Home » Home 03-05.2023

வணக்கம்

மெட்ராஸ் பேப்பர் தொடங்கிப் பதினொரு மாதங்கள் நிறைவடைந்து, பன்னிரண்டாவது மாதத்தில் அடியெடுத்து வைக்கிறோம். கண்மூடித் திறப்பதற்குள் ஓராண்டு நிறைந்துவிடும். ஒரு புறம் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னொருபுறம், நூற்றாண்டைத் தொட்டுக் கடந்த பத்திரிகைகளை எண்ணிப் பார்த்துப் பணிந்து நிற்கத் தோன்றுகிறது.

பத்திரிகை என்பது விளையாட்டல்ல. சீரான தரம், நீடித்த வாசகர் உறவு, படிப்படியான வளர்ச்சி இருந்தால் போதும் என்று எண்ணித்தான் தொடங்கினோம். கூடுதல் இலக்காக ஒன்றே ஒன்று சேர்ந்தது. தமிழில் புதிதாக எழுத வருவோருக்கு ஒரு பரந்துபட்ட களமாக இந்த இதழ் இருக்க வேண்டும் என்பதே அது. உண்மையில் நமது மகிழ்ச்சியின் ஆதாரப் புள்ளியாக அதுவே ஆகிப் போனது. மெட்ராஸ் பேப்பரில் நீங்கள் வாரம்தோறும் படிக்கும் எழுத்தாளர்களில் பெரும்பான்மையானவர்கள் எழுத்துக்குப் புதியவர்கள். எழுதப் பயிற்சி பெற்று எழுத வந்தவர்கள். தமது ஆர்வத்தாலும் அக்கறையினாலும் இடைவிடாத முயற்சியினாலும் இன்று தேர்ந்த எழுத்தாளர்கள் ஆகியிருக்கிறார்கள்.

பெரும்பாலும் கேளிக்கை சார்ந்த செய்திகளாலும் கட்டுரைகளாலும் துணுக்குகளாலும் தமிழ் வார இதழ்கள் ஒரே முகம் காட்டத் தொடங்கி, அதனாலேயே சரிய ஆரம்பித்த சமயத்தில் ஆழமான சர்வதேசப் பிரச்னைகளையும் சமூகப் பிரச்னைகளையும் தொட்டுப் பேசும் இதழாக மெட்ராஸ் பேப்பர் வெளிவரத் தொடங்கியது. உலகெங்கும் பரவி வசிக்கும் நமது எழுத்தாளர்களும் செய்தியாளர்களும் அந்தந்தப் பிராந்தியத்தின் மக்களை பாதிக்கும் பிரச்னைகளை விரிவாக விளக்கி எழுதினார்கள். தமிழர்கள், இந்தியர்கள், அயல்நாட்டு மக்கள் என்று ஒரு வசதிக்குச் சொல்லிக்கொள்கிறோம். உண்மையில் மனித குலத்தை பாதிக்கும் பிரச்னைகள் என்பவை எப்போதும் எங்கும் பொதுவானவையே அல்லவா?

ஓர் இணையப் பத்திரிகையை சந்தா செலுத்தி வாசிக்கும் வழக்கம் அநேகமாக யாருக்கும் இராது என்று இதனைத் தொடங்கும்போது பலபேர் எச்சரித்தார்கள். அச்சிதழ்களாகப் பல்லாண்டுகளாக வெளி வந்துகொண்டிருக்கும் சிலவற்றின் ஆன்லைன் எடிஷன்களுக்கே அயலகச் சந்தாதாரர்கள் குறைவு என்றும் சொன்னார்கள். இந்த உலகில் ஒரு குண்டூசியைக் கூட நீங்கள் விலையின்றிப் பெற இயலாது என்னும்போது ஒரு பத்திரிகையை அவ்வாறு வாசிக்கத் தருவது கூட்டம் சேர்க்க உதவுமே தவிர, கூர்ந்த வாசகர்களை உருவாக்காது என்று கருதினோம். அதனால்தான் மிகக் குறைந்ததொரு சந்தாவினை நமது இதழுக்கு நிர்ணயித்தோம்.

