Home » Home 12-04-23

வணக்கம்

அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மதவாதிகள், மடாதிபதிகள், பாதிரியார்கள், கல்வியாளர்கள் என்று எல்லா தரப்பினர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சமீப காலமாகப் பெருகி வருகின்றன. இப்பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது கலாக்ஷேத்ரா. அங்கு பணிபுரியும் சில ஆசிரியர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் தேசம் முழுதும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. ஏனெனில், பல்லாண்டுக் காலமாக அவ்வமைப்பின் மீது போர்த்தப்பட்டிருந்த புனிதப் போர்வையின் கனம் அத்தகையது. பொறியியல் படிப்புக்கு ஐஐடி எப்படியோ, நாட்டியல் கல்விக்கு கலாக்ஷேத்ரா அப்படி. உலகெங்கிலும் இருந்து மாணவர்கள் அங்கே வந்து பயில்வது காலம் காலமாக உள்ள வழக்கம்.

ஐஐடி வளாகத்துக்குள் நிகழும் குற்றங்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கும் சூழலில் கலாக்ஷேத்ராவும் தனது புனிதப் புண்ணாக்கு மூட்டைகளை இறக்கி வைக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. நிறுவனம் என்பதென்ன? சில தனி நபர்களால் ஆனதுதானே? குற்றவாளிகள் எங்கும் இருப்பார்கள். எத்துறையிலும் இருப்பார்கள்.

இந்த இதழில் இடம் பெற்றுள்ள கோகிலாவின் ‘கலாக்ஷேத்ரா: என்ன நடக்கிறது?’ என்கிற கட்டுரை எச்சார்பும் இன்றி உண்மைகளை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகிறது. மீ-டூ என்பது வெறும் குற்றச்சாட்டுகளின் தொகுப்பாகத் தேங்கிவிடாமல் அவற்றின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசரமும் அவசியமும் அரசுக்கு இருக்கிறது. ஒரு கொலை அல்லது கொள்ளைச் சம்பவத்தை சாட்சிகளின் மூலமாகவும் ஆதாரங்களின் மூலமாகவும் நிரூபிக்க முடியும். பாலியல் அத்துமீறல்கள், சீண்டல்கள், சுரண்டல்கள் அத்தகையவை அல்ல. சாட்சியோ ஆதாரங்களோ இல்லாத காரணத்தினாலேயே இக்குற்றங்களில் ஈடுபடுவோர் தண்டனையில் இருந்து தப்பிப்பது நடைமுறை ஆகிவிடக் கூடாது. அப்படித்தான் அது ஆகும் என்றால், குற்றங்கள் மேலும் பெருகவே செய்யும்.

மீ-டூ குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் தண்டனைப் பரிந்துரைகள் தரவும் தனியொரு அமைப்பையே உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. அரசு ஆவன செய்ய வேண்டும்.

சர்வதேச அளவில் கடந்த வாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கிய பலஸ்தீன் அல் அக்ஸா தாக்குதல் சம்பவம் குறித்து ரும்மான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆண்டுதோறும் ரமளான் சமயத்தில் அப்பள்ளி வாசல் வளாகத்தில் இஸ்ரேலியப் படைகள் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தாக்குதல் நடத்துவதன் ஒரே நோக்கம், இஸ்லாமியர்களைச் சீண்டி, போருக்கு இழுப்பது மட்டும்தான். அல் அக்ஸாவில் ஒரு சிறிய தாக்குதலை மேற்கொண்டால் அங்கே காஸாவில் ஹமாஸ் பதில் தாக்குதலை ஆரம்பிக்கும். அதைச் சுட்டிக்காட்டி பலஸ்தீன் முஸ்லிம்களின் மீது முழுநீளத் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆண்டுதோறும் அங்கே நடப்பது.

