முதல் உலகப் போர் முடிவடைந்து, மேற்கு நாடுகளனைத்தும் போரின் தாக்கத்தில் இருந்து மீளப் பாடுபட்டுக்கொண்டிருந்த சமயம். 1922ம் ஆண்டு சில அமெரிக்க...
வணக்கம்
இந்த இதழைப் பகுதியளவு ‘இயர் புக்’ என்று சொல்லலாம். பல்வேறு தேசங்களில் இந்த ஆண்டு நடைபெற்ற முக்கியமான அரசியல்-சமூக-பொருளாதார நிகழ்வுகளின் சுருக்கமான தொகுப்பாக இது அமைந்திருக்கிறது. வெவ்வேறு நாடுகளில் வசிக்கும் நமது செய்தியாளர்கள் இப்பகுதியினைச் சாத்தியமாக்கியிருக்கிறார்கள்.
பெருந்தொற்றுக்குப் பிறகு உலக நாடுகள் சந்திக்க நேர்ந்த பொருளாதார வீழ்ச்சி, அதில் இருந்து மீளப் படுகிற பாடு இவற்றைப் பல பில்லியன் டாலர்கள் செலவழித்து ரஷ்யா நடத்திக்கொண்டிருக்கும் உக்ரைன் மீதான தாக்குதலுக்கு அருகே வைத்துப் பார்க்கலாம். உலகின் பெரும்பாலான தேசங்கள் உக்ரைனை ஆதரிப்பது உண்மையென்றால் யுத்தத்துக்குச் செய்கிற உதவிகளை ஏன் போர் நிறுத்தத்துக்குச் செய்ய முன்வரவில்லை என்பதையும் அருகே இருத்தி நோக்கலாம்.
எதையும் யாரும் தடுத்து நிறுத்திவிட முடிவதில்லை. எதையும் என்றால் இழப்புகளை. அவலங்களை. யுத்தங்களை. வல்லரசுகள் மேலும் வலு சேர்க்கும் முனைப்புடனும், நலிவுற்ற தேசங்கள் தப்பிப் பிழைக்கும் வேட்கையுடனும் மட்டுமே எக்காலத்திலும் இயங்கிவந்திருக்கின்றன. எதுவும் மாறப் போவதில்லை.
ஆப்கனிஸ்தானை எடுத்துக்கொள்ளுங்கள். தாலிபனை ஒழித்துக்கட்டாமல் ஓயப் போவதில்லை என்று அறிவித்துவிட்டுத்தான் அமெரிக்கா யுத்தத்தையே அங்கே தொடங்கியது. இறுதியில் அதே தாலிபனிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்கள். என்ன மாறுதல் நிகழ்ந்திருக்கிறது? ஒன்றுமேயில்லை. அதே அடிப்படைவாதம். அதே சர்வாதிகாரம். காலத்துக்கு ஒவ்வாத சட்டங்கள். தேசம் சின்னாபின்னமடைந்துவிட்டது குறித்த எளிய கவலைகூட இல்லாமல் இந்த ஓராண்டுக் காலத்தைத் தம் வழக்கப்படி ஓட்டிக் கடந்துவிட்டார்கள் தாலிபன்கள். இனியும் அப்படியேதான் இருக்கப் போகிறார்கள். சில வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அமெரிக்காவோ ரஷ்யாவோ சீனாவோ படையெடுக்கும். அதற்கு ஏதாவது ஒரு காரணம் அப்போது வரும். மக்களின் அடிப்படைத் துயரங்கள் என்றென்றும் அப்படியேதான் இருக்கும்.
ஆப்கனிஸ்தானில் மக்கள் அவதிப்படுவதற்காவது மத அடிப்படைவாதிகளைக் காரணம் சொல்லலாம். இலங்கைக்கு என்ன காரணம் பொருந்தும்? மதமா, இனமா? ஒன்றுமேயில்லை. ஆட்சியாளர்களின் அறிவீனம், தன்னலம் என்பதற்கு அப்பால் மிகச் சிறியதொரு காரணத்தைக் கூடச் சுட்டிவிட முடியாது.
பல்லாண்டு காலமாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் சிரியா யுத்தத்தின் காரணம் இன்றைக்கு அந்த யுத்தத்தில் ஈடுபட்டிருக்கும் பல்வேறு தரப்புகளுக்கே மறந்திருக்கும். மரணம் பழகிய மக்கள் எதையும் பொருட்படுத்தவியலாத எல்லைக்குச் சென்றுவிடவே, யுத்தம் அன்றாடம் கடைக்குச் சென்று காய்கறி வாங்குவது போன்றதொரு செயலாகிப் போனது.
அந்தளவுக்கு நம் நாட்டில் அவலமில்லை என்பதை மட்டும் எண்ணி வேண்டுமானால் நிம்மதியடையலாம்.
இரண்டாண்டுக் காலம் கோரத்தாண்டவம் ஆடிவிட்டுச் சிறிது ஓய்வெடுக்கச் சென்றிருந்த கோவிட் தொற்று மீண்டும் ஓர் அலையாகப் பெருக ஆரம்பித்திருப்பதாக இந்த ஆண்டு முடியும் தருணத்தில் தகவல் வருகிறது. அதே சீனா. அதே கோவிட். ஆனால் வேறு ரகம். இன்னும் வீரியமானது என்கிறார்கள். நெருக்கடிகளும் இருப்பியல் சார்ந்த இன்னல்களும் தொடரத்தான் போகின்றன. இவ்வளவுக்கும் இடையில்தான் நாம் மதத்தை முன்வைத்து, கட்சிகளை முன்வைத்து, சாதிகளை முன்வைத்து அரசியல் பேசிக்கொண்டிருக்கிறோம். சிறிது நகர்ந்து நின்று எண்ணிப் பார்த்தால் நமக்கே சிரிப்பு வரும்.
