Home » Home 02-10-2022

வணக்கம்

How to.

கூகுளில் இதைப் போட்டுத் தேடாத நாளும் இல்லை; நபரும் இல்லை. இது எப்படி, அது எப்படி என்று ஒவ்வொருவருக்கும் எதையாவது சிலவற்றைத் தெரிந்துகொள்ளும் ஆர்வமோ தேவையோ எப்போதும் இருக்கிறது. OSX Daily என்று ஒரு தொழில்நுட்ப இணைய இதழ் உள்ளது. முற்றிலும் ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளைக் குறித்தே அலசும் கட்டுரைகளை வெளியிடுகிற இதழ். இந்தப் பத்திரிகையின் 99 சதவீதக் கட்டுரைத் தலைப்புகள் ‘How to’ என்றே தொடங்கும். மக்களின் தேவை அப்படி. மறுபுறம், யூ ட்யூபில் பார்த்து வெடிகுண்டு செய்யக் கற்றுக்கொண்டவர்களைப் பற்றிக் கூட கேள்விப்படுகிறோம். how to என்று ஆரம்பித்தால் எதையும் கொண்டுவந்து கொட்டும் கற்பக விருட்சமாகிவிட்டது இணையம். குருகுலவாசம் இருந்து பயில்வது, மூத்தோரிடம் பார்த்துக் கற்பது, அனுபவத்தில் அறிவது எல்லாம் பழங்கதை. தேவை என்று தோன்றிய கணத்தில் கையில் இருக்க வேண்டும். அதுவும் அதிக சிரமமின்றி எளிதாக உள்வாங்கும் விதமாக.

நல்லது. இது இத்தலைமுறையின் கல்யாண குணம். ஒன்றும் செய்ய முடியாது.

இந்த இதழில் வெளியாகியுள்ள How to ரகக் கட்டுரைகளை வாசித்துப் பாருங்கள். அவை பேசும் துறை சார்ந்து அதிகபட்ச எளிமையையும் பயன்பாட்டையும் கருத்தில் கொண்டு இவை எழுதப்பட்டுள்ளன. ஷான் கருப்புசாமி, நாவல் எழுதுவதற்குத் தயாராவது எப்படி என்று விவரிக்கிறார். மறுபுறம் சரவணகார்த்திகேயன் ஓர் அழகியை ரசிப்பது எப்படி என்று கற்றுத் தருகிறார். இரண்டும் இரு வேறு எல்லைகள் என்று தோன்றினால் நீங்கள் வேறு தலைமுறை. எல்லாம் கலைதானே என்பீர்களானால் இன்றைய உலகில் வாழ்பவர்.

இது புரிய வேண்டுமானால் பள்ளி மாணவர்களிடம் இருந்து தொடங்க வேண்டும். இந்தத் தலைமுறை மாணவர்களைக் கையாள்வது எப்படி என்று ரும்மான் எழுதியிருப்பதைப் படியுங்கள். மாணவர்களைக் காட்டிலும் ஆசிரியர்களும் பெற்றோரும் அதிகம் பயில வேண்டியிருப்பதாகத் தோன்றிவிடும். அச்சப்பட அவசியமில்லை என்றாலும் கால மாற்றத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஒரு நாளைத் திட்டமிடுவது எப்படி என்று தொடங்கி, ஆயிரம் பேருக்குச் சமைப்பது எப்படி என்பது வரை இந்த இதழில் இடம் பெற்றிருக்கும் ‘எப்படி’க் கட்டுரைகளை தினம் ஒன்றாக நீங்கள் வாசித்து, யோசிக்கலாம். இவை மிக நிச்சயமாக ஒரு புதிய விஷயத்தையாவது உங்களுக்கு அறிமுகப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கை அரசியல் அமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படுகிற திருத்தங்கள் குறித்து ஸஃபார் அஹ்மத் எழுதியுள்ள கட்டுரை இந்த இதழில் மிக முக்கியமானதொன்று. சில ஆப்பிரிக்க, தென்னமெரிக்க தேசங்களில் இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அரசியல் குளறுபடிகளெல்லாம் இன்று நம்மருகே, நம் சொந்தச் சகோதரர்கள் வசிக்கும் தேசத்தில் நிகழ்வதைக் காணும்படிச் செய்திருக்கிறது காலம். புத்தர் கைவிட்டுவிட்ட தேசத்தை எந்தப் புனிதர் வந்து மீட்பார் என்றுதான் தெரியவில்லை.

