Home » Home 13-09-22

வணக்கம்

நேற்று இருந்து, இன்று இல்லாமல் போய்விட்டவற்றை நினைவுகூரும் விதமான இந்த இதழின் சிறப்புப் பகுதியில் முதலில் மூன்று கட்டுரைகள் வெளியிட நினைத்திருந்தோம். பிறகு அது நான்கானது. அதுவே ஐந்தாகி ஆறுமானது. விஷயம் அதுவல்ல. அறுபது கட்டுரைகள் வெளியிட்டாலும் இந்தக் குறிப்பிட்ட இயல் மட்டும் முழுமையடைய வாய்ப்பே இல்லை என்பதைக் கண்டுகொண்ட தருணம் இருக்கிறது பாருங்கள்! அது, அபாரம்.

சிறு வயது முதல் நாம் மறந்து தொலைத்தது, இழந்து வருந்தியது, விரும்பி விலக்கியது என்று நம் வாழ்விலிருந்து காணாமல் போய்விட்டதையெல்லாம் மீட்டுவிட முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று எண்ணாதவர் இருக்க முடியாது. ஆனால் எதை நம்மால் அப்படியே மீட்க முடிந்திருக்கிறது? நபர்களின், இடங்களின், பொருள்களின், சம்பவங்களின் வாசனையை நினைவில் மீட்க முடிந்தாலே திருப்தியடைந்துவிடுகிறோம். உண்மையில் கை நழுவிச் சென்றதெல்லாம் காலம் கொள்ளை கொண்டு போனவைதாம்.

இந்த இதழில் ஹரன் பிரசன்னா எழுதியிருக்கும் திருநெல்வேலியின் திரையரங்குகள் குறித்த ஒரு கட்டுரை போதும். தனது பால்யத்தின் வழியாக நம் ஒவ்வொருவரின் பால்யத்துக்குள்ளும் நுழைந்து வெளியேறும் அற்புதத்தை அதில் அவர் நிகழ்த்திக் காட்டியிருப்பதை மிகவும் ரசிப்பீர்கள்.

இருபது வருடங்களுக்கு முந்தைய தமிழ் இணையத்தளங்கள், முப்பது வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கை, நாற்பது வருடங்களுக்கு முந்தைய கேளிக்கை அனுபவங்கள், ஐம்பதாண்டுகளுக்கும் முற்பட்ட வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்கள் என்று இந்த இதழெங்கும் பழமையின் நறுமணம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

கடந்து சென்ற எதையும் நம்மால் மீட்டெடுக்க முடியப் போவதில்லை. குறைந்தபட்சம் நினைவில் சேமித்து, நீந்திக் களிக்கலாமல்லவா?

சென்ற வாரம் காலமான இங்கிலாந்து ராணி எலிசபெத் குறித்து ஜெயரூபலிங்கமும் ராணியின் ‘ராணிப் பதவி நீக்கிய’ தோற்றத்தைக் குறித்து பாபுராஜ் நெப்போலியனும் இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள். அமீகரகத்தில் மழையின் பொருட்டு கடைப்பிடிக்கப்படுகிற ‘க்ளவுட் சீட்டிங்’ நுட்பம் பற்றிய நசீமாவின் கட்டுரை மிகவும் முக்கியமானது. அதைப் போலவே கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பான தியாகராஜனின் அறிமுகக் கட்டுரையும் பல திறப்புகளைத் தரவல்லது.

சென்ற வாரம் வெளியான இளையராஜா சிறப்புக் கட்டுரைகள் பெற்ற வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. காலம் என்னவாக மாறினாலும் மக்களின் அடிப்படை விருப்பம், ரசனை, ஆர்வங்கள் அடியோடு மாறிவிடுவதில்லை என்பதை அது புரிய வைத்தது. அது தந்த ஊக்கத்திலேயே இந்த இதழை உருவாக்கியிருக்கிறோம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மேலும் பல சிறப்பான படைப்புகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

  • சிறப்புப் பகுதி: காணாமல் போனவை

    நினைவில் வாழ்தல்

    அறிவியலும் சில அமெரிக்க அத்தைப் பாட்டிகளும்

    வளர்ந்த நாடு என்று இன்று சொன்னாலும் அமெரிக்கா வளர்ந்துகொண்டிருந்த காலம் ஒன்று உண்டல்லவா? அன்று அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? சில...

    நினைவில் வாழ்தல்

    நேற்றைய காற்று

    தமிழ் இணையம் செயல்படத் தொடங்கிய காலத்தில் உயிர்ப்புடன் இருந்த பல இணையத்தளங்கள் இன்று இல்லை. அல்லது இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றன...

    நினைவில் வாழ்தல்

    ‘காலை சாப்பிட்டேன் நான் இரண்டு இட்லிகளை…’

    1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது...

    நினைவில் வாழ்தல்

    தடங்கலுக்கு வருந்தினோம்; மறந்ததற்கு வருந்துவோமா?

    என் மகளுடைய பாடப் புத்தகத்தில் புல்லி (கப்பி) பற்றி விளக்குவதற்கு இப்போதும் கிணறு படம் தான் இருக்கிறது. பென்டுலம் (ஊசல்) பற்றி விளக்க அந்தக் காலக்...

    நினைவில் வாழ்தல்

    மூன்று அடையாளங்கள்

    இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என்றால் தெரியாது. (2008ல் அது மூடப்பட்டு, பிறகு செம்மொழிப் பூங்கா ஆனது.)...

    உலகைச் சுற்றி

    ஆளுமை

    ப்ரூஃப் மிஸ்டேக்கில் பிறந்த கடவுள்

    இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப்...

    உலகம்

    ஈரான் நடத்திய ஒன் டே மேட்ச்

    பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற...

    உலகம்

    இலக்கை அடைய இரண்டு வழி

    ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க்...

    உலகம்

    பட்டம் கட்டி ஓரம் கட்டு!

    “ரஷ்யா ரஷ்யர்களுக்கே!” மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்கின்றன இந்த கோஷங்கள். சைபீரிய யாகுட் இனத்தைச் சேர்ந்தப் பெண்மணி ஒருவரைத்...

    ருசிகரம்

    நம் குரல்

    வாக்களிக்கும் நேரம்

    குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...

  • தொடரும்

    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 1

    1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 1

    பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை. அப்போது கல்லூரி மாணவர்களாக இருந்த நானும் என்னுடைய நண்பர்களும் அந்தப் படத்தைப் பலமுறை விரும்பிப் பார்த்தோம், அதில் இடம்பெற்ற காதல் வழியும்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 1

    1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...

    Read More
    aim தொடரும்

    AIm it! – 1

    ‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 1

    1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு  குடும்பக்  கதை – 100

    100. வந்தேமாதரம் விவாதம் நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும்...

    Read More
    error: Content is protected !!