இவ்விவகாரத்தின் ஆழம் தொட்டுப் பேசுகிற இக்கட்டுரை, அல் அக்ஸாவின் வரலாற்று முக்கியத்துவத்தையும் விரிவாக விளக்குகிறது.

ஸ்காட்லந்தின் புதிய முதலமைச்சராகியிருக்கும் பாகிஸ்தானி வம்சாவழியைச் சேர்ந்த ஹம்சா யூசஃப் குறித்து ஜெயரூபலிங்கம் எழுதியிருக்கும் கட்டுரை, ரஷ்யா-சீனா-சவூதி அரேபியா மூன்று நாடுகளும் கூட்டணி வைத்து அமெரிக்க டாலரைப் பின்னுக்குத் தள்ள மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, நேட்டோவில் பின்லாந்து இணைந்திருப்பதன் அரசியல் முக்கியத்துவத்தைச் சுட்டும் வினுலாவின் கட்டுரை, என்.சி.ஈ.ஆர்.டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சில அபாயகரமான திருத்தங்களைச் சுட்டிக்காட்டும் பாண்டியராஜனின் கட்டுரை என்று இந்த இதழில் கனம் கூடிய படைப்புகள் அதிகம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

  • உலகம் யாவையும்

    உலகம்

    சாலையெங்கும் ஆரஞ்சு!

    துபாய் என்றதும் ஆயிரெத்தெட்டு விஷயங்கள் நினைவுக்கு வரும். பிரமாண்டமான கட்டடங்கள் கொண்ட ஷேக் ஜாயித் சாலையைக் கடக்காமல் துபாயை யாரும் தரிசித்திருக்க...

    உலகம்

    பைடனுக்கு வந்த சிக்கல்!

    ஐக்கிய அமெரிக்கக் குடியரசு அதிபர் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. அதிபர் பைடன், இஸ்ரேல் காஸா போர் குறித்து எடுக்கும் முடிவுகள் அவரின்...

    உலகம்

    இடைக்காலப் போர் நிறுத்தம்

    தேர்வுக்கூடத்தி்ல் டீச்சரிடம் பேப்பர்களை ஒப்படைக்கக் கடைசி ஐந்து நிமிடம் என்று மணி அடித்ததும் இன்னும் தீவிரமாக எழுதுவார்கள் சில மாணவர்கள். அப்படி...

    உலகம்

    பூமியின் சாம்பியன்கள்!

    ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை...

    நம்மைச் சுற்றி

    சைபர் க்ரைம் தொடரும்

    கத்தியின்றி ரத்தமின்றி – 1

    டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள்...

    நம் குரல்

    நீதிக்குத் தலை வணங்கு

    மாநில அரசுகளுக்கும் ஆளுநர்களுக்கும் ஏன் பெரும்பாலும் ஒத்துப் போவதில்லை? என்றால், மத்தியில் ஆளும் கட்சி மாநிலத்தில் ஆளாத பட்சத்தில் ஆளுநர் ஓர்...

    சுற்றுலா

    கோயிலுக்குள் ஓட்டல்

    இவ்வாண்டின் கோடை விடுமுறையில் நியூஜெர்சி மாகாணத்தில் ராபின்ஸ்வில்லியில் கட்டி முடிக்கப்பட்டிருக்கிறது ஸ்வாமி நாராயணர் கோயில். 2010ம் ஆண்டில் தொடங்கிய...

    நம் குரல்

    ஆட்டம் மிக அதிகம்

    நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள், விளையாட்டு – கேளிக்கை என்பதற்கு அப்பால் நமக்குச் சில செய்திகளை மௌனமாகத் தெரியப்படுத்துகின்றன...

    நம் குரல்

    மன்னிக்க வாய்ப்பில்லை!

    ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி, காங்லீபாக் மக்கள் புரட்சிகரக் கட்சி, புரட்சிகர மக்கள் முன்னணி என்கிற மூன்று அரசியல் கட்சிகளையும், இக்கட்சிகளின்...

