Home » Home 04-01-23

வணக்கம்

சென்னையின் கலாசார அடையாளங்களுள் ஒன்றான புத்தகக் காட்சி நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் (ஜனவரி 6) தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இம்முறை புத்தகக் காட்சியின் தனிச் சிறப்பு, இது சர்வதேசப் புத்தகக் காட்சியாகவும் உருப்பெறவிருப்பதுதான். 16-18 மூன்று தினங்கள் மட்டுமே என்றாலும் ஒரு நல்ல தொடக்கத்துக்கு இது சரியாகவே இருக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல பெரிய பதிப்பு நிறுவனங்கள் இதற்கெனச் சென்னை வருகின்றன. மொழியாக்க ஒப்பந்தங்கள் நிறைய நிகழப் போகின்றன. இதெல்லாம் தமிழ்ச் சூழல் இதற்கு முன் காணாதது. தமிழக அரசின் அக்கறை மிக்க முன்னெடுப்புகளுக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.

இந்த இதழின் சிறப்புப் பகுதியாக இடம் பெற்றிருப்பது ஒரே ஒரு துணுக்குக் கட்டுரைதான். ஆனால் சென்னை புத்தகக் காட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அது உள்ளடக்கியுள்ளது. புத்தகக் காட்சிக்குச் செல்கிறவர்களுக்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.

சென்ற இதழில் அறிவித்திருந்தது போல ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பதிமூன்று நூல்கள் வெளியீட்டை ஒரு வாசகர் திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூத்த பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் பதிப்பாளர்கள் ராம்ஜி நரசிம்மன் மற்றும் காயத்ரி இருவரும் புத்தகங்களை வெளியிட, எழுத்தாளர் என். சொக்கன் வாழ்த்துரை வழங்குகிறார்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமே நமது எழுத்தாளர்களும் வாசகர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கலந்துரையாடுவதுதான். மெட்ராஸ் பேப்பர் குழுவினர் அனைவரும் கலந்துகொள்ளும் இவ்விழாவில் நீங்கள் யாரிடமும் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். இதழ் குறித்து. உள்ளடக்கம் குறித்து. மொழி குறித்து. அடுத்தடுத்த முயற்சிகள் குறித்து. எது வேண்டுமானாலும். ஆசிரியர் உள்பட அத்தனை பேரும் பதிலளிக்கக் காத்திருப்பார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாசகர்களைச் சந்திப்பதற்காகவே பல்வேறு நாடுகளிலிருந்து நமது எழுத்தாளர்கள் சென்னைக்கு வருகிறார்கள். நீங்களும் வந்து இணையும்போது நிகழ்ச்சி களை கட்டிவிடும்.

புத்தாண்டைப் புத்தகங்களுடனும் புத்தக விழாக்களுடனும் தொடங்குவது பேருவகை தரக்கூடியது. ஆண்டு முழுதும் இந்த உவகை நீடித்திருக்க வாழ்த்துகள்.

சிறப்புப் பகுதி: சென்னை புத்தகக் காட்சி 2023

உலகைச் சுற்றி

நம் குரல்

என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...

உலகம்

அடையாளங்களை அழித்தொழிப்போம்!

ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது...

சமூகம்

ஒரு பேரழிவின் மிச்சங்கள்

அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக்...

இந்தியா

பிரதமரின் பிங்க் நோட்டுப் புரட்சி

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் வைத்த சிப்ஸ் நமுத்துப் போனதால் திரும்பப்...

ஆளுமை

லிண்டா யாக்கரினோ: புதிய தலைவியும் பெரிய சவால்களும்

ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார்...

நம்மைச் சுற்றி

நம் குரல்

என்ன செய்யப் போகிறார் மோடி?

இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...

நகைச்சுவை

நடிக்க வா!

அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி...

நம் குரல்

சாராயச் சாவுகளும் உதவாத தீர்வுகளும்

எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 51

    51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...

    Read More
    தல புராணம் தொடரும்

    ‘தல’ புராணம் – 26

    கடின உழைப்பாளி நிறைய எதிர்பார்ப்புகளோடு இரண்டரை மணி நேரத்துக்கும் மேலான நீண்ட பேருந்துப் பயணம் செய்தார் ஒரு இளைஞர். போன இடத்தில் மற்றவர்களைப் பார்த்தால் கோட்டும் சூட்டும் டையுமாக இருக்கிறார்கள். பயணத்தினால் வந்த களைப்புடன் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கும் தன் கோலத்தைப் பார்க்க அவருக்கே கஷ்டமாக இருந்தது...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் -26

    26. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (16.09.1881 – 24.10.1953) தமிழினம் என்பதற்கு உலகம் அறிந்த ஒரு உரைகல் வாக்கியம் உண்டு. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதுதான் அது. உலகம் முழுக்கப் புகழ்பெற்ற அந்த வாக்கியத்தின் பொருள், எந்த ஊரும் எந்தன் ஊரே, உலகத்தில் வாழும் எந்த ஒரு மானுடரும்...

    Read More
    கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

    கடவுளுக்குப் பிடித்த தொழில் – 26

    இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? இறப்பினைக் கண்டு அஞ்சாதவர் இந்த உலகில் இருக்க முடியாது. ஒரு சில பேர் இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலானோர்க்கு இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கை நரகம்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கக்கூடிய இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? ஒரு நாள், இரு நாள் இல்லை… பல...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை -52

    52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...

    Read More
    error: Content is protected !!