Home » வாக்களிக்கும் நேரம்
நம் குரல்

வாக்களிக்கும் நேரம்

குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள் சரியாக இருக்க வேண்டும். மின்சாரம் சிக்கலின்றிக் கிடைக்க வேண்டும்.

கட்சிகளின் கொள்கை, கோட்பாடு, சித்தாந்தம் வேதாந்தமெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. இந்த நான்கும் ஒரு மாநிலத்தில் எப்போதுமே சரியாக இருந்துவிடுமானால், மக்கள் அந்த ஆட்சியை மாற்ற நினைக்க மாட்டார்கள். மேலோட்டமாகப் பார்த்தால் எல்லாம் எங்கும் உள்ளதுதானே என்று தோன்றலாம். ஆனால் யாருடைய ஆட்சிக்காலம் தடையே இல்லாமல் பல்லாண்டுகளுக்குத் தொடர்ந்திருக்கிறது என்று கவனியுங்கள். தமிழ்நாட்டில் எம்ஜிஆரைத் தவிர இன்னொருவர் கிடையாது.

எம்ஜிஆர் பெரிய அரசியல் ஞானி இல்லை. செய்ததெல்லாம் சரியானவை என்று சொல்ல முடியாது. ஆனால் மேற்சொன்ன நான்கு விஷயங்களிலும் அவரது ஆட்சிக்காலத்தில் சிக்கலே இருந்தது கிடையாது. அதனால்தான் இருந்தவரை அசைத்துப் பார்க்க முடியாதவராக இருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!