Home » Home-06-07-22

வணக்கம்

இந்த இதழில் இன்னும் இரண்டு புதிய கரங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறோம். ந. ஜெயரூபலிங்கம், ஶ்ரீதேவி கண்ணன். முன்னவரின் சிறுகதையும் அடுத்தவரின் கட்டுரையும் உங்கள் ரசனைக்கும் சிந்தனைக்கும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழில் சிறப்பாகவும் கூர்மை குன்றாமலும் எழுத எங்கெங்கிருந்தோ, எவ்வளவோ பேர் வந்துகொண்டேதான் இருக்கிறார்கள். அவர்களைக் கவனப்படுத்தும் பணியை மெட்ராஸ் பேப்பர் தவறாமல் செய்யும்.

சிறப்புப் பகுதி, இம்முறை ஆன்லைன் ஷாப்பிங். இது இல்லாத தமிழர் வாழ்வே இல்லை என்னும் சூழல் உருவாகிவிட்டது. குறிப்பாக நகர்ப்புற-சிறு நகர்ப்புற மக்களின் அன்றாடங்கள் பெரும்பாலும் ஆன்லைனை நம்பி இருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில் காய்கறி, இறைச்சி, மளிகைப் பொருள்கள் முதல், தேவையான அனைத்துமே ஆன்லைன் வழி வாங்கும் வழக்கம் பெருகி இருக்கிறது. கடைக்குப் போகவும் நேரமில்லாத வாழ்க்கைச் சூழல். இதனைப் புரிந்துகொண்டு, காய்கறிகளை நறுக்கிப் பொட்டலம் கட்டி விற்கும் கடைகளும் பெருகி இருப்பதைக் காண்கிறோம். நறுக்கிய கேரட், துருவிய தேங்காய், அப்படியே எடுத்து அடுப்பில் போட்டு வாட்டிச் சாப்பிடத் தயாரான பதத்தில் சப்பாத்தி, பரோட்டா வகையறாக்கள், ரெடிமேட் வத்தக் குழம்பு என்று பல வீட்டு வாசல்களில் அதிகாலை நேரம் பார்சல்களில் வந்து அமர்ந்திருப்பவை நமக்கு மௌனமாகத் தெரிவிக்கும் உண்மைகள் அநேகம்.

பணிச் சூழல் நம்மை வாழ முடியாமல் ஆக்கிக்கொண்டிருக்கிறதா? அல்லது நாம் வாழத் தெரியாதவர்கள் ஆகிக்கொண்டிருக்கிறோமா? இந்த இதழில், ஆன்லைன் ஷாப்பிங்கின் சாதக பாதகங்களை விளக்கும் கட்டுரைகளோடு, இந்தத் துறை எப்படி இயங்குகிறது என்று உள்ளே இறங்கி ஆராயும் கட்டுரை ஒன்றும் (எப்படி நடக்கிறது இணைய வர்த்தகம்?) இடம் பெற்றுள்ளது.

துபாயில் திறக்கப்பட்டிருக்கும் முகம்மது பின் ராஷித் நூலகம் மற்றும் சென்னையின் அடையாளங்களுள் ஒன்றான தேவநேயப் பாவாணர் நூலகம் - இரண்டினைக் குறித்தும் இந்த இதழில் அடுத்தடுத்து எழுதப்பட்டிருப்பதைக் காணலாம். இது பரபரப்புக்காகவோ, அவல ஒப்பீட்டுக்காகவோ செய்யப்பட்டதல்ல. நூலக இயக்கம் என்பது ஒவ்வொரு தலைமுறையிலும் புதிய புதிய வாசகர்களைச் சத்தமின்றி உருவாக்கிக்கொண்டே இருக்க வேண்டிய ஒன்று. ஆனால் இருக்கும் சொற்ப வாசகர்களையும் தூரத் தள்ளி வைக்கும் விதமாக அது இயங்குமானால் (அல்லது இயங்காதிருக்குமானால்) என்ன பயன்? தமிழ்நாடு அரசின் பொது நூலகத் துறை விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது.

இலங்கையின் பொருளாதாரச் சீரழிவு நிலை அதன் உச்சத்தை நோக்கிச் சென்றிருக்கிறது. மொத்த தேசமும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துத் தடுமாறி நிற்கும் சூழலில், இம்மாபெரும் பிரச்னையை ஈழத் தமிழர்கள் எவ்வாறு காண்கிறார்கள்; பொருட்படுத்துகிறார்கள் என்பதை ஆராயும் ஸஃபார் அஹ்மதின் கட்டுரையும்; இலங்கையின் கல்வித் துறை வரலாறு காணாத தேக்கத்தைச் சந்தித்திருக்கும் சூழலை விவரிக்கும் நர்மியின் கட்டுரையும்; ஹாங்காங் சீனாவின் வசம் சென்று இருபத்தைந்தாண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு அம்மண்ணின் இன்றைய வளர்ச்சி நிலையை ஆராயும் பூவராகனின் கட்டுரையும் கூர்ந்து வாசிக்கப்பட வேண்டியவை.

