Home » Home 1-3-23

வணக்கம்

இந்த இதழ், சுற்றுலா சிறப்பிதழ். இப்போது முதல் திட்டமிட்டால்தான் விடுமுறைக் காலத்தில் சென்று வர வசதி. அதை விடுங்கள். இந்தச் சிறப்புப் பகுதியின் தலையாய சிறப்பு, இதில் எழுதியிருக்கும் பெரும்பாலானவர்கள், புதிய எழுத்தாளர்கள். தொடர்ச்சியாக மெட்ராஸ் பேப்பர் அறிமுகப்படுத்தும் எழுத்தாளர்கள் வரிசையில் இன்று இணைந்திருப்பவர்கள்.

நீலகிரி மாவட்டம் என்றாலே ஊட்டி, குன்னூர் என்றுதான் நாம் சிந்திப்போம். ஒரு மாறுதலுக்கு மஞ்சூர் என்னும் பூவுலக சொர்க்கத்தை அறிமுகப்படுத்துகிறார் சிவராமன் கணேசன். தரங்கம்பாடி கோட்டையை அதன் வரலாற்று வாசனையுடன் சுற்றிக் காட்டுகிறார் கே.எஸ். குப்புசாமி. கர்நாடக மாநிலம் கூர்கில் உள்ள யானைகள் சரணாலயம் குறித்து வினுலா எழுதியுள்ள கட்டுரையைப் படித்த மறுகணம் ஒரு யானைக் குட்டியைத் தழுவிக் கொஞ்ச வேண்டும் என்கிற வேட்கை உண்டாவதை உணர்வீர்கள். சிலிர்ப்பூட்டும் முர்தேஷ்வர் பயணம் குறித்து காயத்ரி. ஒய் எழுதியுள்ள கட்டுரை, தென் கர்நாடகத்தின் ஏழு திருத்தலங்களுக்கு உங்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்று சுற்றிக் காட்டும் நா. மதுசூதனன் எழுதியுள்ள கட்டுரை, அமிர்தசரஸ் பொற்கோயில் யாத்திரை குறித்து நந்தினி கந்தசாமி எழுதியுள்ள கட்டுரை - ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவம், வேறு வேறு ருசி. எழுத்துலகை நாளை ஆளப்போகும் இப்புதியவர்களின் படைப்புகளை வாசித்துவிட்டு உங்கள் கருத்துகளை எழுதுங்கள்.

சென்ற வாரம் முழுதும் நாம் சிவராத்திரியை முன்னிட்டு சிவனை நினைத்தோமோ இல்லையோ, ஜக்கி வாசுதேவைக் குறித்து நிறையப் பேசினோம். சமூக ஊடகங்களில், பத்திரிகைகளில், தொலைக்காட்சிகளில் வேறு எதுவுமே கிடையாது. ஜனாதிபதி வந்தது, தமன்னா வந்தது, உருவேற்றிய ருத்திராட்சம், ஆனந்தக் களி நடனம் என்று அது ஒன்றுதான் பேச்சு. எவ்வளவோ கார்ப்பரேட் சாமியார்களை இத்தேசம் கண்டிருக்கிறது. ஒவ்வொரு காலக்கட்டத்துக்கு ஒருவர் இருப்பார். ஆள்பவராக இல்லாவிட்டாலும் ஆட்டி வைப்பவராக. இக்காலம் கையிலேந்தியிருக்கும் நட்சத்திர கார்ப்பரேட் சாமியார், ஜக்கி வாசுதேவ். நாட்டின் குடியரசுத் தலைவர், பிரதமர் முதல் அத்தனை பேரையும் தன் வயப்படுத்துவது எளிதல்ல. எப்படி அவர் இதனைச் சாதித்தார்? ஒரு கொலைக் குற்றச்சாட்டில் தொடங்கிய அவரது வாழ்க்கை இன்றடைந்திருக்கும் உயரம் கற்பனைக்கு அப்பாற்பட்டது. ஆனால் கூர்ந்து கவனிக்க வேண்டியது. ஜக்கியைக் குறித்து இந்த இதழில் கோகிலா பாபு எழுதியிருக்கும் கட்டுரை, இன்று வரையிலான அவரது வாழ்வின் முக்கியக் கண்ணிகளைக் கோத்து, அதன் மூலம் அவரது இருப்பும் செயல்பாடும் நேரடியாகவும் மறைமுகமாகவும் நமக்குச் சொல்லும் செய்தி என்னவென்று ஆராய்கிறது. தவற விடக்கூடாத மிக முக்கியமான கட்டுரை இது.

அதைப் போலவே அ. பாண்டியராஜன் எழுதியிருக்கும் ‘இனி என்ன ஆகும் அதிமுக?’ வழக்கு என்றால் ஒருவர் வெல்ல வேண்டும். ஒருவர் தோற்க வேண்டும். அதுவல்ல விஷயம். எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி அக்கட்சியின் விசுவாசிகளாக இருக்கும் பல லட்சக் கணக்கானவர்களின் மனநிலை இன்று எப்படி இருக்கும்? அடுத்தத் தேர்தல் என்ற ஒன்று வரும்போது பழைய உற்சாகம் மிச்சம் இருக்குமா அவர்களுக்கு? அதிமுகவின் வீழ்ச்சி என்பது இரண்டு விதங்களில் கவலைக்குரியது. முதலாவது, தமிழ்நாட்டில் ஒரு வலுவான எதிர்க்கட்சி இல்லாமல் போவது. இரண்டாவது, மதவாத சக்திகள் ஊடுருவ வழி செய்வது. இரண்டுமே பெரும் பிரச்னைகள். இந்தக் கட்டுரை அப்பிரச்னையின் ஆழத்தைச் சரியாகப் புரிய வைக்கும்.

இவை தவிர ஆ. பாலமுருகன் எழுதியுள்ள கட்டுரை, அமெரிக்காவில் பரவும் புதிய போதைப் பொருள் குறித்த ஆழமான அலசலைத் தருகிறது. இது நம்மை நெருங்காதிருக்க மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிறது. உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நிறைந்துவிட்டது. போர் இன்னும் ஓயவில்லை. அவலங்கள் தீரவில்லை. இது பற்றியதொரு விரிவான கட்டுரையை பத்மா அர்விந்த் எழுதியிருக்கிறார்.

இதழ் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். அடுத்த வாரம் மகளிர்தின சிறப்புப் பக்கங்களுடன் சந்திப்போம்.

  • சிறப்புப் பகுதி: சுற்றுலா

    ஊரும் உலகும்

    நம் குரல்

    ஆதரித்தால் அள்ளிக் கொடு!

    இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...

    உலகம்

    ‘சரி. பிரிந்துவிடுவோம்!’

    கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...

    தமிழ்நாடு

    உதயநிதியும் உலக நியதியும்

    உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராவாரா?. தமிழக அரசியல் களத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இன்றைக்கு இதுதான் விவாதிக்கப்படுகிறது. விடை மிகவும்...

    உலகம்

    அப்பன் வீட்டுச் சொத்து: பரவும் பங்களாதேஷ் மாணவர் புரட்சி

    இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...

    உலகம்

    யார் இங்கு மான்ஸ்டர்?

    தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...

    உலகம்

    அமெரிக்கத் தேர்தல்: துணைவர் ஜாதகம்

    அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...

  • தொடரும்

    aim தொடரும்

    AIM IT – 15

    அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 15

    முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை -15

    15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 15

    15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -114

    114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 110

    110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...

    Read More
    error: Content is protected !!