Home » Home 22-03-2023

வணக்கம்

சென்ற வாரம் மகளிர் தினச் சிறப்பிதழுக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. சென்ற இதழின் பல கட்டுரைகளின் சுட்டிகளை யார் யாரோ, யார் யாருக்கோ வாட்சப்பில் அனுப்பி வாசிக்கச் சொல்லிப் பரிந்துரை செய்திருந்தது தற்செயலாகத் தெரிய வந்தது. நமக்கே அப்படிச் சில forward குறுஞ்செய்திகள் வந்தபோது அம்மகிழ்ச்சி, மன நிறைவாக மலர்ந்து அமர்ந்தது. ஒரு பத்திரிகையின் வளர்ச்சி என்பது இத்தகைய வாசகர்களின் எண்ணிக்கை பெருகுவதில்தான் உள்ளது.

இந்த இதழில், கோகிலா எழுதியிருக்கும் ‘ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்’ மிக முக்கியமான கட்டுரை. தமிழ்நாட்டில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் ஈழத் தமிழர்களின் தீவிரமான பிரச்னைகளைப் பேசுகிற இக்கட்டுரை, அரசு செய்ய வேண்டிய மிகச் சரியான நிவாரணம் எதுவென்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

இஸ்ரேல் என்றால் கலவரம், குண்டு வெடிப்பு, போர் என்று நம் மனத்தில் பதிந்து போயிருக்கும். இப்போதும் அங்கே கலவரம்தான். ஆனால் பல்லாண்டு காலப் பாலஸ்தீனியருடனான பிரச்னையல்ல விஷயம். இஸ்ரேலிய அரசாங்கம் புதிதாகக் கொண்டு வந்திருக்கும் சில நீதித் துறை சார்ந்த சட்டத் திருத்தங்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியை உண்டாக்கியிருக்கின்றன. உள்நாட்டில் மட்டும்தானா என்றால் இல்லை. பல்வேறு உலக நாடுகளும் இஸ்ரேலைத் தொடர்ந்து கண்டித்து வருகின்றன. நட்புறவைத் துண்டித்துக்கொள்ளும் எல்லைக்கே சில தேசங்கள் சென்றிருக்கின்றன. மத அடிப்படைவாதிகளின் கைப்பாவையாகிவிட்டது இன்றைய இஸ்ரேலிய அரசு. அதற்கு அவர்கள் கொடுத்துக்கொண்டிருக்கும் விலையும் மிகப் பெரிதே. இஸ்ரேலின் இன்றைய இப்பிரச்னையின் வேர் வரை அலசி ஆராய்கிறது ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கும் ‘இடியாப்பச் சிக்கலில் இஸ்ரேல்’.

பல்வேறு அரபு தேசங்களில் இன்று பெண்களின் நிலை எவ்வாறு உள்ளது? நஸீமா ரஸாக் எழுதியுள்ள ‘ஷேக்கம்மாக்களின் உலகம்’ அடிப்படைவாதம் ஆளும் தேசங்களில் வசிக்கும் நவீனகாலப் பெண்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கிறது.

நம் நாட்டில் சமீபத்தில் நடந்த சில வட மாநிலத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. மோடியின் பல நிர்வாகத் தோல்விகள் தேசமெங்கும் பரவலான கண்டனங்களைப் பெற்றாலும் தொடர்ந்து அவர்களால் எப்படித் தேர்தல்களில் மட்டும் வெற்றி காண முடிகிறது? அலசுகிறது பாண்டியராஜனின் கட்டுரை.

பெண்களுக்கான மாதவிடாய்க் கால விடுப்பு ஸ்பெயினில் சட்டபூர்வமாகியிருக்கிறது. வேறு பல நாடுகளில் ஏற்கெனவே நடைமுறையில் உள்ளதுதான் இது. ஆனால் இந்தியாவில் இன்னும் இல்லை. இங்கே அது நடக்குமானால் அது பெண்களுக்கு சாதகமாக இருக்குமா, சுமையை மேலும் கூட்டுமா என்று வினுலா எழுதியுள்ள கட்டுரை ஆராய்கிறது.

இந்த இதழில் நீங்கள் பொருட்படுத்தி வாசிக்க இன்னும் பல அருமையான கட்டுரைகளும் உள்ளன. படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.

  • விருந்து

    கணினி

    மேனேஜரைக் காதலிப்போம்!

    “உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...

    நம் குரல்

    செங்கோல் அரசியல்

    ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...

    இந்தியா

    குற்றம்: நடப்பது என்ன?

    அடிக் அஹமதும் அவர் சகோதரர் அஷ்ரஃபும் காவல் துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் சென்று கொண்டிருந்தனர். கஸ்டடியில் இருப்பவர்களுக்குச்...

    நுட்பம்

    ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

    உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...

    மருந்து

    உலகம்

    மீண்டும் மதவாதம்: இனி மீளுமா இலங்கை?

    கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...

    உலகம்

    திருப்பி அடிக்கும் வழி

    கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...

    உலகம்

    மக்களே, கடன் கொடுங்கள்!

    ‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 52

    52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...

    Read More
    கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

    கடவுளுக்குப் பிடித்த தொழில் – 27

    மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 53

    53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

    Read More
    தல புராணம் தொடரும்

    ‘தல’ புராணம் – 27

    தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் -27

    27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...

    Read More
    இலக்கியம் உலகச் சிறுகதைகள்

    மரம்

    மரியா லூயிஸா பொம்பால்  ஆங்கிலத்தில்: Rosalie Torres-Rioseco தமிழில்: ஆர். சிவகுமார் பியானோ வாசிப்பவர் உட்கார்ந்தபிறகு கொஞ்சம் செயற்கையாக இருமிவிட்டு ஒரு கணம் தீர்க்கமாக மனதை ஒருமுகப்படுத்துகிறார். ஓர் இசை வரியின் அலகு ஒன்று அரங்கத்தின் மௌனத்தைக் கலைத்து எழத்துவங்கி தெளிவாகவும் நிதானத்துடனும்...

    Read More
    error: Content is protected !!