இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப்...
வணக்கம்
சரியாக ஒரு மாதம் முன்பு நாம் எதை எண்ணி, எதற்கு அச்சப்பட்டு எச்சரித்தோமோ அதை இன்று அரசே செய்ய ஆரம்பித்துவிட்டது. இந்தியா முழுதும் கோவிட் தொற்றுப் பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் காயத்ரி. ஒய்யின் ‘மீண்டும் மீண்டும் கோவிட்’ கட்டுரை இந்தப் புதிய ரக (ஆர்க்டூரஸ்) கோவிட் குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.
சென்ற வாரம் சர்வதேச மீடியாவில் உக்ரைன் போர்ச் செய்திகளைக் காட்டிலும் அதிக அளவு பேசப்பட்ட விவகாரம், சீனாவுக்கு இலங்கை அனுப்பவிருக்கிற குரங்குகள். இலங்கையில் குரங்குகள் அதிகம் என்பது எளிய புள்ளி விவரத் தகவல். சீனா அந்தக் குரங்குகளை வாங்கி என்ன செய்யப் போகிறது என்பதுதான் விவகாரமே. மிருகக் காட்சி சாலைகளில் விடப் போவதாகச் சொல்கிறார்கள். கொன்று தின்றாலுமே நாம் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் கோவிடே சீனாவின் ‘உற்பத்தி’ என்கிற கான்ஸ்பிரஸி தியரி உலகெங்கும் உலவும் வேளையில் இக்குரங்குகளை அவர்கள் ஆய்வு நோக்கில் தருவிப்பார்களென்றால் சிக்கல்தான். ஏனெனில் சீனாவில் என்ன நடக்கிறது என்பது பொதுவாகவே ஒரு குத்துமதிப்புத் தகவல்தான். உண்மை என்றுமே முழுதாக அங்கிருந்து வந்ததில்லை. ரும்மான் எழுதியிருக்கும் ‘குரங்கு பிசினஸ்’ கட்டுரை மேற்படி இரு தேசங்களின் ஒப்பந்தத்தின் பின்னணியை விவரிக்கிறது.
மறுபுறம், இலங்கையைத் தாக்கியிருக்கும் இன்னொரு பூதமான க்ரிப்டோ ஊழல் குறித்து (இல்லாத கரன்ஸி, பொல்லாத விளையாட்டு) ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் கூட்டணிச் சிந்தனைகள் பல தலைவர்களுக்கு மேலோங்கத் தொடங்கியிருக்கின்றன. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை தேசிய அளவில் அமைக்க விரும்பும் அவரது முயற்சி குறித்துப் பாண்டியராஜன் எழுதியிருக்கும் ‘கைகொடுப்போர் எத்தனை பேர்?’ ஊன்றி வாசிக்க வேண்டிய மற்றொரு கட்டுரை.
யூட்யூபில் சமையல் செய்து காட்டி சம்பாதிக்கும் இல்லத்தரசிகளைக் குறித்து நந்தினி கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரை, சென்னை தீவுத் திடலில் உருவாகியிருக்கும் டிரைவ் இன் உணவகம் குறித்து ஶ்ரீதேவி கண்ணன் எழுதியிருக்கும் கட்டுரை, சென்னையில் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் குறித்து கோகிலா எழுதியிருக்கும் கட்டுரை என இந்த இதழில் நீங்கள் ரசித்துப் படிக்க நிறைய உள்ளன.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
திசையெலாம்
பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற...
ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க்...
“ரஷ்யா ரஷ்யர்களுக்கே!” மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்கின்றன இந்த கோஷங்கள். சைபீரிய யாகுட் இனத்தைச் சேர்ந்தப் பெண்மணி ஒருவரைத்...
நிறவெறிக்குப் பெயர் பெற்ற தென்னாப்பிரிக்காவில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கிற மக்கள் தங்களுக்கான வீடு கேட்டு அரசாங்கத்துக்கு மனுச் செய்து...
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில்...
அறுசுவை
குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...
இனிப்பில்லாத விருந்தில், சம்பிரதாயத்துக்காக இலையின் ஓரத்தில் வைக்கப்படுகிற சர்க்கரைபோல, பல தேர்தல்களாகத் தேர்தல் அறிக்கை வெளியீடு என்பது ஏதோ...
இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம், விவாதம், கருத்துக் கணிப்புகள் என்று தேசிய, மாநிலக் கட்சிகளும், ஊடகங்களும் பரபரப்புடன் இயங்கிக்...
மெட்ராஸ் பேப்பர் தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. அடுத்த புதன் கிழமை (ஏப்ரல் 17, 2024) வெளியாகவிருப்பது நமது நூறாவது இதழ். பாரம்பரியம் மிக்க பல...
கச்சத்தீவு விவகாரம் மீண்டும் ஒரு முறை விவாதத்துக்கு வந்துள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை அதிகம் பேசப்படாத பால்க் விரிகுடா, வாட்ஜ் பேங்க் விஷயங்களும்...
பாபிலோனின் பழைய தொங்கும் தோட்டங்கள், சுல்தான் நெபுகாத் நெசர் வகையறாக்களைச் சிறிது நினைவுகூர்ந்து, நகர்த்தி வையுங்கள். உலகம் உருண்டை. காலம் உருண்டை...
ரசித்து ருசிக்க
1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும்...
தொடரும்
1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம்...
பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை. அப்போது கல்லூரி மாணவர்களாக இருந்த நானும் என்னுடைய நண்பர்களும் அந்தப் படத்தைப் பலமுறை விரும்பிப் பார்த்தோம், அதில் இடம்பெற்ற காதல் வழியும்...
1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...
‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...
1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...