ஒரு வாரம் இடைவெளி கொடுத்து 110 பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும், வெளிநாட்டவரும். 240 பாலஸ்தீனியர்கள் விடுதலை...
வணக்கம்
இந்த இதழின் சிறப்புப் பகுதி, தங்கம் பற்றியது. சரித்திர காலம் தொடங்கி, சமகாலத் தங்க வேட்டைகள் வரை இதில் அலசப்படுகிறது. தங்கத்துக்குத் தொடர்பில்லாவிட்டாலும் ராசிக் கற்கள் பற்றிய ருசிகரமான கட்டுரை ஒன்றும் அப்பகுதியுடன் இணைவதன் பொருத்தம், அனைத்தையும் படித்து முடிக்கும்போது புரியும்.
மாணவர்களுக்கு செருப்பு தைத்துத் தரும் இலங்கையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவரைக் குறித்து ரும்மான் எழுதியுள்ள கட்டுரை மிக முக்கியமானது. ஆசிரியர்-மாணவர் உறவு இங்கே சட்டபூர்வமாகிக்கொண்டிருக்கும் காலம். பிள்ளைகளைத் திட்டக் கூடாது, அடிக்கக் கூடாது, கண்டிக்கக் கூடாது; வெறுமனே வகுப்புக்கு வந்து பாடம் எடுத்துவிட்டுப் போனால் போதும் என்பது கிட்டத்தட்ட மாநிலம் முழுதும் நடைமுறைக்கு வந்துவிட்டது. இந்த சௌகரியத்தில் சில மாணவர்கள் வரம்பு மீறி நடந்துகொள்ளும் செய்திகளும் அடிக்கடி வருகின்றன. கண்ணுக்குத் தெரியாமல் ஒரு தலைமுறையை நாசம் செய்துகொண்டிருக்கிறோம். பலனை அறுவடை செய்யும்போது பாவத்தின் கனம் புரியும்.
அது ஒரு புறம் இருக்க, மேற்படி இலங்கை ஆசிரியர் தனது அன்பான ஒரு கூடுதல் செயல்பாட்டின் மூலம் மொத்த மாணவர் சமுதாயத்தையும் தன்வயப்படுத்தியிருக்கிறார். இப்படி ஒரு ஆசிரியரிடம் நாமும் படிக்க மாட்டோமா என்று இலங்கை எங்கும் வாழும் மாணவர்கள் ஏங்குமளவுக்கு அவரது பெயரும் செயலும் பிரபலமாகியிருக்கிறது.
ஜி20 மாநாடு குறித்து பாண்டியராஜன் எழுதியுள்ளதும் சவூதி அரேபியாவில் நடைபெற்ற சீன-அரேபிய மாநாடு பற்றி நஸீமா எழுதியுள்ளதும் ஒன்றுடன் ஒன்று நேரடித் தொடர்பில்லாவிட்டாலும் உற்று நோக்கினால் சில பொருத்தங்களைக் கொண்டிருப்பதை உணர முடியும். தேசங்களிடையே மாறி வரும் உறவு நிலைகளைப் பொருளாதாரக் காரணங்களே தீர்மானிக்கின்றன. கைகுலுக்கல்களுக்குப் பின்னால் உள்ள கணக்குகள் புரிந்துவிடுமானால் நாம் வாழும் காலம் எத்தனை அபாயகரமானது என்பது விளங்கிவிடும்.
இந்த இதழின் மிகச் சிறந்த அம்சமாக பீட்டர் ஹாக்ஸின் ‘லயோலா என்ற பெரும்பாம்பின் கதை’ சிறுகதையை (ஆங்கில வழி மொழிபெயர்ப்பு: சுகுமாரன்) முன்வைக்கிறோம். படித்து முடிக்க ஐந்து நிமிடங்கள்கூட ஆகாது. ஆனால் ஒரு மாபெரும் அவல சரித்திரம் அக்கதைக்குள் புதைந்திருக்கிறது. இப்படிக்கூட எழுத முடியுமா என்று திகைக்கச் செய்யும் சிறுகதை. கதை குறித்த மாமல்லனின் சிறப்புக் கட்டுரையைக் கையோடு வாசியுங்கள். ஒரு கலைப்படைப்பை எப்படிப் புரிந்துகொள்வது, எப்படி ரசிப்பது என்று அது சொல்லித் தரும்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போம்.
அயல்
கடைகளில் உங்களுக்கு மிகவும் தேவையாக இருக்கும் அல்லது பிடித்தமான மிக அதிக விலையுள்ள பொருள், 80 சதவீதத் தள்ளுபடியில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள...
ஒரு ஸ்டாக்கின் விலை மட்டும் 4.5 கோடி. கேட்கும் போதே தலைசுற்றுகிறதா? அது தான் பெர்க்சயர் ஹாத்வே A (Berkshire Hathway A). அதன் உருவாக்கத்திற்குச்...
