கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
வணக்கம்
சென்னையின் கலாசார அடையாளங்களுள் ஒன்றான புத்தகக் காட்சி நெருங்கிவிட்டது. நாளை மறுநாள் (ஜனவரி 6) தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைக்கிறார். இம்முறை புத்தகக் காட்சியின் தனிச் சிறப்பு, இது சர்வதேசப் புத்தகக் காட்சியாகவும் உருப்பெறவிருப்பதுதான். 16-18 மூன்று தினங்கள் மட்டுமே என்றாலும் ஒரு நல்ல தொடக்கத்துக்கு இது சரியாகவே இருக்கும். முப்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பல பெரிய பதிப்பு நிறுவனங்கள் இதற்கெனச் சென்னை வருகின்றன. மொழியாக்க ஒப்பந்தங்கள் நிறைய நிகழப் போகின்றன. இதெல்லாம் தமிழ்ச் சூழல் இதற்கு முன் காணாதது. தமிழக அரசின் அக்கறை மிக்க முன்னெடுப்புகளுக்கு நம் மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த இதழின் சிறப்புப் பகுதியாக இடம் பெற்றிருப்பது ஒரே ஒரு துணுக்குக் கட்டுரைதான். ஆனால் சென்னை புத்தகக் காட்சி தொடர்பான அனைத்து விவரங்களையும் அது உள்ளடக்கியுள்ளது. புத்தகக் காட்சிக்குச் செல்கிறவர்களுக்கு அது மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
சென்ற இதழில் அறிவித்திருந்தது போல ஜனவரி 11ம் தேதி புதன்கிழமை அன்று நமது மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்களின் பதிமூன்று நூல்கள் வெளியீட்டை ஒரு வாசகர் திருவிழாவாக நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். கேகே நகர் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. மூத்த பத்திரிகையாளர் திருப்பூர் கிருஷ்ணன் தலைமையில் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனத்தின் பதிப்பாளர்கள் ராம்ஜி நரசிம்மன் மற்றும் காயத்ரி இருவரும் புத்தகங்களை வெளியிட, எழுத்தாளர் என். சொக்கன் வாழ்த்துரை வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சமே நமது எழுத்தாளர்களும் வாசகர்களும் நேருக்கு நேர் சந்தித்துக் கலந்துரையாடுவதுதான். மெட்ராஸ் பேப்பர் குழுவினர் அனைவரும் கலந்துகொள்ளும் இவ்விழாவில் நீங்கள் யாரிடமும் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம். இதழ் குறித்து. உள்ளடக்கம் குறித்து. மொழி குறித்து. அடுத்தடுத்த முயற்சிகள் குறித்து. எது வேண்டுமானாலும். ஆசிரியர் உள்பட அத்தனை பேரும் பதிலளிக்கக் காத்திருப்பார்கள்.
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாசகர்களைச் சந்திப்பதற்காகவே பல்வேறு நாடுகளிலிருந்து நமது எழுத்தாளர்கள் சென்னைக்கு வருகிறார்கள். நீங்களும் வந்து இணையும்போது நிகழ்ச்சி களை கட்டிவிடும்.
புத்தாண்டைப் புத்தகங்களுடனும் புத்தக விழாக்களுடனும் தொடங்குவது பேருவகை தரக்கூடியது. ஆண்டு முழுதும் இந்த உவகை நீடித்திருக்க வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: சென்னை புத்தகக் காட்சி 2023
உலகைச் சுற்றி
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
மிகத் தீவிரமான விஷ்ணுபக்தனான இந்திரதுய்மன் என்ற அரசன் காட்டிற்கு வேட்டைக்குச் செல்கிறான். அங்கு வசிக்கும் பழங்குடியினரிடம் பேசும்பொழுது அவர்களது...
பிரஹஸ்தன் என்பவன் ஒரு ராமாயணக் கதாபாத்திரம். ராவண சேனையின் தலைமைப் போர் வீரன். ஒரு வகையில் ராவணனுக்கு மாமன் முறை. ராட்சச வீரர்களிலேயே மிகவும் வலுவான...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
நம்மைச் சுற்றி
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சில வருடங்களுக்கு ஒருமுறை மொத்தமாக ஏற்றாமல் ஒவ்வொரு வருடமும் கட்டண மாறுபாடுகளைச் செய்கிறது...
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடைகள் அடைக்கப்பட்டு, காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில் அடக்கம்...
தடை செய்யப்பட்ட ஓர் இயக்கத்துக்கு ஆதரவாக ஆள் சேர்த்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், கடந்த வாரம் தமிழகத்தில் பத்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டு...
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...