Home » Home 13-09-22

வணக்கம்

நேற்று இருந்து, இன்று இல்லாமல் போய்விட்டவற்றை நினைவுகூரும் விதமான இந்த இதழின் சிறப்புப் பகுதியில் முதலில் மூன்று கட்டுரைகள் வெளியிட நினைத்திருந்தோம். பிறகு அது நான்கானது. அதுவே ஐந்தாகி ஆறுமானது. விஷயம் அதுவல்ல. அறுபது கட்டுரைகள் வெளியிட்டாலும் இந்தக் குறிப்பிட்ட இயல் மட்டும் முழுமையடைய வாய்ப்பே இல்லை என்பதைக் கண்டுகொண்ட தருணம் இருக்கிறது பாருங்கள்! அது, அபாரம்.

சிறு வயது முதல் நாம் மறந்து தொலைத்தது, இழந்து வருந்தியது, விரும்பி விலக்கியது என்று நம் வாழ்விலிருந்து காணாமல் போய்விட்டதையெல்லாம் மீட்டுவிட முடிந்தால் எவ்வளவோ நன்றாக இருக்கும் என்று எண்ணாதவர் இருக்க முடியாது. ஆனால் எதை நம்மால் அப்படியே மீட்க முடிந்திருக்கிறது? நபர்களின், இடங்களின், பொருள்களின், சம்பவங்களின் வாசனையை நினைவில் மீட்க முடிந்தாலே திருப்தியடைந்துவிடுகிறோம். உண்மையில் கை நழுவிச் சென்றதெல்லாம் காலம் கொள்ளை கொண்டு போனவைதாம்.

இந்த இதழில் ஹரன் பிரசன்னா எழுதியிருக்கும் திருநெல்வேலியின் திரையரங்குகள் குறித்த ஒரு கட்டுரை போதும். தனது பால்யத்தின் வழியாக நம் ஒவ்வொருவரின் பால்யத்துக்குள்ளும் நுழைந்து வெளியேறும் அற்புதத்தை அதில் அவர் நிகழ்த்திக் காட்டியிருப்பதை மிகவும் ரசிப்பீர்கள்.

இருபது வருடங்களுக்கு முந்தைய தமிழ் இணையத்தளங்கள், முப்பது வருடங்களுக்கு முந்தைய தமிழர் வாழ்க்கை, நாற்பது வருடங்களுக்கு முந்தைய கேளிக்கை அனுபவங்கள், ஐம்பதாண்டுகளுக்கும் முற்பட்ட வீட்டுப் பயன்பாட்டு உபகரணங்கள் என்று இந்த இதழெங்கும் பழமையின் நறுமணம் நீக்கமற நிறைந்திருக்கிறது.

கடந்து சென்ற எதையும் நம்மால் மீட்டெடுக்க முடியப் போவதில்லை. குறைந்தபட்சம் நினைவில் சேமித்து, நீந்திக் களிக்கலாமல்லவா?

சென்ற வாரம் காலமான இங்கிலாந்து ராணி எலிசபெத் குறித்து ஜெயரூபலிங்கமும் ராணியின் ‘ராணிப் பதவி நீக்கிய’ தோற்றத்தைக் குறித்து பாபுராஜ் நெப்போலியனும் இந்த இதழில் எழுதியிருக்கிறார்கள். அமீகரகத்தில் மழையின் பொருட்டு கடைப்பிடிக்கப்படுகிற ‘க்ளவுட் சீட்டிங்’ நுட்பம் பற்றிய நசீமாவின் கட்டுரை மிகவும் முக்கியமானது. அதைப் போலவே கிரிப்டோ கரன்சி வர்த்தகம் தொடர்பான தியாகராஜனின் அறிமுகக் கட்டுரையும் பல திறப்புகளைத் தரவல்லது.

சென்ற வாரம் வெளியான இளையராஜா சிறப்புக் கட்டுரைகள் பெற்ற வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளித்தது. காலம் என்னவாக மாறினாலும் மக்களின் அடிப்படை விருப்பம், ரசனை, ஆர்வங்கள் அடியோடு மாறிவிடுவதில்லை என்பதை அது புரிய வைத்தது. அது தந்த ஊக்கத்திலேயே இந்த இதழை உருவாக்கியிருக்கிறோம்.

படித்துவிட்டு உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மேலும் பல சிறப்பான படைப்புகளுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

  • சிறப்புப் பகுதி: காணாமல் போனவை

    நினைவில் வாழ்தல்

    அறிவியலும் சில அமெரிக்க அத்தைப் பாட்டிகளும்

    வளர்ந்த நாடு என்று இன்று சொன்னாலும் அமெரிக்கா வளர்ந்துகொண்டிருந்த காலம் ஒன்று உண்டல்லவா? அன்று அமெரிக்கர்களின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? சில...

    நினைவில் வாழ்தல்

    நேற்றைய காற்று

    தமிழ் இணையம் செயல்படத் தொடங்கிய காலத்தில் உயிர்ப்புடன் இருந்த பல இணையத்தளங்கள் இன்று இல்லை. அல்லது இருக்குமிடம் தெரியாமல் இருக்கின்றன...

    நினைவில் வாழ்தல்

    ‘காலை சாப்பிட்டேன் நான் இரண்டு இட்லிகளை…’

    1959ம் ஆண்டு பரிசோதனை முயற்சியாக தூர்தர்ஷன் தனது சிறிய சேவையைத் தொடங்கியது. ஒரு குழந்தை வளர்வதைப்போல் இருபத்து மூன்றாண்டுகள் மெதுவாக வளர்கிறது...

    நினைவில் வாழ்தல்

    தடங்கலுக்கு வருந்தினோம்; மறந்ததற்கு வருந்துவோமா?