டீ பார்ட்டி கட்சியின் பெயரே, பாஸ்டன் டீ பார்ட்டி என்ற சரித்திர மகத்துவம் வாய்ந்த அரசியல் போராட்டத்தின் பெயரைக் கொண்டது. அநியாயத்தை எதிர்த்து போரிட்ட...
சிறப்புப் பகுதி: என் தங்கமே!
கதம்பம்
சென்னையைப் பொறுத்தவரை மழை என்பது ஆண்டுக்கு ஒரே ஒரு முறை வருகிற திருவிழா. அதுவும் சில சமயம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. தப்பித்தவறி பெரிய புயல், அடை...
நீலகிரியில் வடகிழக்குப் பருவமழையைப் பார்த்தவன் எவனும் நாத்திகனாக இருக்கமுடியாது. காற்றும், மழையும் இணைந்து பிரவகிக்கும்போது மனது இயற்கையின்...
முட்டைக் கோப்பி அருந்திய செரமிக் குவளைகள் இரண்டும் பெட்சைடர் மீது அப்படியே கிடந்தன. கட்டிலில் இருந்து இறங்கும் போதே கேசக் கற்றைகளை அள்ளி முடிந்து...
நவம்பர் 7ஆம் தேதி தொடங்கி 30ஆம் தேதி வரை பல்வேறு கால கட்டங்களாக ஐந்து மாநிலங்களுக்குமான சட்டப்பேரவைத் தேர்தலை நடத்தி முடித்தது இந்தியத் தேர்தல்...
“ஹலோ… ரெயின் கோட் எடுத்துட்டு வந்திருக்கியா?” ஒரு வாரமாக தினமும் தூக்கிக்கொண்டு வந்தேன். ஒரு சொட்டு மழையில்லை. இன்றுதான் காலையில் ‘இனிமேல்...
“அத்த, ஏன் அம்மா அப்புடி சொன்னாங்க?” புயல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மழையும் கனமாகத் தான் பெய்கிறது. இந்த அரசாங்கம் விடுமுறை விட்டால்தான் என்ன...
தொடரும்
80. அத்தையுடன் மனக்கசப்பு இந்திரா காந்தி மற்றும், அவருடைய அத்தை விஜயலட்சுமி பண்டிட் இருவரது அரசியல் நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன், அவர்கள் இருவரையும் ஐக்கிய மாகாணத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள காளி என்ற கோடை வாசஸ்தலத்துக்குப் போய் வசிக்கும்படி அறிவுறுத்தியது. ஆனால், இருவரும்...
முறைப்படி 1975-ம் ஆண்டில் இலங்கையில் பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். 1972ம் ஆண்டு மாட்சிமை பொருந்திய எலிசபெத் மகராணியை முற்றாய்ப் புறக்கணித்து ஜனநாயகக் குடியரசானதைக் காரணம் காட்டிப் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மேலும் இரண்டு ஆண்டுகளாக பாராளுமன்றத்தின் ஆயுட்காலத்தை நீடித்து...
08 – சோவியத்தின் மனமாற்றம் சுதந்திர சோவியத்திற்கு உருக்கொடுத்தார் லெனின். கம்யூனிசமும், சர்வாதிகாரத்துவமும் தான் மூலக்கல். அரசியல் முதற்கொண்டு அதன் எல்லாத் துறைகளின் கட்டமைப்புகளையும் உருவாக்கினார் லெனின். அவற்றை உறுதிப்படுத்தினார் பின்வந்த ஸ்டாலின். இவர்களைப் போன்ற வலிமையான ஆளுமைகள்...
இண்டர்வ்யூவிற்கு ஈ.எம்.ஐ அந்த ஈ-மெயிலுக்காகத் தான் காத்துக்கொண்டிருந்தான் அருண். இதோ, வந்துவிட்டது. அவன் ஆசைப்பட்டபடியே, கேம்பஸ் இண்டர்வ்யூவில் செலக்ட் ஆகியிருந்தான். அருண் பொறியியல் கல்லூரி மாணவன். இறுதி ஆண்டு இன்னும் சில வாரங்களில் முடியவிருக்கிறது. அகமதாபாத் நகரத்துக்கு வெளியே எங்கோவோர்...
ஆர்ப்பாட்டமில்லாமல் பணி செய்து கொண்டிருந்தது இந்திய விண்வெளி நிலையம். முதலாவது ராக்கெட் வெற்றிகரமாக வானுயர்ந்து விட்டது. அதாவது, ‘ஏவும் கலை’ கைவந்தாயிற்று. நாஸாவிலிருந்து கொண்டு வந்த ராக்கெட் அது. அடுத்து, விண் ஓடமொன்றைச் சொந்தமாகத் தயாரிக்க வேண்டும் என்ற இலக்குடன் எத்தனையோ தடைகளுக்கும் பொருளாதாரச்...