மெட்ராஸ் பேப்பர் குறித்த உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள். மேலும் பல புதிய சுவாரசியங்களுடன் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்போம்.

  • விருந்தினர் பக்கம்: சிஎஸ்கே, ஷான்

    சிறப்புப் பகுதி: எப்படிச் சொல்வேனடி?

    திசையெலாம்

    நம் குரல்

    வாக்களிக்கும் நேரம்

    குடிநீருக்குப் பிரச்னை இருக்கக் கூடாது. ரேஷன் பொருள்கள் தடையறக் கிடைக்க வேண்டும். மாநிலத்தில் எங்கிருந்தும் எந்த இடத்துக்கும் சென்று வர சாலைகள்...

    ஆளுமை

    ப்ரூஃப் மிஸ்டேக்கில் பிறந்த கடவுள்

    இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் காலமானார். அவர் கண்டுபிடித்த ஹிக்ஸ் போசான் என்ற துகள், காலத்தால் அழியாதது. கடவுளும் இயற்பியலும் இருக்கும்வரை இருக்கப்...

    உலகம்

    ஈரான் நடத்திய ஒன் டே மேட்ச்

    பள்ளிக்கூடத்தில் வம்பு செய்வதற்கென்றே சில பிள்ளைகள் இருப்பார்கள். இதில் யாராவது தன்னை அடித்துவிட்டார்கள் என்று முறையிட்டால், “நீ என்ன செய்தாய்?” என்ற...

    உலகம்

    இலக்கை அடைய இரண்டு வழி

    ரஷ்யா – உக்ரைன் போர் இரண்டு ஆண்டுகளாக உச்சத்தில் இருக்கிறது. மேற்காசியப் பகுதியில் உருவாகிய போர், வளர்ந்துகொண்டே போகிறது. பொதுவாக, போர்க்...

    இன்குபேட்டர்

    மூளையில் ஒரு சிப், முதுகுத் தண்டில் ஒரு சிப்

    ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அப்பழமொழியின் தமிழ் மொழிபெயர்ப்பு “ரோம் நகரம் ஒரு நாளில் கட்டப்படவில்லை”. பிரமாண்டமான எதையும் குறுகிய காலத்தில்...

    உலகம்

    பட்டம் கட்டி ஓரம் கட்டு!

    “ரஷ்யா ரஷ்யர்களுக்கே!” மாஸ்கோ மெட்ரோ ரயில் நிலையத்தில் கேட்கின்றன இந்த கோஷங்கள். சைபீரிய யாகுட் இனத்தைச் சேர்ந்தப் பெண்மணி ஒருவரைத்...

    உலகம்

    வீடு கட்டி அடிக்கும் அரசு!

    நிறவெறிக்குப் பெயர் பெற்ற தென்னாப்பிரிக்காவில், ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழ்கிற மக்கள் தங்களுக்கான வீடு கேட்டு அரசாங்கத்துக்கு மனுச் செய்து...

    உலகம்

    இலங்கையின் டி20

    இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் ஜூரம், கொளுத்தும் சித்திரை வெயிலையும் தாண்டி மெதுமெதுவாய்ப் பொதுமக்கள் மத்தியில் படர்ந்து கொண்டிருக்கிறது. பெரும்...

