Home » Home 12-10-22

வணக்கம்

கடந்து போன காலத்தின் தித்திப்புகளை நினைவில் மீட்டுக் கொண்டு வந்து திரும்ப ருசிப்பது அனைவருக்கும் பிடித்த செயல். இந்த இதழின் சிறப்புப் பகுதியான ‘அது ஒரு காலம்’, வாசிப்பின் ருசி அறிந்தவர்களுக்கு அத்தகையதொரு விருந்து. இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலப் பத்திரிகை எழுத்தில் இருந்து சில சுவாரசியமான பக்கங்களை இந்த இதழில் பால கணேஷ் தந்திருக்கிறார். அந்நாளைய உரைநடை, அந்தக் காலத்து சினிமா செய்திகள், அப்போதைய நகைச்சுவை, அன்றைய ஓவியங்கள் என்று ஒவ்வொரு பிரிவிலும் பார்த்துப் பார்த்துத் தேர்ந்தெடுத்திருக்கிறார். வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் சுவாரசியம் ஒரு புறம் இருக்க, நாம் எங்கிருந்து எங்கு நகர்ந்து வந்திருக்கிறோம் என்று ஒப்பிட்டுப் பார்க்க இது ஒரு வாய்ப்பு.

இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த இதழில் நான்கு கட்டுரைகள் இது சார்ந்து வெளியாகியிருக்கின்றன. நோபல் பரிசு எவ்வாறு வழங்கப்படுகிறது என்று விளக்கி ஜெயரூபலிங்கம் எழுதியிருக்கிறார். மருத்துவ நோபல் பரிசு பெற்றிருக்கும் ஸ்வீடனைச் சேர்ந்த ஸ்வாண்டே பாபோ எதனால் இவ்விருதுக்குத் தகுதி பெறுகிறார் என்று மிக அற்புதமாக விளக்கியிருக்கிறார் ராஜிக் இப்ராஹிம். அறிவியலைக்கூட இப்படியெல்லாம் இனிக்க இனிக்கச் சொல்ல முடியும் என்பது வியப்புத்தான். இலக்கியத்துக்கான விருது பெற்றிருக்கும் பிரெஞ்சு எழுத்தாளர் ஆனி எர்னோ குறித்து தர்ஷனா கார்த்திகேயன் விரிவான அறிமுகத்தைத் தந்திருக்கிறார். தமிழில் அவரைக் குறித்து வெளியாகும் முதல் கட்டுரை இதுதான். அப்புறம் சிவசங்கரியின் ‘நோ-பால்’. இது சிரிப்பதற்கு மட்டும்.

வட கொரியாவின் அணு ஆயுத முஸ்தீபுகள், ஏவுகணைப் பரிசோதனைகள் குறித்து அடிக்கடிக் கேள்விப்படுகிறோம். அமெரிக்கா எப்படி இன்னும் இந்த ஒரு தேசத்தை மட்டும் ஒன்றும் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறது என்கிற வினா, அமெரிக்காவை நன்கறிந்த அத்தனைப் பேருக்கும் எழும். அதற்கு விடை தரும் விதமாக இந்த இதழில் (வட கொரியா, இது சரியா?) மிக விரிவானதொரு கட்டுரை எழுதியிருக்கிறார் பத்மா அர்விந்த். சர்வதேச அரசியலில் ஆர்வமுள்ள யாரும் தவறவிடக்கூடாத கட்டுரை இது.

அவ்வண்ணமே, ரணில் இலங்கை அதிபராகி நூறு நாள்கள் நெருங்குகின்றன. பொருளாதாரச் சீரழிவின் உச்சத்தைத் தொட்டு மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் தேசத்தை இடரிலிருந்து மீட்க இந்நாள்களில் அவர் என்ன செய்தார்? அக்கு வேறு ஆணி வேறாக அலசி ஆராய்கிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.

ஸோஹோ நிறுவனர் ஶ்ரீதர் வேம்பு குறித்த பாபுராஜின் கட்டுரை, துபாயில் புதிதாகக் கட்டப்பட்டிருக்கும் இந்து கோயில் குறித்த நசீமாவின் கட்டுரை, தமிழ் பத்திரிகைகளின் ஆதிகால வரலாற்றை சுவாரசியமாக விவரிக்கும் அறிவனின் கட்டுரை என்று இந்த இதழில் வாசிக்கவும் நேசிக்கவும் ஏராளமாக உள்ளன.

மெட்ராஸ் பேப்பர் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். நாம் இணைந்து இதனை ஒரு தரமான வாசிப்பு இயக்கமாக முன்னெடுப்போம்.