இதழ் பிடித்துப் போனால் ஒவ்வொரு வாசகரும் தம்மால் இயன்ற அளவுக்குப் புதிய சந்தாதாரர்களைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்று மனப்பூர்வமாக நம்பினோம். அந்நம்பிக்கையே இன்றுவரை எங்களை இலக்கை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறது.

வாசகர்களாகிய உங்களிடம் நாங்கள் அன்போடு வேண்டுவது இதனைத்தான். இதழைக் குறித்த உங்கள் கருத்துகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளுங்கள். அது நமது பத்திரிகை இன்னும் சிறப்பாக வெளிவர உதவும். உங்களுக்குப் பிடித்த இப்பத்திரிகையை உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து அவர்களையும் சந்தாதார்களாக்குங்கள். அது இந்தப் பத்திரிகை நீடித்து வெளிவர உதவும்.

  • கோப்பைப் புயல்

    நகைச்சுவை

    மேனேஜரைக் காதலிக்காதே!

    உங்க ஊரில் மயில் குரைத்ததா? எங்கள் ஊரில் யானை ஊளையிட்டது. ‘கோட் – வேர்ட்’ கரெக்ட் என்று கூறி பெட்டிகளை மாற்றிக் கொண்டு எவ்வளவு கம்பீரமாக வாழ்ந்து...

    நம் குரல்

    செங்கோல் அரசியல்

    ராஜராஜ சோழன், ஜவாஹர்லால் நேரு, மௌண்ட் பேட்டன், ஆகஸ்ட் 15, திருவாவடுதுறை ஆதீனம், பரிசுப் பொருள் கண்டெடுப்பு உள்ளிட்ட அனைத்தையும் சிறிது நகர்த்தி...

    நகைச்சுவை

    நான் யார்? நான் யார்? நீ யார்?

    முதலில் நாம் அறிமுகம் செய்து கொள்ளலாம். மன்னியுங்கள்… நாம் என்றா சொன்னேன்..? இல்லையில்லை, நான் என்னை யார் என்று சொல்லி அறிமுகம் செய்து கொள்ளப்...

    தமிழ்நாடு

    சிங்கப்பூரில் ஸ்டாலின்: சாதித்தது என்ன?

    இந்த மே மாதம் 24 மற்றும் 25’ஆம் நாட்கள் அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வரும் அவரது அமைச்சரவை, அதிகாரிகள் குழுவினர் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூருக்கு...

    புயலுக்கு அப்பால்

    உலகம்

    மீண்டும் மதவாதம்: இனி மீளுமா இலங்கை?

    கடந்த வருடம் ஜூலை 9ம் தேதி அறுபத்தொன்பது இலட்சம் மக்களால் ஐம்பத்திரண்டு சதவீதப் பெரும்பான்மையுடன் தேர்வு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே...

    உலகம்

    திருப்பி அடிக்கும் வழி

    கீவ்வின் புறநகர்ப் பகுதி. ஊழியர்கள் இருவர் ஆரஞ்சு நிற மேலங்கியோடு ஒரு ரஷ்யக் கல்வெட்டைக் கருவியைக் கொண்டு சுரண்டிக் கொண்டிருந்தார்கள். பத்து...

    உலகம்

    மக்களே, கடன் கொடுங்கள்!

    ‘ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் சராசரியாக இவ்வளவு கடன் இருக்கிறது, அதை ஓர் இந்தியக் குடிமகனாக நான் ஜனாதிபதிக்கு திருப்பி அனுப்பிவிட்டேன்’ என்பதாகச்...

    நுட்ப பஜார்

    கணினி

    மேனேஜரைக் காதலிப்போம்!

    “உங்களுக்குப் பாஸ்வேர்ட் ஸ்ட்ரெஸ் இருக்கா?” இப்படியொரு கேள்வி நூதனமாய்த் தெரியலாம். ஆனால் சமீப காலங்களில் இக்கேள்வி பரவலாகி வருகிறது. ஒரு சராசரி...

    நுட்பம்

    ஜன்னலைத் திறந்தால் என்ன கிடைக்கும்?

    உலகம் முழுவதும் செல்பேசிக்கு அடுத்துப் பல கோடி மக்கள் தினம் பயன்படுத்தும் கணினிகள் என்றால் அது மைக்ரோஃசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்கு தளத்தைக்...

