உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து வந்தார்கள் கள்ளக் கடத்தல்காரர்கள். சென்ற நூற்றாண்டோடு அவர்களின் பொற்காலம் முடிந்துவிட்டது. கோட் – வேர்ட் கடத்தல்காரர்களை விட அதிக அளவு அர்த்தமற்ற சொற்கள்...
வணக்கம்
மக்கள் புரட்சி என்றால் இப்படி இருக்க வேண்டும்.
சிறிதளவு வன்முறைகூட இல்லாமல், அகற்ற விரும்பிய அதிபரை அகற்றிக் காட்டியிருக்கிறார்கள் இலங்கை மக்கள். இனி வரப் போவது யார், என்ன செய்வார், எத்தகைய மாயம் நிகழும், அல்லது அப்படி ஏதாவது நிகழத்தான் செய்யுமா என்பதெல்லாம் பிறகு. இலங்கை மக்களின் இந்த அமைதிப் புரட்சி உலகுக்குச் சொல்லித் தரும் பாடம் இங்கே முக்கியமானது.
ஒருங்கிணைந்த நோக்கம், ஒருங்கிணைந்த செயல்பாடு இருக்குமானால் அமைதியான முறையிலேயே எந்த மலையையும் புரட்டலாம். எப்பேர்ப்பட்ட அராஜக ஆட்சியாளர்களையும் விரட்டி அடிக்கலாம்.
கவனியுங்கள். இது கட்சிகள் முன்னெடுத்த போராட்டமல்ல. இயக்கங்கள் நடத்திய புரட்சியல்ல. மக்கள் தீர்மானித்தது. தன்னியல்பாக அவர்களேதான் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தார்கள். அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் பிறகு அவர்களோடு தம்மை இணைத்துக் கொண்டார்கள். இலங்கையின் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவும் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கேவும் பதவி விலகிய அதிகாரபூர்வச் செய்தி இனி வரும்.
இது நிகழ்வதற்கு முன் நடந்த மொத்தச் சம்பவங்களையும் இந்த இதழில் ஸஃபார் அஹ்மத் காட்சிப்படுத்தியிருக்கிறார். கொழும்பு காலி முகத் திடலில் இருந்து புறப்பட்ட மக்கள் கூட்டத்துடன் பயணம் செய்து ஒன்பதாம் தேதி புரட்சி வெற்றி கண்ட கணம் வரை உடன் இருந்து பார்த்து எழுதியிருக்கிறார்.
இலங்கையில் கோட்டபாய ராஜபக்சவுக்குப் பதவி போகிறதென்றால் இங்கிலாந்தில் போரிஸ் ஜான்சன் பதவி விலகியிருக்கிறார். பொருளாதார மந்த நிலையில் சிக்கித் தவிக்கும் தேசத்தை மீட்க முடியாமல் தடுமாறிய ஜான்சன், மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்ததன் பின்னணியில் வேறு பல காரணங்களும் உள்ளன. அவற்றை விளக்கும் ந. ஜெயரூபலிங்கத்தின் கட்டுரையும், ஹாங்காங் இணைப்பின் இருபத்தைந்தாவது ஆண்டுக் கொண்டாட்டத்தை நிகழ்த்திய கையோடு சீனா மீண்டும் தைவானுடன் மல்லுக்கட்ட ஆயத்தமாவதன் வரலாற்றுப் பின்னணியை விவரிக்கும் பூவராகன் கட்டுரையும் இந்த இதழில் முக்கியமானவை.
சிறப்புப் பகுதி, முன்பே அறிவித்தது போல ‘டிவி சீரியல்களும் தமிழ்ப் பெண்களும்’. சுவாரசியம் மிக்க மூன்று கட்டுரைகள் இப்பகுதியில் இடம் பெறுகின்றன. கூடவே சிவசங்கரி வசந்தின் நகைச்சுவைக் கட்டுரை ‘டம்மி பீஸ் மார்க்கெட்’.
சிறப்புப் பகுதி சீரியல்கள் என்பதால் ‘வரலாறு முக்கியம்’ பகுதியில் தாலியைத் தொட்டிருக்கிறார் முருகு தமிழ் அறிவன். தாலி இல்லாமல் தமிழர் திருமணம் நடந்திருக்கிறது. ஆனால் தாலி இல்லாத சீரியல் ஏது?
கமெண்ட்ஸ் பகுதியில் இருந்த சில பிரச்னைகள் இப்போது முற்றிலும் தீர்க்கப்பட்டுவிட்டன. இனி நீங்கள் உங்கள் கருத்துகளை அந்தந்தக் கட்டுரையின் இறுதியிலேயே தெரிவிக்கலாம். மெட்ராஸ் பேப்பரின் ஒவ்வொரு இதழும் பெறுகிற கவனமும் வரவேற்பும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதழை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அறிமுகப்படுத்துங்கள். அவர்களையும் சந்தா செலுத்தச் சொல்லுங்கள். இது உங்கள் பத்திரிகை.
சிறப்புப் பகுதி: தமிழ் சீரியல்களும் தமிழ்ப் பெண்களும்
முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப் போவதில்லை. நான் யார் என்பதைச் சொல்லப் போவதில்லை. உங்களிடம் சற்றே எதிர்மறையில் சதிராடிப் புரியவைக்கப் போகிறேன். கட்டுரையின் இறுதியில் நான் சொல்வதற்குள்...
உலகெலாம்
சிந்திக்கலாம்
தொடரும்
52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...
மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...
மீன், ஆமை அவதாரங்கள் எடுத்த மஹாவிஷ்ணு மூன்றாவதாகப் பன்றி (வராகம்) உருவம் எடுத்தார். இரண்யாட்சன் எனும் அரக்கன் பூமிப் பந்தையே பூப்பந்து போலச் சுருட்டி எடுத்து கடலுக்கடியில் ஒளித்து வைத்து விட்டான். வராக வடிவில் அவதரித்த பெருமாள், அரக்கனுடன் ஆயிரம் ஆண்டுகள் போரிட்டு உலகை மீட்டார். இது இதிகாசங்கள்...
53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...
தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...
27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...