கடந்தசில தினங்களாகச் சமூக வலைத்தளங்களிலும் சர்வதேச ஊடகங்களிலும் துபாய் இளவரசி ஷேக்கா பற்றிய செய்திகள் காட்டுத் தீ போலப் பரவின. இன்ஸ்டாக்ராமில் தலாக்...
வணக்கம்
மெட்ராஸ் பேப்பரை ஏன் அச்சிதழாகக் கொண்டு வரக் கூடாது?
இந்தக் கேள்வியை அநேகமாக வாரம் ஒருவராவது கேட்கிறார். தமிழில் பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் அச்சிதழ்களே தமது அந்திமத்தைக் காணத் தொடங்கியிருக்கும் நிலையில் புதிதாகத் தொடங்கப்பட்ட இணைய இதழ் ஒன்றினை அச்சில் கொண்டுவருவது என்பது பல நடைமுறைச் சிக்கல்களை உள்ளடக்கியது. அதில் முதலும் பெரிதுமானது, பொருளாதாரம். மாத இதழ், காலாண்டிதழ் என்றால்கூடச் சிறிது தப்பிக்க முடியும். இணைய வார இதழை அச்சில் கொண்டு வருவது என்பது எளிதல்ல.
இணைய இதழாகவேகூட இது நீடித்திருக்க சந்தாதாரர்களின் எண்ணிக்கை பெருகவேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் இது கதைகளாலும் கவிதைகளாலும் சினிமா செய்திகளாலும் நிறைந்த பத்திரிகை அல்ல. அற்பக் கேளிக்கை அம்சங்களை முற்றிலுமாக விலக்கி வைத்துவிட்டு உலக அளவில் நிகழும் முக்கியமான சம்பவங்கள் அனைத்தைக் குறித்தும் நாம் எழுதுகிறோம். அரசியல், அறிவியல், பொருளாதாரம், நிதி, வர்த்தகம், சமூகம், கலை, இலக்கியம் என ஒவ்வொரு துறை சார்ந்தும் கனமிகு கட்டுரைகளை ஆகச் சுலபமாக வாசிக்கத்தக்க மொழியில் தருகிறோம்.
வாசிப்புப் பழக்கம் குறைந்து வருவதாகப் பெரும்பான்மை சமூகம் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் ஒரு புதிய, தரம்மிக்க வாசகர் சமூகத்தையே உருவாக்கும் பணியில் மெட்ராஸ் பேப்பர் ஈடுபட்டிருக்கிறது. இப்பெரும் பணியில் எங்களோடு தோள்சேரத்தான் உங்களை வேண்டுகிறோம்.
மெட்ராஸ் பேப்பரைத் தொடர்ந்து வாசிக்கும் உங்களுக்கு இது பிடித்திருக்குமானால் உங்கள் நண்பர்களுக்கு நமது இதழைப் பரிந்துரை செய்யுங்கள். உறவினர்கள், நண்பர்கள், அன்பர்களுக்குப் பிறந்த நாள், திருமண நாள் வருமானால் ஒரு மெட்ராஸ் பேப்பர் சந்தாவை நீங்கள் அவர்களுக்குப் பரிசாகத் தரலாம். நாநூறு ரூபாய் ஆண்டுச் சந்தா என்பது பெரிய தொகையல்ல. நல்ல உணவகம் சென்று ஒருவேளை உண்டால்கூட இதனைக் காட்டிலும் அதிகம் செலவாகும் என்பதை அறிவீர்கள்.
உங்களிடம் நாங்கள் முன்வைக்கும் கோரிக்கை இதுதான். மெட்ராஸ் பேப்பர் அடுத்தடுத்த உயரங்களை எட்ட உங்கள் ஒத்துழைப்பு ஒன்றுதான் மூலக் காரணியாக இருக்க முடியும். இதன் ஒவ்வொரு வாசகரும் ஒரு புதிய சந்தாதாரரையேனும் கொண்டு வருவது ஒன்றே இந்த இதழ் தழைக்க வழி.
செய்வீர்கள் அல்லவா?
உற்றுப் பார்
இந்த வாரம் பங்களாதேஷ் சமூக ஊடகங்களில் ஒரு நீச்சல் தடாகத்தில் நான்கைந்து பேர் பாய்ந்து நீந்திக் கொண்டிருக்க, சுற்றிவர ஒரு கூட்டம் வேடிக்கை பார்க்கும்...
தற்போது தென்கொரியாவில் ஒரு வீடியோ வைரலாகி இருக்கிறது. மூன்றாம் வகுப்புப் படிக்கும் ஒரு மாணவன் பள்ளி நேரம் முடியும் முன்பே பையைத் தூக்கிக் கொண்டு...
அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சூடேறி இருக்கிறது. ஒரு பக்கம் குற்றச்சாட்டுகளின் நாயகனாக விளங்கியும் டொனால்ட் டிரம்ப், சரியாமல்...
நம்மைச் சுற்றி
இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நேற்று (ஜூலை 23) வெளியிடப்பட்டது. எப்போதும் போல நல்லதும் அல்லதும் கலந்த அறிக்கைதான். ஒவ்வொன்றையும்...
“வாயை மூடு“ என்று நம்மிடம் யாராவது சொன்னால் நமக்கு கோபம்தான் வரும். ஏனெனில் அது மனிதர்களிடமிருந்து வரும் சாதாரணக் கட்டளை வாக்கியம். ஆனால், அதனையே...
ரசனை
“வாயை மூடு“ என்று நம்மிடம் யாராவது சொன்னால் நமக்கு கோபம்தான் வரும். ஏனெனில் அது மனிதர்களிடமிருந்து வரும் சாதாரணக் கட்டளை வாக்கியம். ஆனால், அதனையே...
தொடரும்
அந்த நாளும் வந்திடாதோ “அடேயப்பா… இதெல்லாம் செய்யுதா ஏ.ஐ?” என்னும் பிரமிப்பு இன்று அதிகரித்துள்ளது. ஆனால் இது வெறும் தொடக்கம் மட்டுமே. ஏ.ஐ என்கிற இராமாயணத்தில் இப்போது தான் பாலகாண்டம் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்று நாம் பயன்படுத்திக் கொண்டிருப்பது “கான்வெர்சேஷனல் ஏ.ஐ”. உரையாடும் ஏ.ஐ. இந்த உரையாடல்...
முரசு சிஸ்டம்ஸ் விலையின்றி ஓரிரண்டு எழுத்துருக்களை இணையத்தில் வெளியிட்டிருந்தாலும் இருபதுக்கும் மேற்பட்ட எழுத்துருக்களை வணிக நோக்கில் விற்பனையும் செய்து கொண்டிருந்தார் முத்து. அவருடைய முரசு சிஸ்டம்ஸ் நிறுவனம் இப்பணிகளைச் செய்தது. நண்பர்களுடன் சேர்ந்தும் பின்னர் தனியாகவும் பலவாக இந்நிறுவனம் மாறுதல்...
15. நமக்கு நாமே பண்ணையார் எண்பதுகள், தொண்ணூறுகளில் வந்த பல தமிழ்ப் படங்களில் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை போட்ட ஒரு பண்ணையார் இருப்பார். அவரிடம் ஏகப்பட்ட பேர் வேலை செய்வார்கள். அவர்களையெல்லாம் அவர் மிகுந்த அக்கறையுடன் கவனித்துக்கொள்வார். அந்த வேலையாட்களுடைய வீட்டில் ஏதாவது திருமணம், காதுகுத்து...
15 ஆதிமூலமெனும் அலெக்ஸா ஒரு சம்பவம். யாரும் எதிர்பாராதது. உலக மக்கள் அனைவரையும் திடுக்கிட வைத்த சம்பவம். ஒரு நாள் என்றால் ஒரு நாள் முழுவதும் உலகம் இயங்கிய வேகம் குறைந்தது என்பது மறுக்க முடியாத உண்மை. விண்டோஸ் கணினிகள் செயல்படாமல் போயின. ஆன் செய்ததும் ஒரு எரர் மெசேஜ் வந்தது. அதை Blue Screen of Death...
114 இந்தி-சீனி பாய்-பாய் 1950-களில் சீன – இந்திய உறவுக்கு ஓர் கவர்ச்சிகரமான சொற்றொடர் பயன்படுத்தப்பட்டது. அதுதான் ‘இந்தி-சீனி பாய்-பாய்’ அதாவது இந்தியர்களும், சீனர்களும் சகோதரர்கள். இதன் மூலமாக, பிரதமர் நேரு இருநாட்டு மக்களுக்கும் இடையில் கலாசாரம் மற்றும் இலக்கியத்தில் நேரடி உறவினை ஏற்படுத்த...
110 பரிமாணம் கேஸ் அடுப்பு வந்து இறங்கியதில் அம்மா மகன் இருவருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. ஆபீஸிலிருந்து அப்பாவின் பணம் வந்து, கட்டிலும் சைக்கிளும் வாங்கியதில், தரையோடு தரையாய்க் கிடந்த அவன் வாழ்க்கை உயர்ந்ததைப்போல கேஸ் அடுப்பில்தான் உண்மையிலேயே அம்மாவின் வாழ்வு உயர்ந்திருப்பதாக அவனுக்குத்...