Home » Archives for சிவராமன் கணேசன்

Author - சிவராமன் கணேசன்

Avatar photo

இந்தியா

துவாரகை: ஆழ்கடல் சொர்க்க வாசலா?

குஜராத் மாநிலம், துவாரகா கடற்பகுதியில் தொல்பொருள் ஆய்வாளர்கள் நீருக்கடியில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். ஆழ்கடல் அகழாழ்வு மையம் (Underwater Archaeology Wing) எண்பதுகளில் இருந்தே இந்தப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. இப்போது சமீபத்தில் இதற்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டு, ஆய்வுகள்...

Read More
இந்தியா

தூய்மையும் கயமையும்: ஒரு ‘புனித’ப் பிரச்னை

கங்கை நீர் தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் வல்லமை கொண்டது என்று ஓர் ஆய்வு முடிவினை உத்தரப்பிரதேச அரசு வழங்கியுள்ளது. உலகின் ஒரே நன்னீர் நதி கங்கை மட்டும்தான் என்றும் ஓர் ஆய்வுக்குழுவைக்கொண்டு உறுதி செய்திருக்கிறது. இது உண்மைதானா? அறிவியல் என்ன சொல்கிறது? இந்தியாவில் பிறந்த ஹிந்துக்கள்...

Read More
தமிழ்நாடு

கலகக் கழகம்

அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தத் தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தேர்தல் சின்னங்கள் ஒதுக்கீட்டு விதிகளின்படி விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்திருக்கிறது. திமுகவுக்கு வலுவான மாற்றாக எம்ஜிஆரால் தோற்றுவிக்கப்பட்ட கட்சி அண்ணா...

Read More
தமிழ்நாடு

திரும்பிப் பார், இது இரும்பு நிலம்!

தமிழ்நாட்டில் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இரும்பு பயன்படுத்தப்பட்டிருப்பதாகச் சான்றுகள் வெளியாகியிருக்கின்றன. தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்புத் தொல்பொருள்களை ஆய்வுசெய்தபோது அவற்றின் காலம் கி.மு. 3,345 வரை செல்வதாகத் தொல்லியல் துறை அறிவித்திருக்கிறது...

Read More
இந்தியா

நீரில் ஒரு சாகசம்!

இந்தியக் கடற்படையில் மூன்று புதிய போர்க்கப்பல்கள் இணைக்கப்பட்டன. இவை உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டவை என்பது முதற்பெருமை. நுட்பத்திலும், திறனிலும் சர்வதேச வல்லமை கொண்டவை என்பது இரண்டாவது. ஐஎன்எஸ் வாக்‌ஷீர், ஐஎன்எஸ் சூரத் மற்றும் ஐஎன்எஸ் நீலகிரி பி17ஏ என்பன இந்த மூன்று புதிய தயாரிப்புகளின் பெயர்கள்...

Read More
ஆளுமை

கலப்படமில்லாக் கலைஞன்

பின்னணிப்பாடகர் ஜெயச்சந்திரன் காலமானார். நாற்பது வருடங்களுக்கும் மேலாக, மூன்று தலைமுறைகளுக்கு இசையை வழங்கிய அவரது குரல் காற்றோடு கலந்தது. ஜெயச்சந்திரன் அடிப்படையில் ஒரு தாளவாத்தியக்காரர். மிருதங்கக் கலைஞர். இளவயதிலேயே மேடையேறி, தன் தனித்திறனை வெளிப்படுத்தி கேரள அரசின் பரிசு பெற்றவர். சுவாரசியமான...

Read More
புத்தகக் காட்சி

‘புனைவு என்றால் நாவல் மட்டுமே.’

சென்னைப் புத்தகக் கண்காட்சி களைகட்டியிருக்கிறது. இம்முறை புத்தாண்டுக்கு முன்னரே ஆரம்பித்து பொங்கலுக்குள் நிறைவு பெறும் புதிய அட்டவணையோடு. எப்போது வேண்டுமானாலும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தை உருவாக்குவேன் என்று மிரட்டிக்கொண்டிருந்த காலநிலையை எதிர்த்து வென்றது அதன் முதல் வெற்றி. தொடக்கவிழாவிற்காக...

Read More
ஆண்டறிக்கை

எனக்கு நான் தந்த பரிசு: சிவராமன் கணேசன்

இந்த வருடத்தின் முதல் நாளே கொண்டாட்டத்தோடு தொடங்கியது. புதிய தலைமுறை டிஜிடல் இதழில் என்னுடைய குறுநாவல் ‘சக்ரவியூஹம்’ ஜனவரி ஒன்றாம் தேதி முதல் வெளிவந்தது. பல புதிய வாசகர்கள், தீவிர விமர்சனங்கள் எனப் பல புதிய திறப்புக்களைக் கொடுத்தது. பிரபலமான ஓர் ஊடகத்தில் எழுதுவதன் பலனை நன்கு புரியவைத்தது...

Read More
இசை

வாஹ், ஜாகிர்!

தபேலா கலைஞர் ஜாகிர் உசேன் கடந்த வாரம் காலமானார். தபேலா என்ற தாளவாத்தியக் கருவிக்குத் தனித்த அடையாளம் தந்தவர். தமது 73 வது வயதில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் இசையாகிப் போனார். அவர் ஓர் இசைக் குடும்பத்தில் பிறந்தவர். பிறந்தபோதே அவரது தந்தையான அல்லா ரக்கா குரேஷிக்கு உடல்நிலை மோசமாயிருந்தது. அவர்...

Read More
இசை

பந்துவராளியும் பால் கொழுக்கட்டையும்

சென்னையின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான மார்கழி கர்நாடக இசைவிழா இந்த வாரம் தொடங்கியிருக்கிறது. நூற்றாண்டுத் தொடர்ச்சி கொண்ட இத்திருவிழாவை ஆண்டுதோறும் கலைஞர்களும், ரசிகர்களும் ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார்கள். இந்து மதத்தில் மார்கழி மாதம் இசைக்கும், பக்திக்கும் உகந்த மாதமாக ஆண்டாள் மற்றும்...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!