நூற்று இருபத்தொன்பது ஆண்டுகள்.! பீட்டர் ஜெரால்ட் ஸ்கல்லி என்பவருக்கு பிலிப்பைன்ஸ் நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டைனை இது. ஆஸ்திரேலியரான இவர் மீது சுமத்தப்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் சுரண்டல், வன்புணர்வு, கடத்தல் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட குற்றங்கள் உறுதி செய்யப்பட்டு இந்த தண்டனையைப் பெற்றுள்ளார். அவருடைய பெண் தோழியான லவ்லி மார்கெல்லோவுக்கும் நூற்று இருபத்தாறு ஆண்டுகள் தண்டனை கிடைத்துள்ளது. இவர்களால் பாதிக்கப்பட்டவர்களில் பதினெட்டு மாதப் குழந்தையும் உண்டு. அரசு வழக்குரைஞர் மார்லின் பாரோலாவைப் பொறுத்தமட்டில் இந்தத் தீர்ப்பு பாலியல் குற்றவாளிகள் அனைவருக்கும் கொடுக்கப்பட்ட வலிமையான எச்சரிக்கை. ஆனால் பிலிப்பைன்ஸ் மட்டுமே தனியொரு நாடாக வெல்லவே முடியாத மாபெரும் யுத்தத்தில் கிடைத்த சிறு வெற்றிதான் இந்தத் தண்டனை.
இதைப் படித்தீர்களா?
1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம்...
பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை...
Add Comment