இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப்...
வணக்கம்
சரியாக ஒரு மாதத்தில் சென்னை புத்தகக்காட்சி ஆரம்பமாகிறது. சென்னையின் தனிப்பெரும் அடையாளங்களுள் ஒன்றான இத்திருவிழாவில் இந்த முறை நமது மெட்ராஸ் பேப்பர் பத்துக்கும் மேற்பட்ட புதிய புத்தகங்களை வெளியிடுகிறது. ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் இந்தப் புத்தகங்களைப் பதிப்பிக்கிறது. நமக்காக ‘மெட்ராஸ் பேப்பர்’ என்றொரு இம்ப்ரிண்டையே அவர்கள் புதிதாகத் தொடங்கியிருக்கிறார்கள்.
எண்ணிப் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. BukPet எழுத்துப் பயிற்சி வகுப்புகளுக்கு வந்து, எழுதக் கற்றுக்கொண்டு மெட்ராஸ் பேப்பரில் கட்டுரைகள் எழுதி, எழுத்து என்னும் செயல்பாட்டுடன் உணர்வுபூர்வமாகவும் அறிவுபூர்வமாகவும் நெருங்கிக் கலந்து, இன்று தனியாகப் புத்தகம் எழுதும் அளவுக்கு ஓர் அணி உருவாகியிருக்கிறது. இவர்கள் யாரும் இதற்கு முன் பெரிதாக எழுதியவர்களல்லர். பத்திரிகைகளில் பயிற்சி பெற்றவர்கள் அல்லர். உலகின் வெவ்வேறு மூலைகளில் வெவ்வேறு தொழில் செய்பவர்கள். வெவ்வேறு வயதினர். எழுத்தார்வம் என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்தவர்கள்.
இந்தப் புதியவர்களின் புத்தகங்களே இந்த ஆண்டின் பேசுபொருளாக இருக்கப் போகிறது என்பதில் எங்களுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. இவற்றுள் சில மெட்ராஸ் பேப்பரில் தொடர்களாக வந்தவை. நேரடியாக எழுதப்பட்ட புத்தகங்கள் சிலவற்றில் இருந்து மட்டும், சில பகுதிகளை இந்த இதழில் உங்கள் வாசிப்புக்குத் தந்திருக்கிறோம். மற்றவை, அடுத்த வாரம் வரும்.
இந்தப் புத்தகங்களின் வெளியீட்டை ஒரு கொண்டாட்டமாக்க மெட்ராஸ் பேப்பர் வாசகர்களை அன்புடன் அழைக்கிறோம். ஜனவரி 11, 2023 புதன் கிழமை அன்று மாலை சென்னை டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நாம் கூடலாம். மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள்-வாசகர்கள் சந்திப்பாக அந்நிகழ்ச்சி அமைய விரும்புகிறோம். பல்வேறு நாடுகளில் வசிக்கும் நமது எழுத்தாளர்கள் இதற்காகவே அன்று சென்னை வருகிறார்கள்.
நிகழ்ச்சி நிரல் தயாரானதும் இங்கே அறிவிக்கிறோம். இது நம் குடும்ப விழா. கூடிக் களிப்போம்.
உலகம் யாவையும்
பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற...
ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க்...
“ரஷ்யா ரஷ்யர்களுக்கே!” மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்கின்றன இந்த கோஷங்கள். சைபீரிய யாகுட் இனத்தைச் சேர்ந்தப் பெண்மணி ஒருவரைத்...
சிறப்புப் பகுதி: புத்தக முன்னோட்டம்
மெட்ராஸ் பேப்பரின் தொடக்கம் முதல் இன்று வரை இந்தப் பத்திரிகையின், இது உருவாக்கி அளிக்கும் புதிய எழுத்தாளர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும்...
சிந்திக்கலாம்
குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...
தொடரும்
1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம்...
பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை. அப்போது கல்லூரி மாணவர்களாக இருந்த நானும் என்னுடைய நண்பர்களும் அந்தப் படத்தைப் பலமுறை விரும்பிப் பார்த்தோம், அதில் இடம்பெற்ற காதல் வழியும்...
1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...
‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...
1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...
100. வந்தேமாதரம் விவாதம் நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும்...