தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
வணக்கம்
இன்று (புதன் கிழமை - ஜனவரி 11) மாலை ஐந்து மணிக்கு சென்னை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் மெட்ராஸ் பேப்பர் வாசகர் திருவிழா - 13 நூல்கள் வெளியீட்டு விழா நடைபெறுகிறது. மெட்ராஸ் பேப்பர் வாசகர்கள் அனைவரையும் இவ்விழாவுக்கு அன்புடன் வரவேற்கிறோம்.
இது நம் குடும்ப விழா. ஓராண்டுக் காலம் எழுத்துப் பயிற்சி. ஏழு மாத கால பத்திரிகைப் பயிற்சி. அதன் பிறகு ஒரு புத்தகம். கடந்த இரண்டு ஆண்டுகளாக நமது எழுத்தாளர்கள் உண்டார்களா, உறங்கினார்களா, குடும்பத்தைக் கவனித்தார்களா, வேலைக்குச் சென்றார்களா என்றுகூடத் தெரியாது. இரவு பகலாக எழுதிக்கொண்டேதான் இருந்தார்கள். அது பலனளிக்கும் இத்தருணத்தில் உங்கள் வருகையும் வாழ்த்தும் அவர்களுக்குப் பேருவகை அளிக்கும்.
தமிழில் கதை எழுத, கவிதை எழுத ஆயிரம் பல்லாயிரம் பேர் உண்டு. தினமும் நூற்றுக்கணக்கான கவிஞர்கள் பிறந்துகொண்டேதான் இருக்கிறார்கள். ஆனால் ஒரு குறிப்பிட்ட இயல் சார்ந்து ஆய்வு செய்து, நுணுக்கமான விவரங்கள் சேகரித்து, ஆதாரபூர்வமானதொரு அபுனைவு நூலை எழுத வருவோர் மிகவும் குறைவு. இதுதான் சமரசமே இல்லாத மக்கள் எழுத்து. மக்களுக்கு உதவும் எழுத்து. ஆனால் சிரமமானது. நீடித்த கவனமும் அர்ப்பணிப்பும் தீவிரமும் கோருகிற ஒரு துறை இது.
நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் பிரபு பாலாவின் ‘ஐஐடி கனவுகளும்’, ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குலமு’ம் பேய் வேகத்தில் விற்பதாகப் பதிப்பாளர் ராம்ஜி நரசிம்மன் சொன்னார்.
இதன் அர்த்தம் புரிகிறதா? மாணவர்கள் தம் மேற்படிப்புக்கு வழி காட்டும் ஒரு சரியான நூலைத் தமிழில் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். உதவி இயக்குநர்கள் அடுத்தக் கட்டத்தை எட்டிப் பிடிக்க தொண்டர் குலத்தை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறார்கள். அவ்வளவுதான் விஷயம்.
மெட்ராஸ் பேப்பர் வெளியீடாக வந்திருக்கும் பதிமூன்று நூல்களுமே இந்த ஆண்டை ஆளப்போகின்றன என்பதில் எங்களுக்கு ஐயமில்லை. இம்மகிழ்ச்சியை நீங்களல்லாமல் வேறு யாருடன் நாங்கள் சேர்ந்து கொண்டாட முடியும்? அதனால்தான் சொல்கிறோம். அவசியம் விழாவுக்கு வருக.
தவிர, இது மேடையில் இருப்போர் மட்டும் பேசுகிற விழா அல்ல. வாசகர் திருவிழா. மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் உள்பட குழுவினர் அனைவருடனும் நீங்கள் விவாதிக்கலாம். கேள்விகள் கேட்கலாம். இதழ் குறித்த உங்கள் கருத்துகளை, விமரிசனங்களை முன்வைக்கலாம். புத்தகங்கள் குறித்துப் பேசலாம். உங்களைச் சந்திப்பதற்காகவே நமது எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் உலகெங்கிலும் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார்கள். இன்றைய விழாவிலும் நாளை (வியாழன்) முழுதும் சென்னை புத்தகக் காட்சியிலும் உங்களுடன் உரையாடுவதற்காகவே காத்திருப்பார்கள்.
O
இந்த இதழில் சி. சரவண கார்த்திகேயன், ஆத்மார்த்தி, நர்மி, ஷாராஜ், சித்ரன் ரகுநாத் ஆகியோர் சிறுகதைகள் எழுதியிருக்கிறார்கள். தமிழர் திருநாளை ஒட்டி இது உங்களுக்கு ஓர் எதிர்பாரா நல்விருந்தாக இருக்கும் என்று நம்புகிறோம்.
பொங்கல் பண்டிகை என்று நாம் கொண்டாடும் இத்திருநாள் உலகெங்கும் பல்வேறு விதங்களில், வடிவங்களில் கொண்டாடப்படுவதுதான். தைத்திருநாளின் சரித்திரத்தை சுவைபட விவரிக்கும் கோகிலா பாபுவின் கட்டுரை உங்கள் ரசனைக்கு விருந்தாக இருக்கும்.
இது மகர ஜோதி மாதமும் கூட. நமது செய்தியாளர் அ. பாண்டியராஜன் தமது சபரிமலை யாத்திரை அனுபவங்களின் அடிப்படையில் எழுதியுள்ள கட்டுரை, பக்திப் பரவச உணர்வை முற்றிலும் வேறொரு ருசியில் மறு அறிமுகப்படுத்துகிறது.
வாசக நண்பர்களுக்கு மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த பொங்கல் திருநாள் வாழ்த்துகள். இன்று (ஜனவரி 11) மாலை கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறவுள்ள நமது வாசகர் திருவிழாவில் சந்திப்போம்.
பொங்கல் சிறப்புச் சிறுகதைகள்
ருசிகரம்
ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும்...
உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாகவும் அதி முக்கியமான வர்த்தகக் கேந்திரமாகவும் விளங்கும் சிங்கப்பூரில் ஒரு புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு...
தொடரும்
97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...
101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...
உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது. ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர்...
அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...
2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...
2. ஆம்பள சாமி, பொம்பள சாமி இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது...