Home » Home 03-05.2023

வணக்கம்

மெட்ராஸ் பேப்பர் தொடங்கிப் பதினொரு மாதங்கள் நிறைவடைந்து, பன்னிரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறோம். கண்மூடித் திறப்பதற்குள் ஓராண்டு நிறைந்துவிடும். ஒரு புறம் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொருபுறம், நூற்றாண்டைத் தொட்டுக் கடந்த பத்திரிகைகளை எண்ணிப் பார்த்துப் பணிந்து நிற்கத் தோன்றுகிறது.

பத்திரிகை என்பது விளையாட்டல்ல. சீரான தரம், நீடித்த வாசகர் உறவு, படிப்படியான வளர்ச்சி இருந்தால் போதும் என்று எண்ணித்தான் தொடங்கினோம். கூடுதல் இலக்காக ஒன்றே ஒன்று சேர்ந்தது. தமிழில் புதிதாக எழுத வருவோருக்கு ஒரு பரந்துபட்ட களமாக இந்த இதழ் இருக்க வேண்டும் என்பதே அது. உண்மையில் நமது மகிழ்ச்சியின் ஆதாரப் புள்ளியாக அதுவே ஆகிப் போனது. மெட்ராஸ் பேப்பரில் நீங்கள் வாரம்தோறும் படிக்கும் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் எழுத்துக்குப் புதியவர்கள். எழுதப் பயிற்சி பெற்று எழுத வந்தவர்கள். தமது ஆர்வத்தாலும் அக்கறையினாலும் இடைவிடாத முயற்சியினாலும் இன்று தேர்ந்த எழுத்தாளர்கள் ஆகியிருக்கிறார்கள்.

பெரும்பாலும் கேளிக்கை சார்ந்த செய்திகளாலும் கட்டுரைகளாலும் துணுக்குகளாலும் தமிழ் வார இதழ்கள் ஒரே முகம் காட்டத் தொடங்கி, அதனாலேயே சரிய ஆரம்பித்த சமயத்தில் ஆழமான சர்வதேசப் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொட்டுப் பேசும் இதழாக மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. உலகெங்கும் பரவி வசிக்கும் நமது எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் அந்தந்தப் பிராந்தியத்தின் மக்களை பாதிக்கும் பிரச்னைகளை விரிவாக விளக்கி எழுதினார்கள். தமிழர்கள், இந்தியர்கள், அயல்நாட்டு மக்கள் என்று ஒரு வசதிக்குச் சொல்லிக்கொள்கிறோம். உண்மையில் மனித குலத்தை பாதிக்கும் பிரச்னைகள் என்பவை எப்போதும் எங்கும் பொதுவானவையே அல்லவா?

ஓர் இணையப் பத்திரிகையை சந்தா செலுத்தி வாசிக்கும் வழக்கம் அநேகமாக யாருக்கும் இராது என்று இதனைத் தொடங்கும்போது பலபேர் எச்சரித்தார்கள். அச்சிதழ்களாகப் பல்லாண்டுகளாக வெளி வந்துகொண்டிருக்கும் சிலவற்றின் ஆன்லைன் எடிஷன்களுக்கே அயலகச் சந்தாதாரர்கள் குறைவு என்றும் சொன்னார்கள். இந்த உலகில் ஒரு குண்டூசியைக் கூட நீங்கள் விலையின்றிப் பெற இயலாது என்னும்போது ஒரு பத்திரிகையை அவ்வாறு வாசிக்கத் தருவது கூட்டம் சேர்க்க உதவுமே தவிர, கூர்ந்த வாசகர்களை உருவாக்காது என்று கருதினோம். அதனால்தான் மிகக் குறைந்ததொரு சந்தாவினை நமது இதழுக்கு நிர்ணயித்தோம்.

இதழ் பிடித்துப் போனால் ஒவ்வொரு வாசகரும் தம்மால் இயன்ற அளவுக்குப் புதிய சந்தாதாரர்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று மனப்பூர்வமாக நம்பினோம். அந்நம்பிக்கையே இன்றுவரை எங்களை இலக்கை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது.

வாசகர்களாகிய உங்களிடம் நாங்கள் அன்போடு வேண்டுவது இதனைத்தான். இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது நமது பத்திரிகை இன்னும் சிறப்பாக வெளிவர உதவும். உங்களுக்குப் பிடித்த இப்பத்திரிகையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதார்களாக்குங்கள். அது இந்தப் பத்திரிகை நீடித்து வெளிவர உதவும்.

  • கோப்பைப் புயல்

    நம் குரல்

    விரும்பாத ஒன்றும் இல்லாத ஒன்றும்

    பிரதமர் திரும்பத் திரும்பத் தமிழ்நாட்டுக்கு வருகிறார். நாடு முழுதும் பல முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர்களின் மீது நாலாபுறங்களிலும் இருந்து வழக்குப்...

    தமிழ்நாடு

    கழகக் குடும்பமும் குடும்பக் கழகமும்

    “சார் நாம ஒரு கம்பெனிக்கு வேலைக்குப் போறோம். அந்தக் கம்பெனிக்கு முதலாளியாகணும்னு நமக்கு லட்சியம் இருக்கலாம். அதுக்காகப் பாடுபடலாம். ஆனா அந்த...

    தமிழ்நாடு

    தமிழகத் தேர்தல் களம்: கூடி வாழும் குருவிகள்

    நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் மூன்று வாரங்களே இருக்கின்றன. தமிழகமும் புதுச்சேரியும் முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும்...

    புயலுக்கு அப்பால்

    உலகம்

    மீண்டும் ஐ.எஸ்: ரஷ்யாவைக் குறி வைத்தது எதனால்?

    “எல்லோரும் மண்டியிடுங்கள். இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என யாரும் மிரட்டவில்லை. துப்பாக்கியை மேலே உயர்த்திச் சுடவுமில்லை. அரங்கிற்குள்...

    உலகம்

    டிரம்ப் விவகாரம்: விடாது கருப்பு

    வீடு, நிறுவனம், மதம் ஆலயம் அல்லது அரசியல் கட்சி எதுவானாலும் சரி…. பொருளாதாரமும் அதைச் சார்ந்த முடிவுகளும் யாருடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கின்றனவோ...

    உலகம்

    மியான்மர்: மூளுமா உள்நாட்டு யுத்தம்?

    மியான்மர் ராணுவ அரசு கட்டாய ராணுவச் சேவை திட்டத்தை ஏப்ரல் முதல் செயல்படுத்த உள்ளது. ஏற்கெனவே அதிகாரப்பூர்வமற்ற வகையில் ஆள் சேர்ப்புப் பணி...

    உலகம்

    உக்ரைன் எனும் பலியாடு

    ஒரு முட்டாளுக்கு வழிகாட்டி, சிறகுகளையும் தந்துவிட்டால், அவனது முன்னேற்றம் உறுதி. குண்டுகளில்கூட கெட்டிக்காரக் குண்டுகள், முட்டாள் குண்டுகள் என்று...

    நுட்ப பஜார்

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 93

    93. வேட்கை அசோகமித்திரனை வெளியீட்டு விழாவில் பார்த்ததோடு சரி. பார்த்து நாளாயிற்றே என்று சும்மா பார்க்கப்போனான். பச்சையப்பாஸில் படித்துக் கொண்டிருப்பதாய் பேர்பண்ணிக் கொண்டு பரீக்‌ஷாவில் தீவிரமாக இருந்த காலத்தில் எத்தனை முறை தாமோதர ரெட்டி தெருவில் இருந்த அசோகமித்திரன் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம்...

    Read More
    திறக்க முடியாத கோட்டை தொடரும்

    திறக்க முடியாத கோட்டை – 24

    24 – வாரிசு இல்லாத வல்லரசு 20-பிப்-2014. சுதந்திர சதுக்கம், கீவ், உக்ரைன். குறி தவறாமல் சுடும் ஸ்நைப்பர்கள் சதுக்கத்தைச் சுற்றி வளைத்தனர். முக்கியப் போராளிகள் ஐம்பது பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். சற்று நேரத்தில் எண்ணிக்கை இருமடங்கானது. ஆம்புலன்ஸ்களிலேயே பரலோகம் சென்றடைந்த ஆன்மாக்கள் ‘பரலோக...

    Read More
    தொடரும் ப்ரோ

    ப்ரோ – 24

    “நீ பிழைப்புக்கு ரவுடி, நான் பிறந்ததில் இருந்தே ரவுடி” என்று ‘போக்கிரி’ படத்தில் விஜய், வில்லனைப் பார்த்துச் சொல்வார். மகிந்த ராஜபக்சேவும் அப்படித்தான். அவரும் பிறந்ததில் இருந்தே ரவுடிதான். ஆனால் சில விவகாரங்களில் பிழைப்புக்கு ரவுடிப் பாத்திரம் ஏற்றவர் அவர். தமிழர் பிரச்னையில் அவரால் இந்த...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 97

    97. காஷ்மீர் இணைப்பு இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது திபெத், சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை ஒட்டி காஷ்மீர் இருந்ததால், இந்தியாவின் மற்ற சமஸ்தானங்களைவிடவும் அதிகக் கவனத்துடன் கையாளப்பட வேண்டியதாக இருந்தது. ஜம்மு-காஷ்மீரின் முக்கியமான மத்திய பகுதியான ஜம்மு முஸ்லிம்கள் அதிகம் கொண்ட பகுதி...

    Read More
    சைபர் க்ரைம் தொடரும்

    கத்தியின்றி ரத்தமின்றி – 18

    நீரின்றி அமையாது உலகு அரங்கம் நிறைந்திருந்தது. முதல் வரிசையில் அமர்ந்திருந்தான் திவாகர். இன்னும் சில நிமிடங்களில் அவனைப் பேச அழைத்துவிடுவார்கள். மடியில் அவனது லேப்டாப். தனது ப்ரசன்டேஷனை மீண்டுமொருமுறை ஸ்க்ரோல் செய்து கொண்டிருந்தான் திவாகர். எல்லாமும் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. கண்களை...

    Read More
    error: Content is protected !!