  • தொடரும்

    இலக்கியம் நாவல்

    ஆபீஸ் – 52

    52 போதும் அப்பாவைப் பற்றி, தன் பால்யத்தைப் பற்றி என்றாவது ஒருநாள் நாவலாக எழுதவேண்டும் என்று இருப்பதாகவும் அதற்கு ‘ஓட்டைப் படகு’ என பெயர்கூட வைத்திருப்பதாகவும் சிற்றுண்டி உண்கையில் தன்னிச்சையாகப் பேசிக்கொண்டிருந்தான். சமையற்கார மாமாவுக்கு பதில் கமலா மாமி இட்லி வைத்தார். பனியன் அணிந்து...

    Read More
    கடவுளுக்குப் பிடித்த தொழில் தொடரும்

    கடவுளுக்குப் பிடித்த தொழில் – 27

    மரபணுத் தொகுப்பின் உறுதித்தன்மையை பாதிக்கும் காரணிகள் உயிரிகளின் மரபணுத் தொகுப்பானது இருவிதமான காரணிகளினால் பாதிக்கப்படக்கூடும். ஒன்று புறக்காரணிகள் (exogenous) மற்றொன்று அகக்காரணிகள் (endogenous). வேதியியல் கூறுகள், கதிர்வீச்சு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உடல்நலத்திற்கு ஒவ்வாத உணவுப் பொருட்கள்...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு குடும்பக் கதை – 53

    53. ஆங்கிலேயரின் அலட்சியம் கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் சுய ஆட்சி, டொமினியன் அந்தஸ்து குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்றாலும், இறுதி முடிவு எடுப்பதில் சிரமம் நீடித்தது. மீண்டும் கட்சியில் ஒரு பிளவு வந்துவிடுமோ என்ற அளவு விஷயம் சிக்கலாகிப் போனது. நிலைமையைச் சமாளிக்க வழக்கப்படி, காந்திஜியின்...

    Read More
    தல புராணம் தொடரும்

    ‘தல’ புராணம் – 27

    தலைமைப் பண்புகள் ஒரு நாட்டில் பிறந்து, இன்னொரு நாட்டில் குடியேறி, அவரவர் துறையில் சிறந்து விளங்கிய இருபத்தைந்து தலைமைச் செயலதிகாரிகள் பற்றி இதுவரை பார்த்தோம். இதில் ஒன்பது பெண்களும் பதினாறு ஆண்களும் அடங்குவர். உலக மக்கள் தொகையில் பாதியாக இருந்தாலும் உலகிலுள்ள பெரிய நிறுவனங்களைப் பார்க்கும் போது...

    Read More
    உயிருக்கு நேர் தொடரும்

    உயிருக்கு நேர் -27

    27 நெல்லை தந்த அறிவியல் தமிழ் நாயகர்கள் பெரும்பாலும் தமிழறிஞர்களாக சென்ற இரு நூற்றாண்டுகளில் முகிழ்ந்தவர்கள், தமிழிலக்கியங்கள், தமிழ்மொழி, தமிழர் வாழ்வியல் போன்றவற்றில் ஆழ்ந்த ஈடுபாடும் தோய்வும் கொண்டவர்களாக இருந்தவர்கள். அவர்களே பல இலக்கியங்களைப் படைத்தவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்; அல்லது...

    Read More
    இலக்கியம் உலகச் சிறுகதைகள்

    மரம்

    மரியா லூயிஸா பொம்பால்  ஆங்கிலத்தில்: Rosalie Torres-Rioseco தமிழில்: ஆர். சிவகுமார் பியானோ வாசிப்பவர் உட்கார்ந்தபிறகு கொஞ்சம் செயற்கையாக இருமிவிட்டு ஒரு கணம் தீர்க்கமாக மனதை ஒருமுகப்படுத்துகிறார். ஓர் இசை வரியின் அலகு ஒன்று அரங்கத்தின் மௌனத்தைக் கலைத்து எழத்துவங்கி தெளிவாகவும் நிதானத்துடனும்...

    Read More
    error: Content is protected !!