    என் மகளுடைய பாடப் புத்தகத்தில் புல்லி (கப்பி) பற்றி விளக்குவதற்கு இப்போதும் கிணறு படம் தான் இருக்கிறது. பென்டுலம் (ஊசல்) பற்றி விளக்க அந்தக் காலக்...

    நினைவில் வாழ்தல்

    மூன்று அடையாளங்கள்

    இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்களுக்கு டிரைவ் இன் உட்லண்ட்ஸ் என்றால் தெரியாது. (2008ல் அது மூடப்பட்டு, பிறகு செம்மொழிப் பூங்கா ஆனது.)...

    உலகைச் சுற்றி

    உலகம்

    ஊரெல்லாம் தண்ணீர், திசையெல்லாம் சேதம்

    செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக்...

    உலகம்

    ஓட்டும் உரிமையுடன் ஓட்டுரிமை

    அமெரிக்காவில் 18 வயது நிரம்பியவுடன் அனைவரும் உடனே செய்யும் முதல் வேலை, கார் ஓட்டுநருக்கான முழுச் சலுகைகளுடன் கூடிய உரிமத்தைப் பெறுவதே. அப்போதே...

    உலகம்

    ஒரு துப்பாக்கி எடுத்தவன் கதை

    இப்படியொரு நிலைமை தனக்கு உண்டாகும் என்று சலாஹுதீன் நினைத்திருக்க வாய்ப்பில்லை. ஆயுதமேந்தியவர். ஆள் பேரைச் சொன்னால் அண்டை அயலில் அத்தனை பேரும்...

    உலகம்

    பிள்ளை பிடிக்கும் பூச்சாண்டி

    தேசியகீதம் முழங்க, ரஷ்யாவின் மூவர்ணக்கொடி கம்பத்தில் தவழ்ந்தேறியது. வலதுகைச் சட்டையில் ஜீ முத்திரையோடு வரிசையில் சிறுவர் சிறுமியர். தேசியக்கொடிக்கு...

    ருசிகரம்

    நம் குரல்

    எங்கே போகிறோம்?

    உக்கிரமாக அரசியல் பேசுகிறோம். தீவிரமாக சமூகப் பிரச்னைகளைப் பேசுகிறோம். சாதி, மதம், சநாதனம் அது இதுவென்று ஒவ்வொரு நாளும் விவாதம் செய்ய விதவிதமாக...

  • தொடரும்

    விண்வெளி

    வான் – 1

    அத்தியாயம் ஒன்று தப்பித்தவறி இரண்டாம் உலகப் போரில் ஹிட்லர் வென்றிருந்தால் உலகம் எப்படியிருந்திருக்கும்? இந்தக் கற்பனையை வைத்து 1962ம் ஆண்டு பிலிப்.கே.டிக் எழுதிய நாவல் ‘The Man in High Castle’. அண்மையில் அமேஸான் ப்ரைமிலும் தொடராய் வந்து ஒரு கலக்குக் கலக்கியது. கற்பனையாய் இருந்தாலும்...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 68

    68 ஈட்டி இல்லாததற்காக ஏங்குவதோ இழந்ததை எண்ணி அழுவதோ அவன் இயல்பிலேயே இல்லை என்றாலும் கையில் காசில்லாமல் போகும்போதெல்லாம் டிவி வாங்கித் தருகிறேன் என்று ஆயிரம் ரூபாயை அபேஸ் பண்ணிவிட்டு ஓடிய ரங்கன் துரைராஜ் நினைவு வருவதை மட்டும் அவனால் தவிர்க்க முடியவில்லை. அப்போதும் வருத்தத்தைவிட கோபம்தான் பொங்கி...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் – 43

    43 ஔவை துரைசாமிப்பிள்ளை (05.09.1902 – 03.04.1981) ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதுகளில் மணிமேகலைக் காப்பியத்துக்குப் புதிய முறையிலான உரை ஒன்றை நாவலர் வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிக் கொண்டிருந்தார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இந்த முயற்சி நடைபெற்றது. எழுதிக் கொண்டிருந்த நாட்டார்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு  குடும்பக்  கதை – 69

    69. மீண்டும் காங்கிரஸ் தலைமை கவலையுடன் நேருவும், இந்திராவும் லண்டனிலிருந்து திரும்பியபோது, கமலா நேருவின் உடல்நிலையில்  சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இந்திரா தன்னுடைய பள்ளிக்குப் புறப்பட்டார். அம்மாவின் உடல்நிலை, கடினமான இலக்கணத்துடன் கூடிய ஜெர்மன் மொழிப் படிப்பு, கடுப்படிக்கும் ஜெர்மன்...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் – 42

    42  தண்டபாணி தேசிகர் (27.08.1908 – 26.06.1972) இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தோன்றியவர். தமிழிசைத் துறையில் குறிப்பிடத்தக்க ஆளுமை. தமிழ்ப்பாடல்களைப் பாடுவதே கீழ்மை என்ற நோக்கு இருந்த காலங்களில் தமிழிசைப் பாடல்களைச் செல்லுமிடந்தோறும் பாடிப் பரப்பியவர்; பரவியவர். திருவையாற்றில் நிகழ்ந்து...

    Read More
    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 67

    67 உலகம் தெரியவில்லை சாரு நிவேதிதா என்கிற பெயரைக் கேட்டாலே நவீன இலக்கிய உலகில் யாருக்கும் பிடிக்கவில்லை என்பதும் அவனை இவனுக்குப் பிடித்துப்போக ஒரு காரணமாக இருந்திருக்கவேண்டும். இவனைவிடவும் குள்ளமாக – தனக்கு அடக்கமாக அமைவாக இருக்கவேண்டும் என்று எடை உயரம் என சகலத்தையும் பார்த்துப் பார்த்து...

    Read More
    error: Content is protected !!