53

    53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

    Read More
    தல புராணம் தொடரும்

    ‘தல’ புராணம் – 27

    தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் -27

    27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...

    Read More
    இலக்கியம் உலகச் சிறுகதைகள்

    மரம்

    மரியா லூயிஸா பொம்பால்  ஆங்கிலத்தில்: Rosalie Torres-Rioseco தமிழில்: ஆர். சிவகுமார் பியானோ வாசிப்பவர் உட்கார்ந்தபிறகு கொஞ்சம் செயற்கையாக இருமிவிட்டு ஒரு கணம் தீர்க்கமாக மனதை ஒருமுகப்படுத்துகிறார். ஓர் இசை வரியின் அலகு ஒன்று அரங்கத்தின் மௌனத்தைக் கலைத்து எழத்துவங்கி தெளிவாகவும் நிதானத்துடனும்...

    Read More
    error: Content is protected !!