Home » Home 12-04-23

வணக்கம்

அரசியல்வாதிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மதவாதிகள், மடாதிபதிகள், பாதிரியார்கள், கல்வியாளர்கள் என்று எல்லா தரப்பினர் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சமீப காலமாகப் பெருகி வருகின்றன. இப்பட்டியலில் சமீபத்தில் இணைந்திருப்பது கலாக்ஷேத்ரா. அங்கு பணிபுரியும் சில ஆசிரியர்கள் மீது வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் தேசம் முழுதும் அதிர்வலைகளை எழுப்பியிருக்கின்றன. ஏனெனில், பல்லாண்டுக் காலமாக அவ்வமைப்பின் மீது போர்த்தப்பட்டிருந்த புனிதப் போர்வையின் கனம் அத்தகையது. பொறியியல் படிப்புக்கு ஐஐடி எப்படியோ, நாட்டியல் கல்விக்கு கலாக்ஷேத்ரா அப்படி. உலகெங்கிலும் இருந்து மாணவர்கள் அங்கே வந்து பயில்வது காலம் காலமாக உள்ள வழக்கம்.

ஐஐடி வளாகத்துக்குள் நிகழும் குற்றங்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவரத் தொடங்கியிருக்கும் சூழலில் கலாக்ஷேத்ராவும் தனது புனிதப் புண்ணாக்கு மூட்டைகளை இறக்கி வைக்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. நிறுவனம் என்பதென்ன? சில தனி நபர்களால் ஆனதுதானே? குற்றவாளிகள் எங்கும் இருப்பார்கள். எத்துறையிலும் இருப்பார்கள்.

இந்த இதழில் இடம் பெற்றுள்ள கோகிலாவின் ‘கலாக்ஷேத்ரா: என்ன நடக்கிறது?’ என்கிற கட்டுரை எச்சார்பும் இன்றி உண்மைகளை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகிறது. மீ-டூ என்பது வெறும் குற்றச்சாட்டுகளின் தொகுப்பாகத் தேங்கிவிடாமல் அவற்றின் மீதான நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டிய அவசரமும் அவசியமும் அரசுக்கு இருக்கிறது. ஒரு கொலை அல்லது கொள்ளைச் சம்பவத்தை சாட்சிகளின் மூலமாகவும் ஆதாரங்களின் மூலமாகவும் நிரூபிக்க முடியும். பாலியல் அத்துமீறல்கள், சீண்டல்கள், சுரண்டல்கள் அத்தகையவை அல்ல. சாட்சியோ ஆதாரங்களோ இல்லாத காரணத்தினாலேயே இக்குற்றங்களில் ஈடுபடுவோர் தண்டனையில் இருந்து தப்பிப்பது நடைமுறை ஆகிவிடக் கூடாது. அப்படித்தான் அது ஆகும் என்றால், குற்றங்கள் மேலும் பெருகவே செய்யும்.

மீ-டூ குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் தண்டனைப் பரிந்துரைகள் தரவும் தனியொரு அமைப்பையே உருவாக்குவது காலத்தின் கட்டாயமாகியிருக்கிறது. அரசு ஆவன செய்ய வேண்டும்.

சர்வதேச அளவில் கடந்த வாரம் மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கிய பலஸ்தீன் அல் அக்ஸா தாக்குதல் சம்பவம் குறித்து ரும்மான் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். ஆண்டுதோறும் ரமளான் சமயத்தில் அப்பள்ளி வாசல் வளாகத்தில் இஸ்ரேலியப் படைகள் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தாக்குதல் நடத்துவதன் ஒரே நோக்கம், இஸ்லாமியர்களைச் சீண்டி, போருக்கு இழுப்பது மட்டும்தான். அல் அக்ஸாவில் ஒரு சிறிய தாக்குதலை மேற்கொண்டால் அங்கே காஸாவில் ஹமாஸ் பதில் தாக்குதலை ஆரம்பிக்கும். அதைச் சுட்டிக்காட்டி பலஸ்தீன் முஸ்லிம்களின் மீது முழுநீளத் தாக்குதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துவிடுவார்கள். இது ஆண்டுதோறும் அங்கே நடப்பது.

இவ்விவகாரத்தின் ஆழம் தொட்டுப் பேசுகிற இக்கட்டுரை, அல் அக்ஸாவின் வரலாற்று முக்கியத்துவத்தையும் விரிவாக விளக்குகிறது.

ஸ்காட்லந்தின் புதிய முதலமைச்சராகியிருக்கும் பாகிஸ்தானி வம்சாவழியைச் சேர்ந்த ஹம்சா யூசஃப் குறித்து ஜெயரூபலிங்கம் எழுதியிருக்கும் கட்டுரை, ரஷ்யா-சீனா-சவூதி அரேபியா மூன்று நாடுகளும் கூட்டணி வைத்து அமெரிக்க டாலரைப் பின்னுக்குத் தள்ள மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகளை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரை, நேட்டோவில் பின்லாந்து இணைந்திருப்பதன் அரசியல் முக்கியத்துவத்தைச் சுட்டும் வினுலாவின் கட்டுரை, என்.சி.ஈ.ஆர்.டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் சில அபாயகரமான திருத்தங்களைச் சுட்டிக்காட்டும் பாண்டியராஜனின் கட்டுரை என்று இந்த இதழில் கனம் கூடிய படைப்புகள் அதிகம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

  • உலகம் யாவையும்

    உலகம்

    மீண்டும் மதவாதம்: இனி மீளுமா இலங்கை?

    கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...

    உலகம்

    திருப்பி அடிக்கும் வழி

    கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...

    உலகம்

    மக்களே, கடன் கொடுங்கள்!

    ‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...

    நம்மைச் சுற்றி

    கணினி

    மேனேஜரைக் காதலிப்போம்!

    “உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...

    நம் குரல்

    செங்கோல் அரசியல்

    ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...

    நுட்பம்

    ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

    உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...

    நம் குரல்

    என்ன செய்யப் போகிறார் மோடி?

    இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...

    கணினி

    நல்லவனுக்கு எதுக்கு இன்காக்னிட்டோ?

    “யோக்கியனுக்கு இருட்டுல என்னடா வேல?” என்றொரு வடிவேலு பட வசனம். நாமனைவருமே பார்த்து ரசித்திருப்போம். அதற்கு இணையானது தான், “நல்லவனுக்கு எதுக்குடா...

    நம் குரல்

    சாராயச் சாவுகளும் உதவாத தீர்வுகளும்

    எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 52

    52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...

    Read More
    கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

    கடவுளுக்குப் பிடித்த தொழில் – 27

    மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 53

    53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

    Read More
    தல புராணம் தொடரும்

    ‘தல’ புராணம் – 27

    தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் -27

    27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...

    Read More
    error: Content is protected !!