நூற்று இருபத்தொன்பது ஆண்டுகள்.! பீட்டர் ஜெரால்ட் ஸ்கல்லி என்பவருக்கு பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டைனை இது. ஆஸ்திரேலியரான இவர் மீது சுமத்தப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், வன்புணர்வு, கடத்தல் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு இந்த தண்டனையைப் பெற்றுள்ளார். அவருடைய பெண் தோழியான லவ்லி மார்கெல்லோவுக்கும் நூற்று இருபத்தாறு ஆண்டுகள் தண்டனை கிடைத்துள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் பதினெட்டு மாதப் குழந்தையும் உண்டு. அரசு வழக்குரைஞர் மார்லின் பாரோலாவைப் பொறுத்தமட்டில் இந்தத் தீர்ப்பு பாலியல் குற்றவாளிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட வலிமையான எச்சரிக்கை. ஆனால் பிலிப்பைன்ஸ் மட்டுமே தனியொரு நாடாக வெல்லவே முடியாத மாபெரும் யுத்தத்தில் கிடைத்த சிறு வெற்றிதான் இந்தத் தண்டனை.
இதைப் படித்தீர்களா?
நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பு என்பது காலம்தோறும் தேவைக்கேற்பச் செய்துகொள்ளப்பட வேண்டிய ஓர் எளிய வசதி. இதற்கு முன்பு இந்திரா காந்தியின்...
ஏறுமுகத்தில் ஏஐ பதிலின் தன்மை சொல்லப்படும் தொனியில் உள்ளது. ஒரே பதிலைப் பல்வேறுவிதங்களாகச் சொல்லமுடியும். நண்பருக்கு நாம் எழுதும் கடிதமும், அரசு...
Add Comment