Home » Home 12-10-22

வணக்கம்

கடந்து போன காலத்தின் தித்திப்புகளை நினைவில் மீட்டுக் கொண்டு வந்து திரும்ப ருசிப்பது அனைவருக்கும் பிடித்த செயல். இந்த இதழின் சிறப்புப் பகுதியான ‘அது ஒரு காலம்’, வாசிப்பின் ருசி அறிந்தவர்களுக்கு அத்தகையதொரு விருந்து. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலப் பத்திரிகை எழுத்தில் இருந்து சில சுவாரசியமான பக்கங்களை இந்த இதழில் பால கணேஷ் தந்திருக்கிறார். அந்நாளைய உரைநடை, அந்தக் காலத்து சினிமா செய்திகள், அப்போதைய நகைச்சுவை, அன்றைய ஓவியங்கள் என்று ஒவ்வொரு பிரிவிலும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார். வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் சுவாரசியம் ஒரு புறம் இருக்க, நாம் எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்க்க இது ஒரு வாய்ப்பு.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இதழில் நான்கு கட்டுரைகள் இது சார்ந்து வெளியாகியிருக்கின்றன. நோபல் பரிசு எவ்வாறு வழங்கப்படுகிறது என்று விளக்கி ஜெயரூபலிங்கம் எழுதியிருக்கிறார். மருத்துவ நோபல் பரிசு பெற்றிருக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோ எதனால் இவ்விருதுக்குத் தகுதி பெறுகிறார் என்று மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார் ராஜிக் இப்ராஹிம். அறிவியலைக்கூட இப்படியெல்லாம் இனிக்க இனிக்கச் சொல்ல முடியும் என்பது வியப்புத்தான். இலக்கியத்துக்கான விருது பெற்றிருக்கும் பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னோ குறித்து தர்ஷனா கார்த்திகேயன் விரிவான அறிமுகத்தைத் தந்திருக்கிறார். தமிழில் அவரைக் குறித்து வெளியாகும் முதல் கட்டுரை இதுதான். அப்புறம் சிவசங்கரியின் ‘நோ-பால்’. இது சிரிப்பதற்கு மட்டும்.

வட கொரியாவின் அணு ஆயுத முஸ்தீபுகள், ஏவுகணைப் பரிசோதனைகள் குறித்து அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். அமெரிக்கா எப்படி இன்னும் இந்த ஒரு தேசத்தை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது என்கிற வினா, அமெரிக்காவை நன்கறிந்த அத்தனைப் பேருக்கும் எழும். அதற்கு விடை தரும் விதமாக இந்த இதழில் (வட கொரியா, இது சரியா?) மிக விரிவானதொரு கட்டுரை எழுதியிருக்கிறார் பத்மா அர்விந்த். சர்வதேச அரசியலில் ஆர்வமுள்ள யாரும் தவறவிடக்கூடாத கட்டுரை இது.

அவ்வண்ணமே, ரணில் இலங்கை அதிபராகி நூறு நாள்கள் நெருங்குகின்றன. பொருளாதாரச் சீரழிவின் உச்சத்தைத் தொட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் தேசத்தை இடரிலிருந்து மீட்க இந்நாள்களில் அவர் என்ன செய்தார்? அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

ஸோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு குறித்த பாபுராஜின் கட்டுரை, துபாயில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் இந்து கோயில் குறித்த நசீமாவின் கட்டுரை, தமிழ் பத்திரிகைகளின் ஆதிகால வரலாற்றை சுவாரசியமாக விவரிக்கும் அறிவனின் கட்டுரை என்று இந்த இதழில் வாசிக்கவும் நேசிக்கவும் ஏராளமாக உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். நாம் இணைந்து இதனை ஒரு தரமான வாசிப்பு இயக்கமாக முன்னெடுப்போம்.

  • சிறப்புப் பகுதி: அது ஒரு காலம்

    நோபல் பரிசு

    எட்டுத் திக்கும்

    நம் குரல்

    ஆதரித்தால் அள்ளிக் கொடு!

    இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...

    உலகம்

    ‘சரி. பிரிந்துவிடுவோம்!’

    கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...

    உலகம்

    அப்பன் வீட்டுச் சொத்து: பரவும் பங்களாதேஷ் மாணவர் புரட்சி

    இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...

    உலகம்

    யார் இங்கு மான்ஸ்டர்?

    தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...

    உலகம்

    அமெரிக்கத் தேர்தல்: துணைவர் ஜாதகம்

    அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 15

    அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 15

    முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை -15

    15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 15

    15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -114

    114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 110

    110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...

    Read More
    error: Content is protected !!