கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
வணக்கம்
ஒரு நல்ல கதை உங்களை என்ன செய்யும்? சிலிர்க்கச் செய்யலாம். பேச்சற்றுப் போகச் செய்யலாம். வாய் ஓயாமல் அதைக் குறித்துக் காண்போரிடமெல்லாம் பேசச் செய்யலாம். திரும்பத் திரும்ப எடுத்துப் படிக்கச் செய்யலாம். முகமறியாத அந்த ஆசிரியரை மானசீகத்தில் எண்ணி விழுந்து வணங்கச் செய்யுமா?
இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் ‘யூதாஸின் முகம்’ அப்படியொரு அனுபவத்தைத் தர வல்லது. போனி சேம்பர்லின் என்கிற அந்த எழுத்தாளரைக் குறித்து கூகுளில்கூட எந்த விவரமும் கிடையாது. பெயரை மட்டும் வைத்து அவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என்று யூகிக்கலாமே தவிர, உண்மையிலேயே பெண்தானா என்றும் தெரியாது. எப்பேர்ப்பட்ட எழுத்து இது. எப்படி இப்படி ஒரு கதையை இவரால் எழுத முடிந்தது என்று திகைத்துத் திகைத்துத் தணிவீர்கள். படிக்க ஐந்து நிமிடங்கள் கூட ஆகாது. ஆனால், படித்துவிட்டால் ஆயிரம் ஜென்மம் எடுத்தாலும் மறக்க மாட்டீர்கள். இதனை மொழிபெயர்த்து அளித்த ஆர். சிவகுமாருக்கும் இக்கதையையும் அதன் மேன்மையைச் சிலாகிக்கும் அழகான கட்டுரையையும் அளித்திருக்கும் மாமல்லனுக்கும் மெட்ராஸ் பேப்பரின் மனமார்ந்த நன்றி.
இது பிப்ரவரி அல்லவா? காதலர் தினத்தை முன்னிட்டு இரண்டு சிறப்புக் கட்டுரைகள் வெளியாகியிருக்கின்றன. சரவண கார்த்திகேயனும் கோகிலா பாபுவும் அவற்றை எழுதியிருக்கிறார்கள். யார் யாரோ, என்னென்னவோ, எப்படி எப்படியோ எழுதத்தான் போகிறார்கள். ஆனால் இந்த இரு பார்வைகள்-கோணங்களின் தனித்துவம் உங்களை வெகுவாகக் கவரும்.
இந்த இதழின் மிக முக்கியமான கட்டுரை அதானி என்கிற தொழிலதிபரின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் சித்திரிக்கும் ‘அதானி: மூன்றாம் இடத்திலிருந்து முட்டுச் சந்துக்கு’. ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டுவதுதான் சிரமம். சரியச் செய்வது மிக எளிது. உலகமே இன்று இந்தியாவை கவனிக்கிறது. இந்தச் சரிவின் காரணங்களை அலசிக்கொண்டிருக்கிறது. ஒன்றுமே நடவாதது போல நமது மத்திய அரசு இதனைக் கடக்கச் சொல்லலாம். ஆனால் கூடை போட்டுக் கோழியை மூடி வைப்பது போல ஒரு தேசியத் தலைக் குனிவை மறைத்து வைக்க இயலாது. நடந்த அபத்தங்களின் தொடக்கப் புள்ளி முதல் இறுதி வரை எதையும் விடாமல் அலசி ஆராய்ந்திருக்கிறார் கட்டுரையாளர் கோகிலா பாபு.
அமெரிக்க வான்வெளியில் பறந்து, வீழ்த்தப்பட்ட சீனாவின் உளவு பலூன் குறித்த பத்மா அர்விந்தின் கட்டுரை, கடலூரில் உள்ள ஓர் இடிந்த கோட்டையின் புதைந்த சரித்திரத்தைத் தேடி எடுக்கும் ஶ்ரீதேவி கண்ணனின் கட்டுரை, ஜெருசலேத்தில் உள்ள அல் அக்ஸா மசூதிக்குச் சென்று பிரச்னையை மேலும் ஊதிப் பெரிதாக்கியிருக்கும் இஸ்ரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் செயல்பாட்டை முன்வைத்து இஸ்ரேல்-பாலஸ்தீன் பிரச்னையின் இன்றைய கொதிநிலையை ஆராயும் நஸீமாவின் கட்டுரை என்று இந்த இதழில் நீங்கள் ஊன்றிப் படிக்க ஏராளமாக உள்ளன.
இதழ் உங்களுக்குப் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் நமது சந்தாதாரராக்குங்கள். மேலும் சிறந்த பல கட்டுரைகளுடன் அடுத்த வாரம் சந்திப்போம்.
வெளி உலகம்
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
உள் உலகம்
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
மேலும் ரசிக்க
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...