Home » நாவல் தொடர்

Tag - நாவல் தொடர்

இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 81

81 குழப்பம் நம்பியை நடுத்தெருவில் விட்டுவிட்டு வந்துவிட்டானே தவிர அவர் சொன்ன வார்த்தைகள் அவனை விடுவதாக இல்லை. ஒருவேளை அவர் சொல்வது உணமையோ. அந்தக் கதையைப் படித்திருக்காவிட்டால் நாம் இந்தக் கதையை எழுதியிருக்கதான் மாட்டோமோ. இல்லை. ஒரேயடியாய் அப்படிச் சொல்லிவிட முடியாது. அப்படிப் பார்க்கபோனால் நாம்...

Read More
இலக்கியம் நாவல்

ஆபீஸ் – 50

50 நிறைவு சிரித்தபடி, ‘நீங்க வருவீங்கனு எதிர்பார்த்தேன்’ என்றார் கடையில் தம் அறைக்குள் அமர்ந்திருந்த சுந்தர ராமசாமி. உக்கும். வரணும்னு எதிர்பாத்தேன்னு சொன்னா என்ன குறைஞ்சிடுவீங்களா என்று உள்ளூர சிணுங்கிக்கொண்டான். அவனை உட்காரச் சொல்லிவிட்டு, ‘ஒரு நிமிஷம்’ என்றபடி கடையின்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 29

29 வந்துடு   உச்சி வெயில் மண்டையைச் சுட்டது. கலைவாணர் அரங்கத்தில் ஏதாவது படம் இருக்குமே என்று தோன்றவே ரிச்சி தெருவிலிருந்து அப்படியே வாலாஜா ரோடுக்காய் போனான். வரிசையில் நின்றிருக்கையில் சென்னை ஃபில்ம் சொசைட்டி சிவக்குமார் தென்படவும் ஹலோ என்றான். என்ன, எதோ கேள்விப்பட்டனே என்றான் அவன்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 28

28 வேட்கையும் பிரசாதமும் மாலையில் ஆபீஸை விட்டுக் கிளம்பி, டிராபிக் குறைந்து சாலையைத் தாண்டி எதிர்ப்புறம் போக வழி கிடைக்கவேண்டி,வண்டி வளாகத்தின் கதவருகில் காத்திருக்கையில், வாயில் சிகரெட் புகைய துச்சமாகப் பார்த்த அந்த முகம் – கருப்புக் கண்ணாடிக்குள்ளிருந்து தெரிந்த, இரவெல்லாம் தூங்கவிடாமல்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 22

22 கெளரவமாக வாழ்வது எப்படி? ஆபீஸ் கொஞ்சம் பழகிடுச்சி. ஆனாலும் என்னவோ மாதிரி இருக்கு.  புதுசா என்ன ப்ராப்ளம். ஹி ஈஸ் ஓகே சார்னானே சுகவனம்.  ஏசி கடி சின்னச் சின்னதா இன்னும் இருந்துக்கிட்டுதான் இருக்கு. ஆனாலும் பெருசா இல்லே. ஆனா ஆபீஸுக்குப் போறதே கடியா இருக்கு.  அதுக்கு யாரும் ஒண்ணும் பண்ணமுடியாது...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 20

20. கைராசி ஏசிய பாத்துட்ட போல என்று கண் சிமிட்டியபடி சிரித்தான் சுகுமாரன். கம்மனாட்டி. லவ் டே க பால் என்று அவனை மனதிற்குள் திட்டிக்கொண்டான். தப்பில்லப்பா வயசுலையும் சரி பதவிலையும் சரி நம்பளவிடப் பெரியவங்க கிட்டக் கொஞ்சம் விட்டுக் குடுத்துப் போறதுல நாம ஒண்ணியும் கொறஞ்சு போயிர மாட்டோம். என்ன சார்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 19

19 மானக்கேடு ரங்கனுக்கு ஒன்று அவன் அப்பன் துரைராஜுக்கு ஒன்று என – ஐசி பேப்பர்களை எழுதியபடியே – அவனையறியாமல் இடதுகையால் வறட்டு வறட்டென காலை சொறிந்துகொண்டதில், எப்போதும் வேர்வையாய்த் துளிர்க்கிற எக்ஸீமா ரத்தத்துளிகளாய் வெளிப்பட்டது. நான்கு ஐந்து வருடங்களுக்கு முன் யானைக்கால் போல பாதம்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 18

18 புகை சைக்கிளில் இருந்து இறங்கும்போது, மொட்டை மாடியில் ஆண்ட்டனா இருக்கிறதா என்று அனிச்சையாகத் தலை அண்ணாந்தது. அதற்குள் எப்படி டிவி வந்திருக்கமுடியும் என்று அவனுக்கே அபத்தமாகப் படவே, ஆனாலும் தான் இவ்வளவு பரக்காவெட்டியாக இருக்கக்கூடாது என்று தோன்றியது. 0 வீட்டுக் கதவை வேகமாகத் தட்டினான்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 16

16 அறையும் வீடும் மாலையில் ஆபீஸ் விட்டதும், அத்தனை டிராபிக்கிலும் பறக்காத குறையாக டிரைவ் இன்னை பார்க்கப் பாய்ந்தது அவனுடைய சைக்கிள். சைக்கிளைப் பூட்டியபடியே உள்ளே பார்த்தான். ரங்கன் துரைராஜ் அவனைப் பார்த்துக் கையைத் தூக்கிக் காட்டினார். எப்போதும் போல அவர் அருகில் அமர்ந்து, அவ்வளவு கும்பலிலும்...

Read More
தொடரும் நாவல்

ஆபீஸ் – 15

15 புளூபெல் எழுத்தில் மட்டும் என்றில்லாமல்  எல்லாவற்றிலும் தான் எல்லோரையும்விட ஒரு அடி முன்னால் இருக்கவேண்டும் என்கிற முனைப்பு, எப்படியோ சிறு வயதிலேயே அவன் அடி மனதில் விழுந்துவிட்டிருந்தது. எல்லோரையும்விட எல்லாவற்றிலும் தான் குறைவாக இருக்கிறோம் என்பதால் உண்டானதாகக்கூட இருக்கலாம். ஆபீஸ் வராந்தாவில்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!