    சுற்றுலா

    ஜருகு மலை: யாரும் சுற்றாத சுற்றுலாத் தலம்

    சேலம் கிழக்குதொடர்ச்சி மலைகளால் சூழப்பட்டஒரு மாவட்டம்.வடக்கே சேர்வராயன்மலை, தெற்கே ஜருகுமலை, கிழக்கே கோதுமலை, தென்மேற்கே கஞ்சமலை என கிட்டத்தட்ட...

    நம் குரல்

    நிறுத்துங்கள்!

    காஸாவில் பொது மக்கள் என்று யாருமில்லை; அங்கிருக்கும் அனைவரும் தீவிரவாதிகள்தாம் என்று இஸ்ரேலிய அமைச்சர் ஒருவர் சொல்லியிருக்கிறார். ஊர் உலகத்துக்காக...

    தொடரும்

    சைபர் க்ரைம் தொடரும்

    கத்தியின்றி ரத்தமின்றி – 1

    டிஜிட்டல் அரஸ்ட் அக்டோபர் மாதத்தின் அதிகாலைப் பொழுது. ஃபரீதாபாத்தில் வானம் தூறிக் கொண்டிருந்தது. வழக்கத்தைவிடச் சற்று முன்னதாகவே எழுந்துவிட்டாள் அனிதா. இருபத்தி மூன்று வயதாகிறது அவளுக்கு. தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் வேலை. வேலை பிடித்திருக்கிறதா பிடிக்கவில்லையா என்ற சராசரி ஐ.டிக்காரர்களின்...

    Read More
    தொடரும் வான்

    வான் -11

    “ஒரு மில்லியன் பூக்களைத் தயார் செய்து கொள்ளுங்கள். அந்தப் பெண்ணைக் கொண்டாடித் தீர்க்க வேண்டும்”. வாலண்டினா தெரஸ்கோவா என்கிற இளம் பெண், விண்ணுக்குப் போனதைக் கொண்டாடத் தயாராகியது நிகிதா குருசேவின் சோவியத். வான மைதானத்தில் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த பனிப்போரில் சோவியத் தேசம் மிகுந்த பெருமிதத்தோடு...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 79

    79. நேரு, இந்திரா கைது காந்திஜி தன் உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்று உணர்ச்சி பொங்க முழக்கமிட்டாலும், இறுதியாக அவர் தனக்கே உரிய கடிவாளத்தைப் போடத் தவறவில்லை. போராட்டத்தில் இறங்கலாம். ஆனால், அதில் வன்முறைகளுக்குத் துளியும் இடமில்லை! நம்முடைய போராட்டம் நூறு சதவிதம் அஹிம்சை வழியில்தான் நடக்க...

    Read More
    திறக்க முடியாத கோட்டை தொடரும்

    திறக்க முடியாத கோட்டை – 7

    07 – போரால் மீண்டெழுந்த சோவியத் நாள்: 22 – ஜூன் – 1941. இடம்: கதின் கிராமம், பெலாரஸ் எட்டு வயது விக்டர் ஆண்ட்ரீவிச், வைக்கோல் களஞ்சியத்தில் அம்மாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தான். கிராமத்திலிருந்த அனைவரும் அங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர். கதவு வெளிப்புறம் தாழிடப்பட்டிருந்தது...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 78

    78 எதிர்கொள்ளல் 2 யார் கண்னிலும் படும் முன் போய்விடவேண்டும் என்று ஜீன்ஸ் குர்தா ஜோல்னா பையுடன் விறுவிறுவென லிஃப்டை பார்க்க நடந்தவன், ‘யாரை சார் பாக்கணும்.’ என்று வழிமறிக்கப்பட்டான். ‘இந்த டிபார்ட்மெண்ட்டுதான். எல்டிசி.’ ‘அப்படியா சார். நான் யாரோ வடநாட்டு...

    Read More
    error: Content is protected !!