நடந்து முடிந்த புத்தகக் காட்சியில் உங்களை ஈர்த்த விஷயங்கள் எவை எனச் சிலரிடம் கேட்டோம். கவிஞர் மகுடேசுவரன் : அரங்கத்திற்குப் பத்து டோக்கன் வீதம் மதிய விருந்திற்குக் கொடுக்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தி கடைக்கு வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்கள் முதல் பொதுமக்கள் வரை சாப்பிட்டுக்கொள்ளலாம்...
வணக்கம்
சென்னையின் கலாசார அடையாளங்களுள் ஒன்றான புத்தகக் காட்சி நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் (ஜனவரி 6) தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இம்முறை புத்தகக் காட்சியின் தனிச் சிறப்பு, இது சர்வதேசப் புத்தகக் காட்சியாகவும் உருப்பெறவிருப்பதுதான். 16-18 மூன்று தினங்கள் மட்டுமே என்றாலும் ஒரு நல்ல தொடக்கத்துக்கு இது சரியாகவே இருக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல பெரிய பதிப்பு நிறுவனங்கள் இதற்கெனச் சென்னை வருகின்றன. மொழியாக்க ஒப்பந்தங்கள் நிறைய நிகழப் போகின்றன. இதெல்லாம் தமிழ்ச் சூழல் இதற்கு முன் காணாதது. தமிழக அரசின் அக்கறை மிக்க முன்னெடுப்புகளுக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த இதழின் சிறப்புப் பகுதியாக இடம் பெற்றிருப்பது ஒரே ஒரு துணுக்குக் கட்டுரைதான். ஆனால் சென்னை புத்தகக் காட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அது உள்ளடக்கியுள்ளது. புத்தகக் காட்சிக்குச் செல்கிறவர்களுக்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
சென்ற இதழில் அறிவித்திருந்தது போல ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பதிமூன்று நூல்கள் வெளியீட்டை ஒரு வாசகர் திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூத்த பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் பதிப்பாளர்கள் ராம்ஜி நரசிம்மன் மற்றும் காயத்ரி இருவரும் புத்தகங்களை வெளியிட, எழுத்தாளர் என். சொக்கன் வாழ்த்துரை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமே நமது எழுத்தாளர்களும் வாசகர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கலந்துரையாடுவதுதான். மெட்ராஸ் பேப்பர் குழுவினர் அனைவரும் கலந்துகொள்ளும் இவ்விழாவில் நீங்கள் யாரிடமும் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். இதழ் குறித்து. உள்ளடக்கம் குறித்து. மொழி குறித்து. அடுத்தடுத்த முயற்சிகள் குறித்து. எது வேண்டுமானாலும். ஆசிரியர் உள்பட அத்தனை பேரும் பதிலளிக்கக் காத்திருப்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாசகர்களைச் சந்திப்பதற்காகவே பல்வேறு நாடுகளிலிருந்து நமது எழுத்தாளர்கள் சென்னைக்கு வருகிறார்கள். நீங்களும் வந்து இணையும்போது நிகழ்ச்சி களை கட்டிவிடும்.
புத்தாண்டைப் புத்தகங்களுடனும் புத்தக விழாக்களுடனும் தொடங்குவது பேருவகை தரக்கூடியது. ஆண்டு முழுதும் இந்த உவகை நீடித்திருக்க வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: சென்னை புத்தகக் காட்சி 2023
உலகைச் சுற்றி
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு தொடங்கி ஓராண்டு நெருங்குகிறது. இதோ அதோ என்கிறார்களே தவிர போர் முடிவதற்கான அறிகுறியே இல்லை. ஜெயித்துவிடுவோம்...
‘புது அப்பா’ என்கிற பதவியுயர்வு தந்த உவகையுடன் மாடிப்படிகளில் வேகமாய் ஏறுகிறான் அந்த இளைஞன். கையில், குழந்தை பிறந்த நேரம் குறிக்கப்பட்ட...
இந்தியாவை, அதன் மாநிலங்களை, அதன் கலை, கலாசார, பாரம்பரியங்களை, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அந்த நிலத்தில் செழித்து வளர்ந்த பண்பாடுகளை, வாழ்வைத் துறந்து...
பென்கிவிர் வருகையால் இஸ்ரேலில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பாலஸ்தீன மக்கள் இனித் தங்களுக்கு விடிவுகாலமே வரப் போவதில்லை என்று துவண்டு...