சிறப்புப் பகுதி: அது ஒரு காலம்

நோபல் பரிசு

எட்டுத் திக்கும்

நம் குரல்

கலாசாரத்துக்குப் போதாத காலம்

இந்தியாவின் தனிச் சிறப்பு என்பது இங்குள்ள பல்வேறு விதமான பண்பாட்டு அடையாளங்களும் கலாசாரச் செழுமையும். அவை தமது தனித்தன்மையை விட்டுத் தராமல், அதே...

உலகம்

சிக்கல் சிங்காரவேலர்களின் கதை

பழைய குருடி கதவைத் திறக்க ஆரம்பித்திருக்கிறாள் என்று சில வாரங்களுக்கு முன்னர் ஆப்கன் விவகாரம் மீண்டும் சிக்கலாகிக்கொண்டிருப்பது குறித்து இங்கே...

உலகம்

மெக்ஸிகோ: தோண்டத் தோண்டக் குற்றம்

மெக்ஸிகோ என்பது ஒரு புதையல் பூமி. புதையல் என்றால் தங்கப் புதையல், பணக்கட்டுப் புதையல் அல்ல. தோண்டத்தோண் மனித உடல்கள் கிடைக்கும் பயங்கரப் பிராந்தியம்...

உலகம்

தள்ளாதே!

கலவரமூட்டும் சப்வே களேபரங்கள் மே 22 ஆம் தேதி காலை ஆறு மணிக்கு தன் பணியாளரின் செல்போனில் இருந்து வந்த அழைப்பை ஏற்றுப் பேசினார், மேத்தொ எக்ஸ்ப்ரஸ் கஃபே...

உலகம்

ஒரு போரும் பல ஒத்திகைகளும்

37 வயது பாவெல் – கட்டுப்போட்ட ஒரு கை கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருக்கிறது. மற்றொரு கை இயந்திர துப்பாக்கியைப் பிடித்து ரஷ்ய வீரர்களைச்...

நுட்பம்

சாலையைப் பார்த்துக் காரை ஓட்டவும்

கடைக்குபபோனோம், இருப்பதைப் பார்த்து நமக்குப் பிடித்ததைத் தேர்வு செய்து வாங்கி, வீட்டுக்குக் கொண்டு வந்து சிலகாலம் கழித்துப் பிடிக்கவில்லை என்றால்...

தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

கடவுளுக்குப் பிடித்த தொழில்- 28

தெய்வத்துக்கே வரும் சோதனை நமக்கெல்லாம் ஒரு சோதனை வந்தால் தெய்வத்திடம் போய் முறையிடலாம். அந்தத் தெய்வத்துக்கே சோதனை வந்தால்….? நமது உடலில் மரபணுப் பிழைகளைச் சரி செய்வதற்கென்றே சில மரபணுக்கள் உள்ளன என்று பார்த்தோம் அல்லவா? இவற்றினைப் பொதுவாகப் பழுதுபார்க்கும் மரபணுக்கள் எனலாம். சாதாரண மரபணுக்களில்...

Read More
உயிருக்கு நேர் தொடரும்

உயிருக்கு நேர் -28

28 சுவாமி விபுலானந்தர் (27.03.1892 – 19.07.1947) தமிழ் இசைக்கு உழைத்த தமிழ்ப் பெரியார் பலர் உண்டு. அவர்களில் நாவலர் சோமசுந்தர பாரதி, பாபநாசம் சிவன் போன்றவர்கள் தமிழிசைப் பாடல்கள் எழுதியதன் மூலம் தமிழிசையின் உள்ளடக்கத்துக்குப் பெருமை சேர்த்தார்கள். ஆபிரகாம் பண்டிதர் போன்ற வெகுசிலர் தமிழிசையின்...

Read More
குடும்பக் கதை தொடரும்

ஒரு குடும்பக் கதை – 54

54. கைதும் மிரட்டலும் இந்திய அரசியல் வரைபடத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு புள்ளிகள் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தன. ஜவஹர்லால் நேரு; சுபாஷ் சந்திரபோஸ் என்பவையே அந்தப் புள்ளிகளின் நாமகரணம்! அவர்கள் இருவரையும் வெகு தீவிரமாகக் கண்காணிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வைஸ்ராய்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 53

53 மிதப்பு டிரைவ்-இன் செல்ஃப் சர்வீசில் காபி வாங்கிக்கொண்டு வந்து, நடைவழியை ஒட்டி இருந்த மூன்று மேஜைகளில் காலியாக இருந்த நடு மேஜையில் உட்கார்ந்தான். மனம் பொங்கி வழிந்துகொண்டு இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல், பெரியமனுஷ தோரணையுடன் அமைதியாக இருக்க முயன்றான். அது அவன் இயல்பே இல்லை. மனத்தின்...

Read More
error: Content is protected !!