எதிர்வரும் புத்தாண்டு எப்படி இருக்கும் என்று தோராயமாகக் கூட மதிப்பிட முடியாத சூழ்நிலையில், எப்போதும் போல நமது நம்பிக்கையை முதலீடாக்கி வென்று கடப்பது தவிர வேறு வழியில்லை.
புத்தாண்டு வாழ்த்துகள்.
சிறப்புப் பகுதி: அடைந்ததும் இழந்ததும்
ஜல்லிக்கட்டுப் போராட்டம் – அன்றைய சூழலில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானதா? உண்மையில் தமிழனின் கலாசார அடையாளத்தை மீட்டெடுக்க உருவெடுத்தது...
அவர் யார் என்று தெரியாது. அவரது பெயர் தெரியாது. அவரது மொழி தெரியாது. அம்முதிய பெண்மணி தரையில் அமர்ந்து ஒரு கல்லைத் தொட்டுக் கண்ணீர் வடித்துக்...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார்...
நாட்டின் அனைத்து ஆண்களும், பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களில் ஒன்றைத் தவிர வேறொன்றை கிராஃபிக்ஸில்கூட நினைத்தும் பார்க்கக்கூடாது...
துருக்கி அதிபர் ரஜப் தையிப் எர்டோகனுக்கு சங்கு சத்தம் கேட்டுக் கொண்டிருப்பதாகவே மே 14-ம் தேதி நடந்த அதிபர் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு...
திரும்பிப் பார் - சென்ற இதழ் தொடர்ச்சி
இங்கும் அங்கும்
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...
முதல் உலகப் போர் முடிவடைந்து, மேற்கு நாடுகளனைத்தும் போரின் தாக்கத்தில் இருந்து மீளப் பாடுபட்டுக்கொண்டிருந்த சமயம். 1922ம் ஆண்டு சில அமெரிக்க...
உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு...
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் வைத்த சிப்ஸ் நமுத்துப் போனதால் திரும்பப்...
ட்விட்டரைச் சர்ச்சைக்குரியதாகவும் பரபரப்பாகவும் வைத்திருப்பவர் எலான் மஸ்க். இவர் தற்போது ட்விட்டரின் புதிய தலைமை நிர்வாகியை நியமித்திருக்கிறார்...
அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி...
எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும்...
கடந்த சில மாதங்களில் ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்-ஜி-பி-டி (ChatGPT) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் தனது பிங்க் தேடுபொறிச் செயலியில் இணைத்துப் புதுமை...
தொடரும்
51 வாழ்வும் ஆரம்ப வரிகளும் ‘மாயவரம் ஜங்ஷனில் இறங்கிச் சாப்பிட்டுவிட்டுத் திரும்பியபோது, வண்டியில் மூன்றாவது ஆத்மா ஒன்று என் தோல் பையையும் துணிப் பையையும் நடுவே நகர்த்தி, என் இடத்தில் உட்கார்ந்து பூரி உருளைக்கிழங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தது’னு அக்பர் சாஸ்திரிய ஆரம்பிப்பார் ஜானகிராமன்...
கடின உழைப்பாளி நிறைய எதிர்பார்ப்புகளோடு இரண்டரை மணி நேரத்துக்கும் மேலான நீண்ட பேருந்துப் பயணம் செய்தார் ஒரு இளைஞர். போன இடத்தில் மற்றவர்களைப் பார்த்தால் கோட்டும் சூட்டும் டையுமாக இருக்கிறார்கள். பயணத்தினால் வந்த களைப்புடன் ஜீன்ஸ் அணிந்து வந்திருக்கும் தன் கோலத்தைப் பார்க்க அவருக்கே கஷ்டமாக இருந்தது...
26. பண்டிதமணி கதிரேசன் செட்டியார் (16.09.1881 – 24.10.1953) தமிழினம் என்பதற்கு உலகம் அறிந்த ஒரு உரைகல் வாக்கியம் உண்டு. ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்பதுதான் அது. உலகம் முழுக்கப் புகழ்பெற்ற அந்த வாக்கியத்தின் பொருள், எந்த ஊரும் எந்தன் ஊரே, உலகத்தில் வாழும் எந்த ஒரு மானுடரும்...
இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? இறப்பினைக் கண்டு அஞ்சாதவர் இந்த உலகில் இருக்க முடியாது. ஒரு சில பேர் இருக்கக்கூடும். ஆனால் பெரும்பாலானோர்க்கு இறக்கும் நாள் தெரிந்துவிட்டால் வாழ்க்கை நரகம்தான். அனைவரையும் ஆட்டிப் படைக்கக்கூடிய இறப்பினைத் தள்ளிப் போட முடியுமா? ஒரு நாள், இரு நாள் இல்லை… பல...
52. கல்கத்தா மாநாடு ஜவஹர்லால் நேரு, அத்தனை துடிப்புடன் செயல்பட்டதற்கு என்ன காரணம்? சைமன் கமிஷனுக்கு நாடெங்கும் ஏற்பட்ட கடுமையான எதிர்ப்பு, ஜவஹர்லால் நேருவுக்கு மக்கள் மனதில் எழுந்துள்ள சுதந்திர உணர்ச்சியை எடுத்துக் காட்டியது. அறிவுஜீவிகள் தொடங்கி, இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத்...