இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
வணக்கம்
வீட்டுக்கடன், வாகனக் கடன், சொந்தக் கடன், கல்விக் கடன் என்பதெல்லாம் இன்று சாதாரண மனிதர்களின் அன்றாடங்களுள் ஒன்றாகிவிட்டன. கிடைக்கிறதே; பயன்படுத்திக்கொள்வோம் என்பது ஒன்று. தேவைக்குப் பயன்படுத்திக்கொள்வது ஒன்று. ஆனால் பெரும் பணக்காரர்களைப் போல ஏய்ப்பதற்கென்றே வங்கிக்கடன் கோரும் வசதி இன்னும் சாதாரண மனிதர்களுக்கு வரவில்லை; அதற்கு வாய்ப்பும் இல்லை.
இந்த இதழில் வங்கிக் கடன்கள் சார்ந்த பல முக்கியமான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அனைத்தும், கடன் வாங்கும் நடுத்தர வர்க்கத்தினர் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டியவை. மகளிர் சுய உதவிக் குழுக்களின் மூலம் பெறக்கூடிய லாபங்கள் பற்றி ஓரளவு நமக்குத் தெரியும். அதன் அனைத்து வாய்ப்புகளையும் விவரிக்கும் பாபுராஜின் கட்டுரை முதல், கடன் தரும் நிறுவனங்களை எப்படி / எதனைக் கொண்டு தேர்ந்தெடுப்பது என்று விளக்கும் பாண்டியராஜனின் கட்டுரை வரை ஒவ்வொன்றும் பொருட்படுத்தி கவனமுடன் வாசிக்க வேண்டியவை.
விடுதலைப் புலிகள் இருந்தவரை ஈழத் தமிழர்களைக் குறித்து இங்கே பேசிக்கொண்டாவது இருந்தார்கள். இன்று அத்தேசமே பொருளாதாரச் சீர்கேட்டுப் படுகுழியில் விழுந்து கிடக்கும் சூழலில் தமிழர்களின் இன்றைய நிலைமை குறித்துத் தெரிய வருவதே அரிதாகியுள்ளது. இலங்கையில் இன்றைக்கு உள்ள தமிழர் இயக்கங்கள், கட்சிகள், கூட்டமைப்புகள் என்னதான் செய்கின்றன? விளக்குகிறது ஸஃபார் அஹ்மதின் கட்டுரை.
பிரபல அமெரிக்கக் கல்வியாளர் பெஞ்சமின் புளூமின் கருத்தாக்கங்களை முன்வைத்து, நமது கல்வி அமைப்பின் மீது வலுவான வினாக்களை எழுப்பும் அனந்தசாய்ராமின் ‘சரியாகத்தான் படிக்கிறோமா?’ - இன்றைய ஆசிரியப் பெருமக்கள் பொருட்படுத்தி வாசிக்க வேண்டியதொரு கட்டுரை.
ஷார்ஜா சர்வதேசப் புத்தகக் காட்சி குறித்த நஸீமாவின் கட்டுரை, நெட்ஃப்ளிக்ஸின் வெற்றிக் கதை, வங்கி இயல் வளர்ந்த வரலாற்றை விவரிக்கும் அறிவனின் கட்டுரை, அரோமா பொன்னுசாமியின் நிறுவனம் பால்பொருள் உற்பத்தித் துறையில் ஆவினுக்கு அடுத்த இடத்தைப் பெற்றதன் சூட்சுமத்தை விவரிக்கும் ராஜ்ஶ்ரீ செல்வராஜின் கட்டுரை என இந்த இதழில் உங்கள் ரசனைக்கு விருந்தளிக்கும் பலதரப்பட்ட கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
இன்னொரு முக்கியமான விஷயம். மெட்ராஸ் பேப்பரின் முதல் இதழிலிருந்து தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருக்கும் சில பகுதிகள் இந்த இதழுடன் நிறைவடைகின்றன. செந்தூரம் ஜெகதீஷின் ‘என் கனவை விட்டுச் செல்கிறேன்’, ராஜேஷ் பச்சையப்பனின் ‘தொண்டர் குலம்’, சுவாமி ஓம்காரின் ‘சித்’, முருகு தமிழ் அறிவனின் ‘வரலாறு முக்கியம்’, ராஜ்ஶ்ரீ செல்வராஜின் ‘வென்ற கதை’ - இவற்றுக்கெல்லாம் நீங்கள் அளித்த வரவேற்பு என்றும் மறக்க முடியாதது. இந்த இதழில் நிறைவடையும் தொடர்கள் மிக விரைவில் புத்தகங்களாகவும் வெளிவரவிருக்கின்றன. அது குறித்த தகவல்கள் விரைவில் வரும்.
அடுத்த தொடர்கள்?
அந்த அறிவிப்பு அடுத்த வாரம்.
சிறப்புப் பகுதி: கடன்படும் கலை
இங்கும் அங்கும்
கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
தொழிலோடு உறவாடு
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...