  • தொடரும்

    சாத்தானின் கடவுள் தொடரும்

    சாத்தானின் கடவுள் – 1

    1. நாற்பது வயதுக் குழந்தை எனக்கு ஏழு வயது நிறைவடைய மூன்று மாதங்கள் இருந்தபோது அவன் பிறந்தான். அன்றைக்கு ஜூலை மாதம் இரண்டாம் தேதி, 1979வது வருடம். பிறக்கும்போது அவனுக்கு நாற்பது வயதாக இருக்கும் என்று முதல் நாள் இரவு படுக்கப் போகும் முன்பு அப்பா சொன்னார். அந்தத் தகவல் தந்த திகைப்பில் சரியாகத் தூக்கம்...

    Read More
    தொடரும் பணம்

    பணம் படைக்கும் கலை – 1

    பணப் பார்வை தொண்ணூறுகளில் பெரும் புகழ் பெற்ற காதல் திரைப்படம் அது. ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டையும் ஒரு புயலைப்போல் அள்ளிக்கொண்டது, குறிப்பாக, இளைஞர்களை. அப்போது கல்லூரி மாணவர்களாக இருந்த நானும் என்னுடைய நண்பர்களும் அந்தப் படத்தைப் பலமுறை விரும்பிப் பார்த்தோம், அதில் இடம்பெற்ற காதல் வழியும்...

    Read More
    உரு தொடரும்

    உரு – 1

    1. கேரித் தீவு மலேசியாவின் கிள்ளான் நகரிலிருந்தது அப்பள்ளி. தெங்கு பெண்டாஹாரா அஸ்மான் ஆங்கிலப்பள்ளி. அதுவரை அவன் வசித்தது கேரித் தீவில். அங்கே இருந்தோர் ஆடு, கோழிகளிடம் கூட தமிழில்தான் பேசிக் கொண்டிருந்தனர். இங்கோ அவனுக்குப் புரியாத ஏதேதோ மொழிகளைப் பேசும் மக்கள் இருந்தனர். ஒன்றாம் வகுப்பில்...

    Read More
    aim தொடரும்

    AIm it! – 1

    ‘சிப்’புக்குள் முத்து மின்சாரத்திற்கு முன் – மின்சாரத்திற்குப் பின் என்று மனிதகுல வரலாறை இரண்டாகப் பிரிக்கலாம். மின்சாரம் தொடாத துறைகளே இல்லை. பெரும்பாலான அறிவியல் கண்டுபிடிப்புகள் நம் வாழ்வின் ஒரு குறிப்பிட்ட சிக்கலைத் தீர்க்கும். இதன் மூலம் வாழ்வை எளிதாக்கும். ஆனால் மிகச் சில...

    Read More
    G தொடரும்

    G இன்றி அமையாது உலகு – 1

    1. உலக நாயகன் ஒவ்வொரு மனிதனுக்கும், ஆயிரம் கரங்கள் கொண்ட தனது பேருருவில், ஏதோவொன்றின் விரல் நுனியைப் பற்றிக்கொண்டு நடை பழகிக்கொடுக்கும் ஆதிபராசக்தியென உலகெங்கும் இன்று விரவியிருக்கிறது கூகுள். இம்மந்திரச் சொல்லை உச்சரிக்காத கணினியில்லை. இது நுழையாத நுட்பங்களில்லை. இதன் ஜீவநாடியைப் பற்றிக்கொண்டு...

    Read More
    குடும்பக் கதை தொடரும்

    ஒரு  குடும்பக்  கதை – 100

    100. வந்தேமாதரம் விவாதம் நேருவுக்கும், படேலுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கிய காந்திஜி ஜனவரி 30ஆம் தேதி மாலை கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் பற்றியும், காந்திஜியின் பூத உடலுக்கு முன்பாக மவுண்ட் பேட்டன் வேண்டுகோள்படி (தங்களுக்கிடையிலான வேற்றுமைகளை மறந்து) நேருவும்...

    Read More
    error: Content is protected !!