கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...
வணக்கம்
சரியாக ஒரு மாதம் முன்பு நாம் எதை எண்ணி, எதற்கு அச்சப்பட்டு எச்சரித்தோமோ அதை இன்று அரசே செய்ய ஆரம்பித்துவிட்டது. இந்தியா முழுதும் கோவிட் தொற்றுப் பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அமைச்சர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் காயத்ரி. ஒய்யின் ‘மீண்டும் மீண்டும் கோவிட்’ கட்டுரை இந்தப் புதிய ரக (ஆர்க்டூரஸ்) கோவிட் குறித்த விரிவான தகவல்களை அளிக்கிறது.
சென்ற வாரம் சர்வதேச மீடியாவில் உக்ரைன் போர்ச் செய்திகளைக் காட்டிலும் அதிக அளவு பேசப்பட்ட விவகாரம், சீனாவுக்கு இலங்கை அனுப்பவிருக்கிற குரங்குகள். இலங்கையில் குரங்குகள் அதிகம் என்பது எளிய புள்ளி விவரத் தகவல். சீனா அந்தக் குரங்குகளை வாங்கி என்ன செய்யப் போகிறது என்பதுதான் விவகாரமே. மிருகக் காட்சி சாலைகளில் விடப் போவதாகச் சொல்கிறார்கள். கொன்று தின்றாலுமே நாம் சொல்ல ஒன்றுமில்லை. ஆனால் கோவிடே சீனாவின் ‘உற்பத்தி’ என்கிற கான்ஸ்பிரஸி தியரி உலகெங்கும் உலவும் வேளையில் இக்குரங்குகளை அவர்கள் ஆய்வு நோக்கில் தருவிப்பார்களென்றால் சிக்கல்தான். ஏனெனில் சீனாவில் என்ன நடக்கிறது என்பது பொதுவாகவே ஒரு குத்துமதிப்புத் தகவல்தான். உண்மை என்றுமே முழுதாக அங்கிருந்து வந்ததில்லை. ரும்மான் எழுதியிருக்கும் ‘குரங்கு பிசினஸ்’ கட்டுரை மேற்படி இரு தேசங்களின் ஒப்பந்தத்தின் பின்னணியை விவரிக்கிறது.
மறுபுறம், இலங்கையைத் தாக்கியிருக்கும் இன்னொரு பூதமான க்ரிப்டோ ஊழல் குறித்து (இல்லாத கரன்ஸி, பொல்லாத விளையாட்டு) ஸஃபார் அஹ்மத் எழுதியிருக்கிறார்.
அடுத்த ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் கூட்டணிச் சிந்தனைகள் பல தலைவர்களுக்கு மேலோங்கத் தொடங்கியிருக்கின்றன. பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இதனைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆளும் பாரதிய ஜனதாவுக்கு எதிரான ஒரு பிரம்மாண்டக் கூட்டணியை தேசிய அளவில் அமைக்க விரும்பும் அவரது முயற்சி குறித்துப் பாண்டியராஜன் எழுதியிருக்கும் ‘கைகொடுப்போர் எத்தனை பேர்?’ ஊன்றி வாசிக்க வேண்டிய மற்றொரு கட்டுரை.
யூட்யூபில் சமையல் செய்து காட்டி சம்பாதிக்கும் இல்லத்தரசிகளைக் குறித்து நந்தினி கந்தசாமி எழுதியிருக்கும் கட்டுரை, சென்னை தீவுத் திடலில் உருவாகியிருக்கும் டிரைவ் இன் உணவகம் குறித்து ஶ்ரீதேவி கண்ணன் எழுதியிருக்கும் கட்டுரை, சென்னையில் இயங்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் குறித்து கோகிலா எழுதியிருக்கும் கட்டுரை என இந்த இதழில் நீங்கள் ரசித்துப் படிக்க நிறைய உள்ளன.
படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். இதழ் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்குப் பரிந்துரை செய்து அவர்களையும் சந்தாதாரராக்குங்கள். மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
திசையெலாம்
கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...
‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...
கடந்த மே 19-ஆம் தேதி இஸ்ரேலியர்கள் தமது கொடி நாளைக் (FLAG DAY) கொண்டாடினார்கள். அதாவது 1948-ல் இஸ்ரேலின் குடிமக்களாக அவர்கள் அதிகாரபூர்வமாக...
அறுசுவை
ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...
அடிக் அஹமதும் அவர் சகோதரர் அஷ்ரஃபும் காவல் துறையினர் பாதுகாப்புடன் மருத்துவமனைக்குள் சென்று கொண்டிருந்தனர். கஸ்டடியில் இருப்பவர்களுக்குச்...
உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவின் வரலாறு மிக நீண்டது. ரஷ்யாவின் இதர நட்பு நாடுகளுடன் நமக்கு உரசலும் விரிசலும் ஏற்பட்ட காலங்களில்கூட ரஷ்ய உறவு...
உலகம் செயலி மயமாகிவிட்டது. தொட்டதற்கெல்லாம் செயலிகள். செயலியின்றிச் செயலில்லை. ஆனால் கணக்குப் போட்டுப் பார்த்தீர்கள் என்றால் ஒரு சில நூறு...
இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய் நோட்டில் வைத்த சிப்ஸ் நமுத்துப் போனதால் திரும்பப்...
ரசித்து ருசிக்க
“உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...
உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...
முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப்...
மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி...
தொடரும்
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...
27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...