கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...
வணக்கம்
உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு, உலகம் எதிர்பார்த்ததினும் மோசமான எல்லையை நோக்கி நகர்ந்துகொண்டிருப்பது போலத் தெரிகிறது. உக்ரைனியக் குழந்தைகளை (போர்க்களமாக அறிவிக்கப்பட்டுள்ள எல்லைப் பகுதிகள் சிலவற்றில் வசிப்பவர்கள்) வலுக்கட்டாயமாக ரஷ்ய வீரர்கள் நாடு கடத்தி, தம் தேச எல்லைக்குள் இழுத்துச் சென்று இருக்கிறார்கள். அப்படிக் கட்டாய நாடு கடத்தலுக்கு உட்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை பதினாறாயிரத்தைத் தாண்டும் என்று சொல்கிறார்கள்.
இது சந்தேகத்துக்கு இடமின்றி ஒரு போர்க்குற்றம். இதற்காக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எதிரான கைது உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரவிட்டிருப்பது சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம்.
யாரும் உடனே புதினைக் கைது செய்யப் போவதில்லை; அதற்கெல்லாம் வாய்ப்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் யுத்தம் தொடங்கிய நாள் முதல் இது ஓர் அநியாயப் போர்; அத்துமீறல் என்று கருதும் பெரும்பான்மை மனித குலத்துக்கு ஒரு சிறிய ஆறுதலான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை.
இது ஒரு புறம் இருக்க, பிராந்தியத்தில் பறந்த ஆளில்லா அமெரிக்க ட்ரோன் விமானமொன்றை ரஷ்யா சுட்டு வீழ்த்தியிருக்கிறது. இது அபாயம். ஏனெனில், நேற்று வரை அமெரிக்கா உக்ரைனுக்கு உதவி வந்ததே தவிர நேரடியாக ரஷ்யா மீது எந்தத் தாக்குதலும் தொடுக்கவில்லை. ரஷ்யாவும் உக்ரைனிய இலக்குகளை மட்டுமே தாக்கி வந்ததே தவிர, அதன் உதவி நாடுகளைத் தொட்டதில்லை. ஆனால் மார்ச் 14ம் தேதி நடந்த இச்சம்பவம், அமெரிக்காவின் மீது ரஷ்யா நேரடியாகத் தாக்குதல் நடத்த ஆயத்தமாகிவிட்டது போன்ற ஒரு தோற்ற மயக்கத்தை உருவாக்கவே, ஐரோப்பியக் கண்டம் முழுதும் பதற்றம் எழுந்துள்ளது. இது ஒன்றுமில்லாமல் அடங்கிவிடுமானால் ஊருலகுக்கு நல்லது. சிக்கல் பெரிதானால் விளைவுகள் சிந்திக்கக்கூடியதல்ல. இப்பிரச்னையின் ஆழ அகலங்களை விரிவாக விவரிக்கும் கட்டுரை ஒன்றை இந்த இதழில் வினுலா எழுதியிருக்கிறார்.
இதனைப் போலவே இன்னொரு முக்கியமான கட்டுரை, அமெரிக்காவின் சிலிக்கன் வேலி வங்கி இழுத்து மூடப்பட்டதன் பின்னணி குறித்துப் பேசுகிறது. இலவசக் கொத்தனார் எழுதியிருக்கும் இக்கட்டுரை, நாற்பதாண்டுகால வரலாறுள்ள ஒரு வங்கி எப்படி நான்கே நாள்களில் மூழ்கிப் போகும் என்று தெள்ளத்தெளிவாக விளக்குகிறது.
மத்திய அமெரிக்க நாடான ஹண்டுரஸில் இருந்து அமெரிக்காவுக்கு சட்ட விரோதமாக நுழைந்து, அவதிப்படும் லட்சக்கணக்கான சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவரிக்கும் ஆ. பாலமுருகனின் ‘எல்லை தாண்டும் பிள்ளைகள்’, இலங்கைப் பிரச்னையின் இன்றைய பரிமாணத்தை விவரிக்கும் ஸஃபார் அஹ்மதின் ‘மாற்றிப் போட்ட ட்யூனும் மாறாத அவலங்களும்’, அ. பாண்டியராஜனின் ‘தள்ளாடும் கல்வித்துறை; தடுமாறும் மாணவர்கள்’, சிவராமன் கணேசனின் ‘உளவுக்கு வந்த புறா’ என்று இந்த இதழெங்கும் நீங்கள் வாசிப்பதற்கு சுவாரசியமான படைப்புகள் பல உள்ளன.
மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். அது இதழை இன்னமும் மேம்படுத்த உதவும். பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்யுங்கள். அவர்களையும் சந்தாதாரர்களாக்குங்கள். இன்னும் சுவாரசியமான பல கட்டுரைகளுடன் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
உலகைச் சுற்றி
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக...
நம்மைச் சுற்றி
ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...
எல்லா பொருள்களுக்கும் ஒரு மலிவு விலை மாற்று உண்டு. இது எல்லா காலத்திலும் உண்டு. கள்ளச்சாராயமும் அப்படித்தான். சில மரணங்கள் ஏற்படும்போது மட்டும்...
இலங்கையை பௌத்தத் தூபிகளின் தேசமெனச் சொல்வார்கள். இந்தத் தீவின் எப்பகுதிக்குச் சென்றாலும் வானளாவிய தூபிகள் வியாபித்திருக்கும். இந்தத் தூபிகளின் தீவில்...
நுட்பக் கோட்டை
“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...
27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர்...
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...
வாழ்வும் வழிபாடும்
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...
முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப்...
மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி...
இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு...
அன்றைய தினம் பொழுது விடிந்ததிலிருந்தே ‘ருத்ரன்’ படத்தை நாலு தடவை பார்த்துத் தொலைத்தவள் போல வெறுப்பாக எரிந்து விழுந்து கொண்டிருந்தாள் இகவின் மனைவி...
கடவுளைப் பார்க்க முடியுமா? புராணக் கதைகளிலெல்லாம் கடவுள் நேரில் வந்து வரம் தருகிறாரே? வானத்திலிருந்து இடி போல அசரீரியாகக் குரல் கொடுக்கிறாரே? ஊரில்...
தொடரும்
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...
27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...