உலகம் முழுவதும் நாளாந்தம் ஏதோவொரு பண்டிகை நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. வரலாற்றில் மனிதர்கள் பரவலடைந்து வாழத்தொடங்கிய இடங்களிலெல்லாம் அவர்கள் பல காரணங்களுக்காக பண்டிகைகளை கொண்டாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இந்தப் பண்டிகைகள் வேதங்களில் வருகிற ஸ்லோகங்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. மனிதன் இயற்கையோடு இணைந்து காடுகளில் வாழத்தொடங்கிய வாழ்க்கையை ஞாபகப்படுத்தியது. முதன்முதலில் அவன் இந்த இயற்கையின் பிரமாண்டத்திற்கு முன்னே பயந்து, இது கடவுளாக இருக்குமோ, அல்லது இது கடவுளாக இருக்குமோ என மலைகள், மரங்கள், நீர்நிலைகள், பாம்பு, விலங்குகள், இடி, மின்னல், மழை,நெருப்பு, நிலம், சூரியன், சந்திரன் என தாம் வியந்து கண்டவைகளை, அல்லது தமக்கு அச்சுறுத்தலும், பயத்தையும் தந்தவற்றை வணங்க தொடங்கிய காலம் பண்டிகைகளின் வரலாற்றில் மிக முக்கியமான தொடக்கபுள்ளியாக இருக்க வேண்டும்.
இதைப் படித்தீர்களா?
தேர்தல் பரபரப்புகள் நமது மாநிலத்தில் ஓய்ந்தன. அரசுக்கோ, காவல் துறையினருக்கோ எந்த விதமான பதற்றத்தையும் அளிக்காமல் மக்கள் அமைதியாக வாக்களித்துவிட்டுச்...
“காலணி இல்லாமல் நடக்காதே, தரையெல்லாம் கண்ணாடித் துகள்கள்” என்று அமெரிக்காவில் கமலா ஹாரீஸ் பதவி ஏற்ற அன்று சித்திரம் வரையாத பத்திரிகைகள் இல்லை...
Add Comment