Home » Archives for தர்ஷனா கார்த்திகேயன்

Author - தர்ஷனா கார்த்திகேயன்

Avatar photo

சிறுகதை

கேள்வி

“அத்த, ஏன் அம்மா அப்புடி சொன்னாங்க?” புயல் எச்சரிக்கை விடப்பட்டிருக்கிறது. மழையும் கனமாகத் தான் பெய்கிறது. இந்த அரசாங்கம் விடுமுறை விட்டால்தான் என்ன?அல்லது பள்ளிக்கூடம்தான் இந்தப் போட்டிகளைத் தள்ளி வைத்தால்தான் என்ன?. ஆற்றாமை தாளவில்லை மீராவுக்கு. மகளின் கேள்வி அவள் யோசனையைத் துண்டித்தது. எந்த...

Read More
உலகம்

பூமியின் சாம்பியன்கள்!

ஒரு நிறைமாதக் கர்ப்பிணி. பிரசவ வலியும் வந்துவிட்டது. அவசர ஊர்தியையும் அழைத்தாயிற்று. ஆனால் அந்த வண்டி வரக் கூடிய அளவு சீரான பாதை இல்லை. கர்ப்பிணியுடன் தங்கள் வண்டியிலேயே அவர்கள் திரும்பிச் செல்கிறார்கள். வண்டிச் சக்கரம் பழுதடைந்து விடுகிறது. வேறு வழியே இல்லாமல், நிறைந்த இரவில், கழுதைப் புலிகளின்...

Read More
தொழில்

வெடியின் கதை

சிவகாசியின் முதலாவது தீப்பெட்டி ஆலை நிறுவப்பட்டு இந்த வருடத்துடன் நூறு ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. வேளாண்மை செய்வதற்குத் தகுதியற்ற நிலமானாலும் கணிசமான அளவு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிற தொழில் கேந்திரமாக இருக்கின்றது சிவகாசி. கந்தக பூமி என்றும் குட்டி ஜப்பான் என்றும் அழைக்கப்படும்...

Read More
விருது

எழுது. யோசிக்காதே!

நோர்வே நாட்டின் மேற்கு கரையோரப் பகுதியொன்றில் வண்டியோட்டியபடி சென்று கொண்டிருக்கிறார் அந்த 64 வயது முதியவர். அமைதி நிறைந்த அழகான நாட்டுப்புறத் தெருக்களில் தனிமையில் வண்டியோட்டிச் செல்வது அவருக்குப் பிடிக்கும். அப்போது அவருக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. உலகின் அதிஉயர் விருதுகளில் ஒன்று...

Read More
கிருமி

எல்லா ஊரிலும் சென்னைக் கண்

மழைக்காலத்துக்கென்றே நேர்ந்து விடப்பட்டிருக்கும் பிரத்யேகமானதொரு நோய் மெட்ராஸ் ஐ. இந்திய உபகண்டத்தில் உருவான இதனால் ஏற்பட்ட முதல் பாதிப்பு, ஆசியாவின் முதல் மற்றும் உலகின் இரண்டாவது பழைய கண் மருத்துவமனையான ‘மெட்ராஸ் ஐ இன்ஃபார்மரி’ (Madras Eye Infirmary)-யில் பதிவு செய்யப்பட்டது. அதனால் இருபதாம்...

Read More
ஆளுமை

இரண்டு பேரில் யார் பாரதியார்?

பாரதி ஆழ்வாரை உங்களுக்குத் தெரியுமா? பன்னிரண்டு ஆழ்வார்களுள் ஒருவரல்லர். பதிமூன்றாவதாக யாராவது சேர்த்துவிட்டார்களா என்றால் அதுவுமில்லை. இவர் நமது மகாகவி பாரதிதான். சென்னை தரமணி மத்திய கைலாஷ் கோயிலில்தான் பாரதியாருக்கு ஆழ்வார் அந்தஸ்தும் ஒரு சிலையும் உள்ளன. ஓரடி உயரமுள்ள ஐம்பொன் சிலை. முறுக்கு...

Read More
ஆளுமை

உம்மன் சாண்டி: மக்களின் முதல்வர்

பீதி, அது ஒன்று தான் அங்கிருந்த அத்தனை பேரிடமும் எஞ்சியிருந்த ஒரே உணர்வு. நேரமில்லை. யாராவது ஒருவரேனும் துணிந்து விவேகமாகவும் வேகமாகவும் இயங்க வேண்டிய அவசியத்தை உணர்ந்தாள் மரீனா. கைக்குக் கிட்டிய ஒரு தொலைபேசியிலிருந்து தன் உறவினரைத் தொடர்பு கொண்டு, அவர் மூலமாகத் தன் மாநிலத்தின் முதலமைச்சரிடம்...

Read More
இந்தியா

நதியெல்லாம் வெள்ளம், நகரெல்லாம் நாசம்!

டெல்லி வெள்ளக் காடாகிவிட்டது. யமுனையின் வெள்ளப் பெருக்கு எக்கணமும் மோசமடைந்து நகருக்குள் நுழைந்து முற்றிலும் நாசமாக்கிவிடலாம் என்று கணந்தோறும் அலர்ட் செய்திகள் வந்து, இப்போதுதான் மூச்சுவிட்டுக்கொள்ள சிக்னல் கொடுத்திருக்கிறார்கள். ஒருவாறாக மழை குறைந்திருக்கிறது. இம்முறை வரலாறு காணாத மழை வெள்ளம்...

Read More
கல்வி

பைஜுஸ்: சரியும் கல்விக் கோட்டை

‘குளிர்காலத்தின் ஆழங்களில்தான், யாராலும் வெல்ல முடியாத ஒரு கோடை எனக்குள் இருப்பதை நான் கண்டு கொண்டேன்’ ஆல்பர்ட் காம்யூ வின் மிகப் பிரபலமான வாசகம் இது. பைஜுஸ் நிறுவனத் தலைவர் பைஜூ ரவீந்திரன், தன் ஊழியர்களுக்குச் சென்ற செப்டம்பர் மாதத்தில் விடுத்த செய்தியில் இவ்வாசகம் இடம்பெற்றிருந்தது. இப்போது...

Read More
சமூகம்

வீட்டிலிருந்தே ஏமாறுவது எப்படி?

‘வீட்டில் உட்கார்ந்தபடி சம்பாதிக்கலாம். உங்களிடம் அடிப்படை ஆங்கில அறிவும் ஒரு திறன்பேசியும் இருந்தால் போதும். எந்த முதலீடும் தேவையில்லை. வயதோ, கல்வித் தகுதியோ, இனமோ, இடமோ எதுவுமே தடை இல்லை. தினமும் சிலமணி நேரங்களை மட்டும் செலவிட்டு ரூபாய் ஆயிரம் முதல் ஐயாயிரம் வரை இலகுவாகப் பணம் ஈட்டலாம்.’ சில...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!