காற்றாலை மின்சார அதிபதியாய் பெரும் தடபுடலாய் முதலீடு செய்ய முனைந்த அதானி குழுமத்தின் துணை நிறுவனமான அதானி க்ரீன் எனர்ஜி, திடீரென்று இலங்கைக்கு கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு வெளியேறிவிட்டது. 2022ம் ஆண்டு மார்ச் மாதம் கோட்டாபய ராஜபக்சே அரசு, அதானிக்கு இலங்கையின் வடபகுதியான மன்னார் மாவட்டத்தில்...
Tag - கோட்டாபய ராஜபக்சே
நம்புவதற்குச் சற்றுக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒரு பாரம்பரிய வழக்கம், தொன்று தொட்டுத் தொடர்ந்த ஒரு கலாசாரம் அத்தனை சீக்கிரத்தில் எப்படிக் காணாமல் போனது என்று புருவம் உயர்த்துவதைத் தவிர வேறு வழி இல்லை. ஆம். ஜே.வி.பி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில்...
எண்பத்தெட்டு வருடங்களுக்குப் பிறகு ராஜபக்சே குடும்பத்தின் வாரிசுகள் எவரும் போட்டியிடாத பாராளுமன்றத் தேர்தல் நவம்பர் 14ம் தேதி நடக்க இருக்கிறது. இலங்கை சுதந்திரமடைந்தே எழுபத்தாறு வருடங்கள் தானே ஆகிறது, அதெப்படி எண்பத்தெட்டு என்ற கேள்விக்குப் பதில் தான் சுதந்திரத்திற்கு முன்னரான வெள்ளைக்கார ஆட்சியில்...
கடைசியில் அது நடந்துவிட்டது. நாம் இரண்டு வருடங்களுக்கு முன்பே கணித்தது போல ஜே.வி.பி தலைவரும், தேசிய மக்கள் கூட்டணியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாகத் தேர்வாகி இருக்கிறார். எந்தவித பிரபுத்துவப் பின்னணியுமில்லாத ஒரு பிசிக்ஸ் பட்டதாரி இலங்கையின் அதியுயர் பதவிக்குத்...
ஒரு காலத்தில் புகழுடனும், அதிகாரமிடுக்குடனும் திகழ்ந்த ஆசியாக் கண்டத்தின் அரசியல்வாதிகளின் கடைசிக்காலம் பெரும்பாலும் பரிதாபமானது. ‘எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேன்’ என்ற திரை வசனத்திற்கு உயிரளித்துவிட்டுக் காணாமல் போய்விடுகிறார்கள் பலர். இந்தப் பட்டியலில் மிக அண்மையில் இணைந்து...
தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தனின் அறுபத்தெட்டு வருட அரசியல் வாழ்வு, ஜுன் 30-ஆம் தேதி ,அவரது தொண்ணூற்றியொரு வயதில் முடிவுக்கு வந்தது. எட்டு ஜனாதிபதிகளால் தொடர்ச்சியாய் ஏமாற்றப்பட்ட சம்பந்தன், அடுத்த இரண்டு மாதங்களில் தேர்வாக இருக்கும்...
வரப்போகும் அதிபர் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு வெற்றியைக் கொடுக்க ஆயிரத்து 207 அலுவலகங்களைத் திறக்கப் போகிறார்களாம்- அதுவும் பத்து நாள்களுக்குள். திறக்கட்டும். இடையில் ஒருவர் நீதிமன்றத்தில் அதிபர் தேர்தலை வேலைகளை நிறுத்தி வைக்க மனுப்போட்டிருக்கிறார். சிரிசேனா அதிபராக இருந்தபோது 19-ஆவது...
தேர்தல் நடக்குமா நடக்காதா என்று ஒரு தேசத்தின் மக்கள் குழம்பிப் போவதைப் போன்ற அபாக்கியம் வேறெது இருக்க முடியும்? இலங்கையில் ஜனாதிபதி ரணிலின் அண்மைய நகர்வுகள் எதுவுமே நம்பும்படியாய் இல்லை. இது தொடர்பான விரிவான கட்டுரையை முன்பு வெளியிட்டிருந்தோம். தனது அடிப்பொடிகளைப் பயன்படுத்தி மேலும் இரண்டு...
ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரால் இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் என்ன செய்ய முடியும்.? நிச்சயமாய் வெல்ல முடியாது என்று தெரியும். ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் அப்பேர்பட்ட ஒருவருக்கு ஓட்டுப் போட்டால் என்ன நடக்கும்..? சந்தேகமேயில்லை. வாக்குகளைச் சிதறடிக்க முடியும். சரி, சனத்தொகையில் இருபத்தைந்து சதவீதமான தமிழ்...
“நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...