அவரது பெயர் கைஸ் சையத். டியூனிசியாவின் பல்கலைக்கழகங்கள் ஆணையத்தின் இயக்குநர். பல கல்லூரிகளுக்கு விசிட்டிங் பேராசிரியர். 2014-ம் ஆண்டு டியூனிசியா...
உலகவாசிகள் அனைவருக்கும் ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி ஒன்று என்றால், சீனர்களுக்கு மட்டும் அது இல்லை. ஏனென்றால் சீனர்களின் ஆண்டு 354 நாட்கள் கொண்டது...
நம்மைச் சுற்றி
‘…இது என்னுடைய இடம், என்னுடைய மண் என்று திடமாக அமர வேண்டும். ஞாபகத்தில் கொள்ளுங்கள்… பாரதியோ, உவேசாவோ, இராமானுஜரோ, கணிதமேதை இராமானுஜமோ, வாஜ்பாயோ...
தற்போது ஐபோனின் பாதி விலையில் தரமான, உயர்ரக ஆன்ட்ராய்ட் செல்பேசிகள் சாம்சங், கூகிள் நிறுவனங்களிடமிருந்து வருகின்றன. இவை ஐபோனோடு நேருக்கு நேர் நிற்கக்...
ஹொவாவோ கிம்மரேஸ் ரோஸா ஆங்கிலத்தில்: வில்லியம் எல். கிராஸ்மன் தமிழில்: ஆர். சிவகுமார் கடமை உணர்வுமிக்க, ஒழுங்குநிறைந்த, நேர்மையான ஒருமனிதர் என் அப்பா...
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ண முதச்யதே பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ணமேவா வசிஷ்யதே ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி – ஈசாவாஸ்ய உபநிடதம் ‘இறைவன்...
தொடரும்
பொதி சுமக்கும் மனிதர் 1991-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்திலுள்ள ஆஸ்டின் நகரத்தில் ராஜேஷ் எனும் இந்திய இளைஞன் சோர்வுடன் தனது அபார்ட்மெண்டிற்குள் நுழைந்தான். அவனது சோர்வுக்கான காரணம் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்து முடித்து கிட்டத்தட்ட மூன்று மாதங்களாகிறது. ஆனாலும்...
35. புதுக் கட்சி லக்னௌவில் பரபரப்பான சூழ்நிலையில் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. சி.ஆர்.தாஸ், காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தின் நடைமுறை குறித்துத் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சி.ஆர்.தாசின் கருத்துக்களை ஆதரித்தார். மோதிலால் நேருவோ, காந்திஜி தலைமையேற்று...
34 வம்பு வண்ணதாசன் பேச்சைக் கேட்டுத் திரும்பிவந்திருக்கக் கூடாதோ என்று தோன்றிற்று. போபோ போய் வேலையைப் பார் என்பதைப்போல விரட்டாதகுறையாய் அனுப்பிவைத்த ஏசி மீது எரிச்சலாய் வந்தது. இந்த ஆபீஸ் அந்த ஆபீஸ் அந்த ஏசி இந்த அதிகாரி என்று எவனும் வேறில்லை. எண்ணத்தில் செயல்பாட்டில் அதிகாரத்தில் எல்லாம் ஒன்றுதான்...
உ.வே.சாமிநாதய்யர் 1800’களின் மத்தி வரை தமிழ்நாட்டின் தமிழிலக்கியங்கள் என்று அறியப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவடிகள் வடிவில்தான் இருந்தன. சுவடிகள் பனையோலையின் மூலம் உருவாக்கப்பட்டன. சுவடிகளை உருவாக்கப் பனையோலைகளை எடுத்து, ஒரே அகலமுள்ள ஓலைகளை முதலில் தேருவார்கள்; பின்னர் அவற்றை வெந்நீரில்...
நரம்புச் சிதைவு ஸ்டெம் செல்களைக் கொண்டு பாதிக்கப்பட்ட உடலுறுப்புகளை மீளுருவாக்கம் செய்யும் மருத்துவ முறைகள், அதுவும் அரசினால் அனுமதிக்கப்பட்ட ஒரு சில சிகிச்சை முறைகள் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளன. பெரும்பான்மையானவை ஆய்வு நிலையிலேயே உள்ளன. clinical trials எனப்படும் இத்தகைய சுமார் 5000 ஆய்வுகள்...