மெட்ராஸ் பேப்பர் தொடங்கி, இது ஆறாவது இதழ். தொடர்ந்து இதனை ஆதரித்து வரும் வாசகர்களுக்கு நன்றி. சிக்கல் மிகுந்த சர்வதேச விவகாரங்களை எளிய தமிழில் தொடர்ந்து உங்களுக்கு வழங்கும் பணியை இதழ்தோறும் மேம்படுத்திக்கொண்டே இருப்போம். இது நாங்கள் தரும் வாக்குறுதி. இதழ் உங்களுக்குப் பிடிக்குமானால் உங்கள் நண்பர்களுக்கு மெட்ராஸ் பேப்பரைப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரர் ஆக்குங்கள்.

இது நாம் இணைந்து இழுக்க வேண்டிய தேர்.

சிறப்புப் பகுதி: ஆன்லைன் ஷாப்பிங்

ஊரும் உலகமும்

உண்மையும் புனைவும்

வரலாறு முக்கியம்: தமிழர் வர்த்தகம்

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 97

    97 ஆசனம் ‘பிரஸ்ஸில் இருக்கிறது’ என்று சில மாதங்களுக்கு முன்னால் மீட்சி 6ல் ‘முனியாண்டி’ என்கிற பெயரில் சாரு நிவேதிதா தன்னுடைய பைல்ஸ் பிரச்சனையை வைத்து எழுதியிருந்தான். படித்தபோதே ரொம்ப கெக்கரேபிக்கரே என்று இருப்பதாகப் பட்டது. அவனுக்கு பைல்ஸ் பிரச்சனை இருப்பதென்னவோ உண்மைதான்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 101

    101. தீன் மூர்த்தி இல்லம் பிரதமர் நேருவின் அன்றாட நடவடிக்கைகளில் மகள் இந்திராவுக்கு முக்கியப் பங்கு இருந்தது. அது பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் பெற்று தேசப் பிரிவினையின் காரணமாக ஏராளமானவர்கள் பாகிஸ்தானிலிருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தார்கள் அல்லவா? அப்போது டெல்லிக்கு வந்த...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 2

    உங்களிடம் ஒரு பெரிய வாளி இருக்கிறது. அதை ஒரு குழாயின்கீழ் வைக்கிறீர்கள், குழாயைத் திறந்துவிடுகிறீர்கள். குழாயிலிருந்து தண்ணீர் கொட்டுகிறது, வாளியை நிறைக்கிறது. ஆனால், அந்த வாளியில் சில ஓட்டைகளும் இருக்கின்றன. சிறிய ஓட்டைகள், நடுத்தர ஓட்டைகள், பெரிய ஓட்டைகள்… அவை அனைத்திலிருந்தும் தண்ணீர்...

    Read More
    aim தொடரும்

    aIm it -2

    அசையும் பொருளில் இசையும் நானே! அனுதினமும் ஏ.ஐ.யின் பரிணாம வளர்ச்சி நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. அதிவிரைவாய் நிகழும் இம்மாற்றங்களைத் தொடர்ந்து கவனிப்பது சிக்கலானது. ஆனாலும் அறிந்து கொள்வது அவசியம். என்ன செய்யலாம்? இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுகிறது ஏ.ஐ. இன்டெக்ஸ் ரிப்போர்ட். ஸ்டான்ஃபோர்ட்...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 2

    2. நாமகரணம் பெரிய விஷயங்கள் எல்லாமே நடக்கும்போது மிகச்சாதாரணமாக நடந்து விடுகிறது. ஆனால் வரலாற்று நோக்கில் அவற்றின் முக்கியத்துவம் பிரம்மாண்டமாக அமையும்போதுதான், நொடியில் கடந்துவிட்ட அந்த அற்புதத் தருணத்தை நினைத்து நினைத்து மகிழும் வாய்ப்பு மனித குலத்திற்கு அமையும். எல்லாப் பெரிய கண்டுபிடிப்புகளின்...

    Read More
    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 2

    2. ஆம்பள சாமி, பொம்பள சாமி இன்னொரு சந்நிதித் தெருவுக்குக் குடி போயிருந்தோம். திட்டமிட்டுச் செய்ததல்ல. அப்படி அமைந்தது. அப்பாவுக்கு எப்போது பணி மாறுதல் வரும் என்று சொல்லவே முடியாது. தனது பணிக்காலத்தில் அவர் எத்தனை பள்ளிக்கூடங்களைக் கண்டிருப்பார் என்கிற கணக்கும் எனக்குச் சரியாகத் தெரியாது. அவரது...

    Read More
    உரு தொடரும்

    உரு – 2

    சூள் முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார். சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக...

    Read More
    error: Content is protected !!